
# vijaaiswamiji # bairavafoundation # bairavapeedam கால பைரவ ஹோமம் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் 15 திதிகள் வீதம் முப்பது திதிகள் வருகின்றன. இந்த திதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உகந்த தினங்களாக இருக்கிறது. அந்த வகையில் எட்டாவதாக வருகின்ற திதி அஷ்டமி திதி ஆகும். வளர்பிறை காலங்களில் வருகின்ற அஷ்டமி வளர்பிறை அஷ்டமி என்றும் , தேய்பிறை காலத்தில் வருகின்ற அஷ்டமி தேய்பிறை அஷ்டமி எனவும் அழைக்கப்படுகிறது. இதில் தேய்பிறை அஷ்டமி தினம் சிவபெருமானின் அம்சமான பைரவர் மூர்த்தி வழிபாட்டிற்குரிய ஒரு சிறந்த தினமாக இருக்கிறது. அந்த பைரவ மூர்த்தியின் அருளைப் பெற கால பைரவ ஹோமம் செய்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். சிவபெருமானின் வடிவத்தில் இருந்து தோன்றியவர் காவல் தெய்வமான பைரவர் மூர்த்தியாவார். மொத்தம் 64 வகையான பைரவர்கள் தோன்றினாலும் , எட்டுவகையான அவர்கள் மட்டுமே மக்களால் அதிகம் வழிபடப்படுகின்றனர். அவர்களில் ஒருவர் தான் மக்களுக்கு வாழ்வில் நன்மைகளை ஏற்படுத்தி , அவர்களின் தோஷங்களைப் போக்கி கா...