மறைந்து போன அபிஷேக முறைகள்!!! 

உங்கள் இஷ்ட தெய்வம் சிவலிங்கமாக இருந்தால் பின் வரும் பொருட்களால் அடிக்கடி அபிஷேகம் செய்ய முயலுங்கள்!1.ருத்ராட்சங்கள் 108 வாங்கிக் கொள்ளுங்கள்;ஐந்து முக ருத்ராட்சங்கள் சுலபமாக கிடைக்கும்;அதைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வந்தால்,மனிதர்கள் மீதான பந்த பாசம் குறையும்;கூடவே ஈசன் மீது பாசம் அதிகரிக்கும்;


2.சந்தனாதித் தைலத்தினால் அபிஷேகம் செய்து வந்தால்,குழந்தை இன்மை குறை நீங்கிவிடும்;
3.சாம்பிராணித் தைலத்தினால் அபிஷேகம் செய்து வந்தால்,பல பிறவிகளில் நாம் செய்த கர்மவினைகள் கரையத் துவங்கும்;
சந்தனாதித் தைலமும்,சாம்பிராணித் தைலமும் கடைகளில் கிடைப்பவை முழு தரம் வாய்ந்தவை அல்ல; உங்கள் நட்பு வட்டத்தில் இருக்கும் அனுபவம் வாய்ந்த சித்த வைத்தியர் மூலமாக தயார் செய்யவும்;
ஊருக்கு வெளியே வெட்டவெளியில் பாழடைந்து இருக்கும் சிவலிங்கத்திற்கு நீங்களும் அபிஷேகம் செய்யலாம்; அப்படிச் செய்யும் போது,ஒரு சல்லடை வாங்கிக் கொள்ளுங்கள்; அதன் மீது,சிறிது தரமான விபூதியும்,வில்வ இலைகளையும் போட்டு,அதன் மீது 108 ஐந்து முக ருத்ராட்சங்களையும் போட்டு அபிஷேகம் செய்யலாம்;
அபிஷேகம் செய்யும் போது ஆண்கள் கண்டிப்பாக மேலாடை அணிந்து இருக்கக்கூடாது;
அமாவாசை, திருவாதிரை, திங்கட்கிழமை வரும் சிவராத்திரி அல்லது பிரதோஷம் அன்று செய்தால் 1000 கோடி மடங்கு சிவகடாட்சம் கிட்டும் என்பதை மறக்காதீர்கள்:சந்தனாதித் தைலம் மற்றும் சாம்பிராணித் தைலம் கொண்டு சிவலிங்கத்திற்கு மட்டும் அபிஷேகம் செய்யலாம் என்று எண்ணாதீர்கள்;
எல்லாவிதமான தெய்வீக சிலைகளுக்கும் அபிஷேகம் செய்யலாம்; விநாயகர், முருகக் கடவுள், விஷ்ணு, சிவன், அம்பாள், காவல் தெய்வங்கள் ,குல தெய்வம், ஜீவ சமாதி மஹான்கள் என்று அனைத்து தெய்வீக சிலைகளுக்கும் அபிஷேகம் செய்யலாம்;
ஒரு லிட்டர் தைலத்தில் இருந்து ஒரு முறை அபிஷேகம் செய்ய 50 மிலி முதல் 100 மிலி பயன்படுத்தினால் போதும்; விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.#அபிஷேகமுறைகள்

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :