விஜய் சுவாமிஜியின் ஆன்மீகப் பணி ================================== உலகிலேயே முதல் முறையாக ஒருவரின் வலது காலின் பெருவிரலில் உள்ள ரேகையைக் கொண்டு அவரின் வாழ்வின் அத்தனை விஷயங்களையும் தெளிவாக விளக்குகிறார். ஈரோடு மாவட்டம் அவல் பூந்துறையைச் சேர்ந்த விஜய் சுவாமிஜி. கால் பெருவிரல் ரேகை குறித்து அவர் கூறியதாவது: இந்த 21 ம் நூற்றாண்டில் நாம் என்னதான் விஞ்ஞானத்தில் வளர்ந்தாலும், சந்திர மண்டலம் செல்லும் விஞ்ஞானியும் தனது இஷ்டதெய்வத்தை வணங்கிய பிறகே தனது விண்வெளிப் பயணத்தை துவங்குகிறார். அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பத்தில் பல அரிய சாதனை நாம் புரிந்தாலும் ஒவ்வொரு மனிதனையும் எல்லாவற்றையும் மீறிய சக்தியே ஆட்டுவிக்கிறது. மாபெரும் வெற்றி அடைந்த ஒவ்வொரு தன்னடக்கம் உள்ள மனிதனும் சொல்லும் முதல் சொல் என்னை இந்த நிலைக்கு உயர்த்திய கடவுளுக்கு நன்றி! என்றுதான். எனவே நாம் அனைவருக்கும் மனிதனை மீறிய சக்தி உள்ளது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். எனவே ஜோதிடம் என்பதும் உண்மையாகிறது. ஒருவரின் பூர்வ ஜென்மம், கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம், அவரின் பழக்க வழக்கங்கள், அவருக்கு சாதகமான தொழில் எது,...