உத்திரட்டாதிநட்சத்திரத்தில், பிறந்தவர்கள் என்ன படிக்கலாம்?
உத்திரட்டாதியில் பிறந்தவர்கள், வாழ்க்கையின் இருவேறு துருவங்களையும் பால்யத்திலேயே பார்த்து விடுவதால் பக்குவம் பெற்றவர்களாக இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தை குருவும் சனியும் சேர்ந்து ஆட்சி செய்கின்றன. வாக்கு வன்மை உள்ளவர்களாக இவர்கள் விளங்குவார்கள். முதல் பாதத்தில் பிறந்தவர்களை சூரியன் ஆட்சி செய்கிறார். கறாராகப் பேசும் இவர்களை, நீக்கு போக்கு தெரியாதவர்கள் என சிறிய வயதிலேயே சொல்வார்கள்.
பிறந்தவுடனே நடைபெறும் சனி தசை சவாலாகவே இருக்கும். அதன்பிறகும் 17 வயது வரை சவாலாகத்தான் இருக்கும். வேலை மாற்றத்தால் தந்தையை அலைய வைக்கும். இதனால் பள்ளி மாறிப் படிக்க நேரும். படிப்பில் பெற்றோருக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டு, பத்தாம் வகுப்பில் சுமாரான மதிப்பெண் பெறுவார்கள். அறிவியல், ஆங்கிலம் இரண்டிலும் எப்போதும் நல்ல மதிப்பெண்கள் எடுப்பார்கள்.
18 வயதிலிருந்து வாழ்க்கை அப்படியே மாறும்.
மேலும் படிக்க :http://goo.gl/JJDTM5
ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :
நான்முகன் திருமால் பூசைசெய் லிங்கம் தூயசொல் புகழ்பெரும் பேரெழில் லிங்கம் பிறவிப் பெருந்துயர் போக்கிடும் லிங்கம் வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம் காமனை எரித்த பேரருள் லிங்கம் ராவணன் கர்வம் அடக்கிய லிங்கம் வழிவழி முனிவர்கள் வழிபடும் லிங்கம் வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம் திவ்யமனம் பல கமழ்கின்ற லிங்கம் சித்தம் தெளிவிக்கும் சித்தர்கள் லிங்கம் தேவரும் அசுரரும் வணங்கிடும் லிங்கம் வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம் படம் எடுத்தாடும் பாம்பணி லிங்கம் கனகமின் நவமணிகள் ஒளித்திடும் லிங்கம் தட்சனின் யாகத்தை அழித்திட்ட லிங்கம் வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம் குங்குமம் சந்தனம் பொலிந்திடும் லிங்கம் பங்கய மலர்களை சூடிடும் லிங்கம் வந்ததோர் பாவத்தை போக்கிடும் லிங்கம் வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம் அமர கணங்கள் போற்றிடும் லிங்கம் அன்பர்கள் பக்தியை ஏற்றிடும் லிங்கம் கதிரவன் கோடி சுடர்மிகு லிங்கம் வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம் சிற்றிதழ் மலரினை சூட்டிடும் லிங்கம் எல்லா பிறப்பிற்கும் காரண லிங்கம் அஷ்ட தரித்திரம் அகற்றிடும் லிங்கம் வணக்கம் ஏற்ற சதாசிவ லிங்கம் சுரரவர் குருவிடம் தொழுதிடும் லிங்கம் நிரந்தரம் வானத்து மலர்...
Comments
Post a Comment