கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்?
ஊரின் கடைக்கோடியில் வசிப்பவனும் தரிசித்து புண்ணியம் தேட வேண்டும் என்பதே இந்த சொற்றொடருக்கான பொருள். இறப்புத் தீட்டினால் ஆலயத்திற்குள் வர இயலாதோர், பணிச்சுமையின் காரணமாக உண்டாகும் நேரமின்மையால் அவதிப்படுவோர், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் பயணிப்போர் உள்பட கோடானகோடி ஆன்மிக அன்பர்கள் அனைவரும் தரிசிப்பதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டதே ராஜகோபுரங்கள். ஊரின் எல்லைக்குள் நுழையும்போதே அந்த ஊரில் அமையப்பெற்ற ஆலயத்தின் கோபுரம் நம் கண்ணில் படும் போது நம்மையும் அறியாமல் நமக்குள் ஒருவித பக்தி உணர்வு தோன்றுகிறது. கைகள் தானாக கன்னத்தில் போட்டுக் கொள்கிறது.மேலும் படிக்க : goo.gl/Et1dK1
Comments
Post a Comment