சித்ரா பவுர்ணமி பாவம் போக்கும் சித்ரகுப்தன் வழிபாடு !!
சித்ரா பவுர்ணமி பாவம் போக்கும் சித்ரகுப்தன் வழிபாடு !!
சித்ரா பவுர்ணமி நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவார்கள். சித்திரை நட்சத்திரம் பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் முன்பின் வருவதால் அந்த மாதத்திற்கு சித்திரை மாதம் எனப் பெயர். சித்திரை மாதத்தில் பவுர்ணமி அன்று சிவபெருமாள்- பார்வதியால் உருவாக்கப்பட்டவர் தான் சித்திரைகுப்தன். மனிதர்கள் செய்யும் பாவ, புண்ணிய கணக்குகளை எழுதபடைக்கப்பட்டவர் சித்திர குப்தனை வேண்டிக் கொண்டு பெரும் பாலும் பெண்களே விரதம் மேற் கொள்கின்றனர். சித்ரா பவுர்ணமி தினத்தில் சித்தர குப்தனைப் போல் மாக்கோலம் போட்டு ஏடு எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து பொங்கலிட்டு வழிபடுவர்.
பாவங்களிலிருந்து விடுபடவும் நரகத்திற்கு போகாமல் இருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர். இரவு நேரத்தில் சித்தரபுத்திர நாயனார் கதையும் சொல்வதுண்டு திருவண்ணாமலையிலும் காஞ்சிபுரத்திலும், சித்திரகுப்தனுக்கத் தனியாக ஒரு கோயில் உள்ளது. சித்ராபவுர்ணமி தினத்தில் பூஜையும், புறப்பாடும் உற்சவமும் நடந்து வருகிறது. ஆதி நாளிலிருந்தே தமிழர் கொண்டாடும் திருவிழாக்களில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி நடைபெறும் சித்திரை திருவிழா தனிச்சிறப்புடையது. தென்னாட்டு கோயில்களில் குறிப்பிடத்தக்க மதுரை கோயிலில் அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். சித்ராபவுர்ணமி அன்று இங்கு தரிசனம் செய்தால் செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம்! அதுமட்டுமல்லாமல் அரவாணிகள் (திருநங்கைகள்) கொண்டாடும் கூத்தாண்டவர் திருவிழாவும் சித்ரா பவுர்ணமி அன்று தான் நடக்கிறது. குற்றாலம் செண்பகாதேவி அம்மனுக்கு சிறப்பு பூஜை வழிபாடும் நடக்கும். இதில் கலந்து கொள்ள தென் மாவட்ட பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்படும் காட்சியைக் காண கண்கோடி வேண்டுமே..
சித்ரா பவுர்ணமி நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவார்கள். சித்திரை நட்சத்திரம் பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் முன்பின் வருவதால் அந்த மாதத்திற்கு சித்திரை மாதம் எனப் பெயர். சித்திரை மாதத்தில் பவுர்ணமி அன்று சிவபெருமாள்- பார்வதியால் உருவாக்கப்பட்டவர் தான் சித்திரைகுப்தன். மனிதர்கள் செய்யும் பாவ, புண்ணிய கணக்குகளை எழுதபடைக்கப்பட்டவர் சித்திர குப்தனை வேண்டிக் கொண்டு பெரும் பாலும் பெண்களே விரதம் மேற் கொள்கின்றனர். சித்ரா பவுர்ணமி தினத்தில் சித்தர குப்தனைப் போல் மாக்கோலம் போட்டு ஏடு எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து பொங்கலிட்டு வழிபடுவர்.
பாவங்களிலிருந்து விடுபடவும் நரகத்திற்கு போகாமல் இருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர். இரவு நேரத்தில் சித்தரபுத்திர நாயனார் கதையும் சொல்வதுண்டு திருவண்ணாமலையிலும் காஞ்சிபுரத்திலும், சித்திரகுப்தனுக்கத் தனியாக ஒரு கோயில் உள்ளது. சித்ராபவுர்ணமி தினத்தில் பூஜையும், புறப்பாடும் உற்சவமும் நடந்து வருகிறது. ஆதி நாளிலிருந்தே தமிழர் கொண்டாடும் திருவிழாக்களில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி நடைபெறும் சித்திரை திருவிழா தனிச்சிறப்புடையது. தென்னாட்டு கோயில்களில் குறிப்பிடத்தக்க மதுரை கோயிலில் அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். சித்ராபவுர்ணமி அன்று இங்கு தரிசனம் செய்தால் செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம்! அதுமட்டுமல்லாமல் அரவாணிகள் (திருநங்கைகள்) கொண்டாடும் கூத்தாண்டவர் திருவிழாவும் சித்ரா பவுர்ணமி அன்று தான் நடக்கிறது. குற்றாலம் செண்பகாதேவி அம்மனுக்கு சிறப்பு பூஜை வழிபாடும் நடக்கும். இதில் கலந்து கொள்ள தென் மாவட்ட பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்படும் காட்சியைக் காண கண்கோடி வேண்டுமே..
Comments
Post a Comment