“குரு துதி”-சீரானவாழ்விற்கு- தினமும்/வியாழக்கிழமை :
குணமிகு வியாழக் குருபகவானே
மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்
ப்ரகஸ்திவ் யாழ பரகுரு நேசா
க்ரகதோஷமின்றிக் கடாக்ஷீத் அருள்வாய்
“குரு”-சீரான வாழ்விற்கு- தினமும்/வியாழக்கிழமை.
மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க்கு அரசன் மந்திரி
நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக்கு அதிபனாகி
நிறைதனம் சிவிகை மண்ணில் நீடு போகத்தை நல்கும்
இறையவன் குரு வியாழன் இருமலர்ப் பாதம் போற்றி!
“குரு துதி”- வாழ்வில் வளம் பெற- தட்சிணாமூர்த்தி சன்னதியில்- தினமும் / வியாழக் கிழமை.
குருவும், பிரகஸ்பதியும், ஜீவனும், ஆச்சார்யனும், புத்திமான்களுள் சிறந்தவனும், வாக்கிற்கு ஈஸ்வரனும், நீண்ட தாடி, மீசை உள்ளவனும், பீதாம்பரம் தரித்தவருமான உம்மை வணங்குகின்றேன். அமிர்தமயமான பார்வையுள்ளவனும், கிரகங்களுக்குத் தலைவனும், கிரகங்களின் பீடையைப் போக்குகிறவனும், கருணைப் பார்வை உள்ளவனும், அழகிய உருவம் கொண்டவனும், தேவர்களால் பூஜிக்கத் தகுந்தவனுமான குருவே உன்னை வணங்குகின்றேன்.
தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் ஆசார்யரும், தங்க நிறமுள்ளவரும், மூன்று உலகங்களிலும் வணங்கப்படுபவருமான குருபகவானை வணங்குகின்றேன்.
“குருகீர்த்தனை”-முத்துசாமி தீட்சிதர்- தினமும்/ வியாழக் கிழமை -கோளின் அனுக்கிரகம்-சகல நன்மைகள்.
பிரும்மனுக்கு பிறந்தவரும், தாரையின் கணவருமான பிருஹஸ்பதியே உன்னை வணங்குகின்றேன்!
மிகவும் பலம் வாய்ந்தவரும், வாக்குகளுக்கு அதிபதியும், அழகான தனுர், மீன ராசிகளுக்கு அதிபரும், இந்திரன் முதலானோர்களால் போற்றப்படும் ஆக்ருதியை உடையவரும், விஷ்னு முதலியவர்களால் புகழப்படும் மிகுந்த அறிவாளியான குரு பிரஹஸ்பதியே நான் உன்னை வணங்குகின்றேன்!
தேவகுரு, வஜ்ரதாரி, நல்ல அழகர், மூவுலகிற்கும் குரு, கிழத்தன்மையில்லாதவர். கோபமில்லாதவர். கசனின் தந்தை, தன்னை அண்டியவர்களுக்கு கற்பக விருஷம் போன்றவர். பரமசிவன், குரு, குஹன் ஆகியோரின் மகிழ்ச்சிக்கு ஆளானவராகிய குருவே நான் உன்னை வணங்குகின்றேன்!
புத்ர பாக்யத்தைக் கொடுப்பவர். எளியோரின் பந்து, பரா முதலிய நான்கு வாக்குகளின் லக்ஷணத்தைப் பிரகாசிக்கச் செய்பவர். கருணைக்கடல். சுத்தமானவர். குறையற்ற நீதிசாஸ்திரத்தை இயற்றியவர். தடங்கலில்லாதவர். உலகத்தை ஆட்சி செய்பவர். களங்கமற்றவர். உலகைக் காப்பவர். நிர்க்குணஸ்வரூபி. வேள்விகளின் பயனை கொடுப்பவராகிய குரு பிரகஸ்பதியே நான் உன்னை வணங்குகின்றேன்!
“குரு கவசம்”- துன்பம் நீங்க, வெற்றி பெற- தினமும்/ வியாழக் கிழமை.
சீரியன் மனத்துள் வேண்டும்
சித்தி தந்து அளித்துச் செய்யும்
பாரியல் கருமம் கூட்டிப்
பரவு மெய்ஞான வாழ்வு
மேரியல் செல்வப் பேறும்
யாவையும் ஒருங்கு நல்கும்
தெரியல் அறிஞன் தேவர்
தேசிகன் திருத்தாள் போற்றி!
அரும் பிரஸ்கபதி பேர்
ஆண்டகை சென்னி காக்க!
வந்திரு நெற்றி காக்க!
வானவர் குரவன் கன்னம்
விரும்பினன் காக்க! நாட்டம்
வேண்டுவ தருவோன் காக்க!
பருங்குமிழ் பொருவு நாசி
பண்ணவர் அரசன் காக்க!
பாட்டு அமர் செவ்வாய் வேத
பாரகன் காக்க! துண்டம்
கூட்டு முற்றறிவன் காக்க!
குலவரைப் புயம் இரண்டும்
வேட்டமர் சுகம் தந்து ஆள்வோன்
விரும்பினன் காக்க! செங்கை
வாட்டும் வச்சிரம் கைக்கொள்ளும்
வான்வன் வழாது காக்க!
பருவரை பொருவு மார்பம்
பயிலுங்கீட்பதி புரக்க!
விருதனம் வாக்கு வல்லோன்
என்றும் வந்து எய்திக் காக்க
வருசுகம் நல்கும் நாதன்
வயங்கு எழில் வயிறு காக்க!
பொருவரு நீதி வல்லோன்
பொற்பு உரு நாபி காக்க!
எங்கும் சென்று அளிக்கும் ஈசன்
எழிற்கடி புரக்க! ஊருத்
தங்கு புண்ணியன் புரக்க!
சங்க மெய்ஞானம் ஈயும்
புங்கவன் புரக்க! பாதம்
புகல் உலகெல்லாமாகும்
அங்கணன் புரக்க! மேனி
அமர் குருப் புரத்து காக்க!
காலையும் உச்சிப் போதும்
கதிரவன் குடபான் மேவு
மாலையும் வானோர் போற்ற
வருகுரு கவசம் என்னும்
நூலை அன்போடு உரைக்கும்
நுண்ணியன் வேட்டாங்கு எய்திச்
சோலை அம் தரு விண்ணாட்டுச்
சுரரையும் வெற்றி கொள்ளும்!
குருதிசை தோஷங்கள் விலக தினமும் 11முறை
ஓம் தட்சிணா மூர்த்தியே வித்மஹே
த்யா நஸ்தாய தீமஹி
தந்நோ தீச ப்பிரசோயாத்
மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்
ப்ரகஸ்திவ் யாழ பரகுரு நேசா
க்ரகதோஷமின்றிக் கடாக்ஷீத் அருள்வாய்
“குரு”-சீரான வாழ்விற்கு- தினமும்/வியாழக்கிழமை.
மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க்கு அரசன் மந்திரி
நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக்கு அதிபனாகி
நிறைதனம் சிவிகை மண்ணில் நீடு போகத்தை நல்கும்
இறையவன் குரு வியாழன் இருமலர்ப் பாதம் போற்றி!
“குரு துதி”- வாழ்வில் வளம் பெற- தட்சிணாமூர்த்தி சன்னதியில்- தினமும் / வியாழக் கிழமை.
குருவும், பிரகஸ்பதியும், ஜீவனும், ஆச்சார்யனும், புத்திமான்களுள் சிறந்தவனும், வாக்கிற்கு ஈஸ்வரனும், நீண்ட தாடி, மீசை உள்ளவனும், பீதாம்பரம் தரித்தவருமான உம்மை வணங்குகின்றேன். அமிர்தமயமான பார்வையுள்ளவனும், கிரகங்களுக்குத் தலைவனும், கிரகங்களின் பீடையைப் போக்குகிறவனும், கருணைப் பார்வை உள்ளவனும், அழகிய உருவம் கொண்டவனும், தேவர்களால் பூஜிக்கத் தகுந்தவனுமான குருவே உன்னை வணங்குகின்றேன்.
தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் ஆசார்யரும், தங்க நிறமுள்ளவரும், மூன்று உலகங்களிலும் வணங்கப்படுபவருமான குருபகவானை வணங்குகின்றேன்.
“குருகீர்த்தனை”-முத்துசாமி தீட்சிதர்- தினமும்/ வியாழக் கிழமை -கோளின் அனுக்கிரகம்-சகல நன்மைகள்.
பிரும்மனுக்கு பிறந்தவரும், தாரையின் கணவருமான பிருஹஸ்பதியே உன்னை வணங்குகின்றேன்!
மிகவும் பலம் வாய்ந்தவரும், வாக்குகளுக்கு அதிபதியும், அழகான தனுர், மீன ராசிகளுக்கு அதிபரும், இந்திரன் முதலானோர்களால் போற்றப்படும் ஆக்ருதியை உடையவரும், விஷ்னு முதலியவர்களால் புகழப்படும் மிகுந்த அறிவாளியான குரு பிரஹஸ்பதியே நான் உன்னை வணங்குகின்றேன்!
தேவகுரு, வஜ்ரதாரி, நல்ல அழகர், மூவுலகிற்கும் குரு, கிழத்தன்மையில்லாதவர். கோபமில்லாதவர். கசனின் தந்தை, தன்னை அண்டியவர்களுக்கு கற்பக விருஷம் போன்றவர். பரமசிவன், குரு, குஹன் ஆகியோரின் மகிழ்ச்சிக்கு ஆளானவராகிய குருவே நான் உன்னை வணங்குகின்றேன்!
புத்ர பாக்யத்தைக் கொடுப்பவர். எளியோரின் பந்து, பரா முதலிய நான்கு வாக்குகளின் லக்ஷணத்தைப் பிரகாசிக்கச் செய்பவர். கருணைக்கடல். சுத்தமானவர். குறையற்ற நீதிசாஸ்திரத்தை இயற்றியவர். தடங்கலில்லாதவர். உலகத்தை ஆட்சி செய்பவர். களங்கமற்றவர். உலகைக் காப்பவர். நிர்க்குணஸ்வரூபி. வேள்விகளின் பயனை கொடுப்பவராகிய குரு பிரகஸ்பதியே நான் உன்னை வணங்குகின்றேன்!
“குரு கவசம்”- துன்பம் நீங்க, வெற்றி பெற- தினமும்/ வியாழக் கிழமை.
சீரியன் மனத்துள் வேண்டும்
சித்தி தந்து அளித்துச் செய்யும்
பாரியல் கருமம் கூட்டிப்
பரவு மெய்ஞான வாழ்வு
மேரியல் செல்வப் பேறும்
யாவையும் ஒருங்கு நல்கும்
தெரியல் அறிஞன் தேவர்
தேசிகன் திருத்தாள் போற்றி!
அரும் பிரஸ்கபதி பேர்
ஆண்டகை சென்னி காக்க!
வந்திரு நெற்றி காக்க!
வானவர் குரவன் கன்னம்
விரும்பினன் காக்க! நாட்டம்
வேண்டுவ தருவோன் காக்க!
பருங்குமிழ் பொருவு நாசி
பண்ணவர் அரசன் காக்க!
பாட்டு அமர் செவ்வாய் வேத
பாரகன் காக்க! துண்டம்
கூட்டு முற்றறிவன் காக்க!
குலவரைப் புயம் இரண்டும்
வேட்டமர் சுகம் தந்து ஆள்வோன்
விரும்பினன் காக்க! செங்கை
வாட்டும் வச்சிரம் கைக்கொள்ளும்
வான்வன் வழாது காக்க!
பருவரை பொருவு மார்பம்
பயிலுங்கீட்பதி புரக்க!
விருதனம் வாக்கு வல்லோன்
என்றும் வந்து எய்திக் காக்க
வருசுகம் நல்கும் நாதன்
வயங்கு எழில் வயிறு காக்க!
பொருவரு நீதி வல்லோன்
பொற்பு உரு நாபி காக்க!
எங்கும் சென்று அளிக்கும் ஈசன்
எழிற்கடி புரக்க! ஊருத்
தங்கு புண்ணியன் புரக்க!
சங்க மெய்ஞானம் ஈயும்
புங்கவன் புரக்க! பாதம்
புகல் உலகெல்லாமாகும்
அங்கணன் புரக்க! மேனி
அமர் குருப் புரத்து காக்க!
காலையும் உச்சிப் போதும்
கதிரவன் குடபான் மேவு
மாலையும் வானோர் போற்ற
வருகுரு கவசம் என்னும்
நூலை அன்போடு உரைக்கும்
நுண்ணியன் வேட்டாங்கு எய்திச்
சோலை அம் தரு விண்ணாட்டுச்
சுரரையும் வெற்றி கொள்ளும்!
குருதிசை தோஷங்கள் விலக தினமும் 11முறை
ஓம் தட்சிணா மூர்த்தியே வித்மஹே
த்யா நஸ்தாய தீமஹி
தந்நோ தீச ப்பிரசோயாத்
Comments
Post a Comment