இன்று ஆடி முதல் வெள்ளி!!(20.07.2018) :



ஆடிவெள்ளி முதலாம் நாளாகிய இன்று ஆலயம் சென்று துர்க்கை அம்மனை தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகவும் .. அனைத்து சௌபாக்கியங்களும் தங்கள் இல்லம் தேடிவர அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
துர்க்காயை ச தீமஹி ! 
தந்நோ தேவீ ப்ரசோதயாத் !!
எத்தனை வெள்ளிகிழமைகள் வந்தாலும் .. ஆடிவெள்ளிக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு .. ஆலயங்களில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் இறைவியின் திருக்கோலத்தைக்காண 
பக்தர்கள் கூட்டம் அலைமோதும் .. விரதமிருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடிவந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை .. எனவேதான் “ கோடி நன்மை தரும் ஆடிவெள்ளி ” அன்று தேடிச்சென்று வழிபடவேண்டிய ஆலயம் அம்பிகைக்குரிய ஆலயமாகும் ..
அதுமட்டுமல்ல திருமகளை வழிபடுவதன் மூலமும் செல்வநிலை உயரும் .. எட்டுவகை லக்ஷ்மிக்கும் இனிய விழா எடுப்பது ஆடிமாதமாகும் .. கிழமைகளில் சுக்ரவாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும் ..
துள்ளித்திரியும் சிங்கத்தில் ஏறி பவனிவரும் தூயவளாம் அம்பிகை .. வெள்ளிக்கிழமை அன்று வழிபட்டால் நல்லகாரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும் என்பதை அனுபவத்தில் காணலாம் ..
தமிழ்மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு .. சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமானஆடிமாதம்இறைவியைநாடிச்சென்றவர்களுக்கெல்லாம் கோடி .. கோடியாய் நற்பலன்கள் கொடுக்கும் மாதமாகக் கருதப்படுகின்றது ..காரணம் சந்திரன்வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதாகும் ..எனவே ! ஆடிவெள்ளியன்று மாலைநேரத்தில் அம்பிகையை .. ஆதிபராசக்தியை புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்துசேரும் ..
இன்றோடு துயர் விலக .. இனிய தனலக்ஷ்மியே ! மன்றாடிக்கேட்கின்றேன் ! வருவாய் இதுசமயம் ! என்று பாடுங்கள் .. லக்ஷ்மி இல்லம் தேடிவருவாள் .. நம் வாழ்க்கையில் அமைதி கிடைக்கவும் .. ஆனந்தம் வந்து சேரவும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் உன்னதமான வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள் .. இனி வருடம் முழுவதும் வசந்தமே !

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

பரிஹாரங்க பைரவர் பூஜை