திருமுறை பாடுவதன் பலன்கள் !!
இறையுறவில் திளைத்து,இறையுணர்வில் கலந்து
தன்னையிழந்த நிலையில்,தன்னை இயக்கும் இறையே தன்னுளிருந்து,தானும் அவனுமாக வெளிப்பட்டு பாடியதே திருமுறைகள்....
தன்னலம் கருதா அருளாளர்கள் பிறர் நலம் வேண்டியும் ,
அவர்களுக்குள் எழுந்த உணர்வின் வெளிப்பாட்டையும் திருமுறைகளாக பாடியுள்ளனர் !
நாமும் திருமுறை பாடவேண்டும் என்ற எண்ணம் மேலோங்க ,அந்த பாடல்களை கேட்கும்போது நம்முள் நிகழும் ஓர் சொல்லமுடியா உணர்வே திருமுறை நாடி இட்டுசெல்கிறது !
கேட்டு கேட்டு ! நாமும் பாடுவோம் என்று புத்தகம் தேடி !
அந்த பாடலோடு படித்து ! அக்கால தமிழ் இக்காலம் உணர உணர !ஓர் பற்றும் ஏற்பட்டு !அந்த பாடல்கள் பொருளை நமக்கு உணர்ந்த வண்ணம் உணர்ந்து !இன்னும் படிக்க ஆரம்பித்த நாம் பாடவும் தொடங்கி தயக்கம் நீங்கி !பாடுவதே பாடச்செய்வதே இறைவனின் ஈர்ப்பு ..!
அப்படி பாடும்போது ,அந்த சிவஉணர்வு மேலோங்க ! மேலோங்க !எங்கு பாடுகிறோம் ! எப்படி படுகிறோம் !!
யாரெல்லாம் நம்மை சுற்றி இருக்கிறார்கள் என்ற உணர்வற்று !!
உங்களுக்கும் இறைவனுக்குமான ஓர் அணுக்கம் பெருக ! நாவும் தழுதழுக்க !கண்ணீர் பெருக !
உங்கள் உணர்வின் வெளிப்பாடு உங்களையறியாது ,
உங்களை சுற்றியிருக்கும் அனைத்தின் உள்ளும் ஊடுருவி ,
அவர்கள் சிந்தை செயல் எல்லாம் அவர்கள் அறியாதே இறைவனிடம் ஈர்ப்புக்கு இட்டுவர செய்யும் !
ஓர் அற்புதம் நிதர்சமாக திருமுறைகளுக்கு உண்டு
சிவ உணர்வில் திளைக்கும் ஆன்மாக்கள்
புலன் அறிவு மாய்ந்து போய் !மெய்யறிவு வெளிப்பட்டு !
அதுவே நம்மை ஆட்கொண்டு ! நாமே நம்மைவிட்டு விலகி ,
அவனே இடம்பெறும் அற்புதத்தை அனுபவிக்கவே
அவனிடமே திருமுறைகள் இட்டுசெல்கிறது !
உணர்வில் ஒன்றவே ,உணர்வானவனோடு உணர்வற்று இருக்க
இட்டு செல்லும் வழிகளில் திருமுறைகளும் எளிய வழி !
திருமுறைகள் பாடிய அருளாளர்களை போற்றும் போது ,
அவர்கள் அந்த திருமுறை வெளிப்பாட்டால் அனுபவித்த உணர்வில்,ஓர் துளியில் துளியாவது நம்முளிருந்து வெளிப்படுவதே சிறப்பு.
தன்னையிழந்த நிலையில்,தன்னை இயக்கும் இறையே தன்னுளிருந்து,தானும் அவனுமாக வெளிப்பட்டு பாடியதே திருமுறைகள்....
தன்னலம் கருதா அருளாளர்கள் பிறர் நலம் வேண்டியும் ,
அவர்களுக்குள் எழுந்த உணர்வின் வெளிப்பாட்டையும் திருமுறைகளாக பாடியுள்ளனர் !
நாமும் திருமுறை பாடவேண்டும் என்ற எண்ணம் மேலோங்க ,அந்த பாடல்களை கேட்கும்போது நம்முள் நிகழும் ஓர் சொல்லமுடியா உணர்வே திருமுறை நாடி இட்டுசெல்கிறது !
கேட்டு கேட்டு ! நாமும் பாடுவோம் என்று புத்தகம் தேடி !
அந்த பாடலோடு படித்து ! அக்கால தமிழ் இக்காலம் உணர உணர !ஓர் பற்றும் ஏற்பட்டு !அந்த பாடல்கள் பொருளை நமக்கு உணர்ந்த வண்ணம் உணர்ந்து !இன்னும் படிக்க ஆரம்பித்த நாம் பாடவும் தொடங்கி தயக்கம் நீங்கி !பாடுவதே பாடச்செய்வதே இறைவனின் ஈர்ப்பு ..!
அப்படி பாடும்போது ,அந்த சிவஉணர்வு மேலோங்க ! மேலோங்க !எங்கு பாடுகிறோம் ! எப்படி படுகிறோம் !!
யாரெல்லாம் நம்மை சுற்றி இருக்கிறார்கள் என்ற உணர்வற்று !!
உங்களுக்கும் இறைவனுக்குமான ஓர் அணுக்கம் பெருக ! நாவும் தழுதழுக்க !கண்ணீர் பெருக !
உங்கள் உணர்வின் வெளிப்பாடு உங்களையறியாது ,
உங்களை சுற்றியிருக்கும் அனைத்தின் உள்ளும் ஊடுருவி ,
அவர்கள் சிந்தை செயல் எல்லாம் அவர்கள் அறியாதே இறைவனிடம் ஈர்ப்புக்கு இட்டுவர செய்யும் !
ஓர் அற்புதம் நிதர்சமாக திருமுறைகளுக்கு உண்டு
சிவ உணர்வில் திளைக்கும் ஆன்மாக்கள்
புலன் அறிவு மாய்ந்து போய் !மெய்யறிவு வெளிப்பட்டு !
அதுவே நம்மை ஆட்கொண்டு ! நாமே நம்மைவிட்டு விலகி ,
அவனே இடம்பெறும் அற்புதத்தை அனுபவிக்கவே
அவனிடமே திருமுறைகள் இட்டுசெல்கிறது !
உணர்வில் ஒன்றவே ,உணர்வானவனோடு உணர்வற்று இருக்க
இட்டு செல்லும் வழிகளில் திருமுறைகளும் எளிய வழி !
திருமுறைகள் பாடிய அருளாளர்களை போற்றும் போது ,
அவர்கள் அந்த திருமுறை வெளிப்பாட்டால் அனுபவித்த உணர்வில்,ஓர் துளியில் துளியாவது நம்முளிருந்து வெளிப்படுவதே சிறப்பு.
Comments
Post a Comment