நம் வாழ்வின் நோக்கம் என்ன?


நம் வாழ்க்கையில் எவ்ளோ இன்பம்,துன்பம், சுகம், துக்கம், சண்டை, சச்சரவு, நேசம், பாசம், அடி தடி, கருணை, காதல், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், என்று இவை எல்லாம் எதற்காக?

நமக்கு முன்னால் எவ்வளவோ பேர் பிறந்து, வளர்ந்து , இறந்தும் போனார்கள். அவர்கள் செய்ததுதான் என்ன? சாதித்தது என்ன? நாம் என்ன சாதிக்கப் போகிறோம்? அப்படியே சாதித்தாலும் அதனால் என்ன ஆகி விடப் போகிறது?

நாம் ஒரு புதிதாக ஒரு இயந்திரத்தைப் பார்க்கிறோம்.  நமக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது என்றும் வைத்துக் கொள்வோம். அதைப் பார்த்தால் ஏதோ ஒரு இயந்திரம் போல இருக்கிறது. ஆனால், அது என்ன செய்யும், எப்படி செய்யும் என்றெல்லாம் நமக்குத் தெரியாது.

எப்படி கண்டு பிடிப்பது?

அந்த இயந்திரத்தை  செய்தவனை பார்த்து கேட்கலாம் "இது என்ன மாதிரி இயந்திரம், இது எப்படி வேலை செய்யும்? எதற்காக இதை செய்தாய்?" என்று கேட்கலாம்.

ஒருவேளை, அவன் இது எதுக்காக செய்தேன் என்று எனக்குத் தெரியாது.சும்மா பொழுது போகல. என்னத்தையோ சேர்த்து வைத்தேன். அவ்வளவுதான். ஒரு பெரிய நோக்கம் எல்லாம் இல்லை  என்று சொன்னால்  நாம் என்ன செய்வோம்? சரி தான், இந்த இயந்திரம் ஏதோ வேலை செய்கிறது. அதற்கென்று ஒரு நோக்கமும் கிடையாது என்று நினைத்துக் கொள்வோம் அல்லவா ?

அது போல, நம் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்று நம்மை படைத்தவனை போய் அபிராமி பட்டர் கேட்டார் ... அதற்கு அவன் சொன்னானாம் "பெரிய அர்த்தம் எல்லாம் இல்லை. சும்மா விளையாட்டுக்கு செய்தேன் அவ்வளவுதான் என்று.
வாழ்க்கையின் நோக்கம் வாழ்வது மட்டும்தான். வேறு பெரிய நோக்கம் எல்லாம் கிடையாது. போட்டு மண்டையை உடைத்துக் கொள்ளாதீர்கள். வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக் கொள்ளுங்கள்.

ஏத்தும் அடியவர்,ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம்,கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல்
அணங்கே மணம் நாறும் நின்தாளிணைக்குகென்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு  நகையுடைத்தே.

ஒருவன் வேலை வெட்டி இல்லாமல்,அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தால், இவனை பாரேன்
வேலை வெட்டி இல்லாமல் சும்மா ஊர் சுத்திக்கிட்டு திரிகிறான் என்று சொல்வார்கள். திரிதல் என்றால் ஒரு நோக்கமும் இல்லாமல் காரியம் செய்தல்.

இறைவன், இந்த உலகை படைத்தும், காத்தும், அழித்தும் செய்யும் செய்கைக்கு ஒரு நோக்கமும் இல்லை.

"படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவராம்"

அவனுக்கே ஒரு நோக்கமும் இல்லை என்றால், உங்களுக்கு எங்கிருந்து ஒரு நோக்கம் வருகிறது? விட்டுத் தள்ளுங்கள்.

நீங்களும் வாழ்க்கையை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்ளுங்கள். எதற்கு இவ்வளவு தீவிரம், சீரியஸ், பதட்டம், மன அழுத்தம், போட்டி, பொறாமை, ஏமாற்றம் இவை எல்லாம்?

ஓம் நமசிவாய..


Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :