🙏🙏ஆனி அமாவாசை...🙏🙏
இன்று!
ஸ்ரீ விகாரி வருடம், ஆனி மாதம் 17ம் தேதி, 2.7.19 செவ்வாய்கிழமை அமாவாசை.
அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம் தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம்.
அமாவாசை நல்ல நாளா?
இன்று!
ஸ்ரீ விகாரி வருடம், ஆனி மாதம் 17ம் தேதி, 2.7.19 செவ்வாய்கிழமை அமாவாசை.
அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம் தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம்.
அமாவாசை நல்ல நாளா?
அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது அதாவது ஒன்றையொன்று சந்தித்துக்கொள்கிறது அன்று முன்னோர்கள் புண்ணியலோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணிக்கிறார்கள் அவர்களது வாரிசுகளான நாம் துவங்கும் காரியங்களை கரிசனத்தோடு பார்க்கிறார்கள், ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள்.
எனவே பிதுர் தேவதைகள் என்ற முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கு மரியாதை செய்து அமாவாசை தினத்தில் புதிய காரியங்களை துவங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும் அன்று நற்காரியங்களை செய்வதனால் தீங்கு ஏற்படாது. முன்னோர்கள் பூமிக்கு வரும் தினம் என்பதனால் அது நல்லநாளே.
இந்துக்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி,மாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது. முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும். அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது. அமாவாசையன்று மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும்.
அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும் என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமாவாசையன்று விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா். ஜோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள். அனேகமானவர்கள் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனா்.
சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.
அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.
அமாவாசை நாளில் எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற விபரம் வருமாறு:-
அன்னம் - வறுமையும், கடனும் நீங்கும்
துணி - ஆயுள் அதிகமாகும்
தேன் - புத்திர பாக்கியம் உண்டாகும்
தீபம் - கண்பார்வை தெளிவாகும்
அரிசி - பாவங்களை போக்கும்
நெய் - நோய்களை போக்கும்
பால் - துக்கம் நீங்கும்
தயிர் - இந்திரிய சுகம் பெருகும்
பழங்கள் - புத்தியும், சித்தியும் உண்டாகும்
தங்கம் - குடும்ப தோஷங்களை நீக்கும்
வெள்ளி - மனக்கவலை நீங்கும்
பசு - ரிஷி, தேவர், பிதுர் கடன்கள் அகலும்
தேங்காய் - நினைத்த காரியம் வெற்றியாகும்
நெல்லிக்கனி - ஞானம் உண்டாகும்
துணி - ஆயுள் அதிகமாகும்
தேன் - புத்திர பாக்கியம் உண்டாகும்
தீபம் - கண்பார்வை தெளிவாகும்
அரிசி - பாவங்களை போக்கும்
நெய் - நோய்களை போக்கும்
பால் - துக்கம் நீங்கும்
தயிர் - இந்திரிய சுகம் பெருகும்
பழங்கள் - புத்தியும், சித்தியும் உண்டாகும்
தங்கம் - குடும்ப தோஷங்களை நீக்கும்
வெள்ளி - மனக்கவலை நீங்கும்
பசு - ரிஷி, தேவர், பிதுர் கடன்கள் அகலும்
தேங்காய் - நினைத்த காரியம் வெற்றியாகும்
நெல்லிக்கனி - ஞானம் உண்டாகும்
பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் தானத்துக்குரிய எல்லா பலன்களையும் பெற முடியும். கன்றுடன் கூடிய பசுவிற்கு தானம் அளித்தல் மிகவும் நல்லது.
விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.
செல் :+91 9443351497 , 9842499006.
Comments
Post a Comment