அனுமனை வணங்குவதால் கிடைக்கும் பயன் :

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனூமத் ஸ்மரணாத் பவேத்
அனுமனை வணங்குவதால் கிடைக்கும் பயன்களைப் பேசும் இந்த சுலோகம் பிரபலமானது.
இந்த சுலோகத்தைப் பொருளுணர்ந்து சொன்னாலே போதும் ஒருவித மனவலிமை பெருகுவதை உணரமுடியும்.
நல்லவை செய்வதற்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் அனுமனை நினைப்பதால் கிடைக்கும் என்று இந்த சுலோகம் கூறுகிறது.
புத்திர் பலம் – அறிவில் வலிமை
யசோ – புகழ்
தைர்யம் – துணிவு
நிர்பயத்வம் – பயமின்மை
அரோகதா – நோயின்மை
அஜாட்யம் – ஊக்கம்
வாக் படுத்வம் – பேச்சு வலிமை
ச – இவையெல்லாம்
ஹனூமத் ஸ்மரணாத் – அனுமனை நினைப்பதால்
பவேத் – பிறக்கின்றன.
அறிவுக்கூர்மை, புகழ், துணிவு, பயமின்மை, நோயின்மை, ஊக்கம், பேச்சுத்திறன் போன்றவை அனுமனை நினைத்தவுடன் கிடைக்கின்றன!

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :