பைரவர் வரலாறு கூறும் 500 ஆண்டுகள் பழைமையான பெரண்டி தலம் :

“பைரவர் காவல் தெய்வமாதலால் ஆரம்பகாலங்களில் வாழ்ந்த மக்களிடையே ஓர் அச்சம் காணப்பட்டது. இரவில் நடமாடுவதற்குக்கூடப் பயப்பட்டனர். அந்த மக்கள் அதிகமான நேரங்களில் “பைரவயா எனவோ’ (பைரவர் வாறார்) என சிங்களத்தில் பேசிக்கொள்வதுண்டு’ என்கிறார் பிரதேசவாசி ஒருவர்.
இந்தப் பெயர் மருவி பெரண்டி கோயில் எனத் தற்போது அழைக்கப்படலாம் எனவும் சிந்திக்கத் தோன்றுகிறது.
“மாயாதுன்னை மன்னனின் மகனான முதலாம் இராஜசிங்கன் வீரம் பொருந்தியவனாக விளங்கினான். ஓர் இராச்சியம் அமைக்குப்போது எந்தெந்தப் பகுதியில் என்னென்ன இருக்க வேண்டும் என்பதையும் அறிந்துவைத்திருந்தான்.
அதன்படி சீதாவாக்கை இராச்சியத்துக்கு வடக்காக காவல் தெய்வம் அமைக்க வேண்டும் எனத் தீர்மானித்தான். சிவனுடைய உருவங்களில் ஒன்றான பைரவருக்குக் கோயில் கட்டி வழிபட்டான். ஏழு அடுக்கு மாடிகளைக் கொண்டதாக அந்தக் கோயில் கட்டப்பட்டதாகவும் எமது மூதாதையர்கள் சொல்வார்கள்’

கோயிலின் பிரதான வாயில் உட்பட நான்கு வாயில்கள் காணப்படுகின்றன. உள்வீதியுடன் வெளிப்பிரகாரம் கற்களால் கட்டப்பட்டிருக்கின்றன.

கருவறைத் தளம் உட்பட அனைத்துப் பகுதிகளுமே மிகச் சிறந்த சிற்பவேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த கோவில் பெரண்டி கோயில்  என்பது இலங்கை, மேல் மாகாணத்தில், அவிசாவளை நகரிலிருந்து கிட்டத்தட்ட 3 கி.மீ. தொலைவில் தலுதுவ எனும் கிராமத்தில் இடிபாடுகளுடன் காணப்படும் 500 ஆண்டுகள் பழமையான ஒரு இந்து கோயிலாகும்.


Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :