Posts

Showing posts from August, 2018

ஸ்ரீ பைரவர் அஷ்டோத்திர சத நாமாவளி!!

Image
01. ஓம் பைரவாய நமஹ 02. ஓம் பூத நாதாய நமஹ 03. ஓம் பூதாத்மனே நமஹ 04. ஓம் பூதபாவநாய நமஹ 05. ஓம் க் சேத்ர தாய நமஹ 06. ஓம் க்சேத்ரக்ஞாய நமஹ 07. ஓம் க்சேத்ர பாலாய நமஹ 08. ஓம் சத்ரியாய நமஹ 09. ஓம் விராஜே நமஹ 10. ஓம் மாசான வாசினே நமஹ 11. ஓம் மாம்சாசினே நமஹ 12. ஓம் ஸர்ப்பராஜயே நமஹ 13. ஓம் ஸ்மார்ந்தக்ருதே நமஹ 14. ஓம் ரக்தபாய நமஹ 15. ஓம் பானபாய நமஹ 16. ஓம் சித்தாய நமஹ 17. ஓம் சித்திதாய நமஹ 18. ஓம் சித்த சேவிதாய நமஹ 19. ஓம் கங்காளாய நமஹ 20. ஓம் காலசமானாய நமஹ 21. ஓம் கலாய நமஹ 22. ஓம் காஷ்டாய நமஹ 23. ஓம் தநவே நமஹ 24. ஓம் தவயே நமஹ 25. ஓம் த்ரிநேத்ரே நமஹ 26. ஓம் பகுநேத்ரே நமஹ 27. ஓம் பிங்களலோசனாய நமஹ 28. ஓம் சூலபாணயே நமஹ 29. ஓம் கட்க பாணயே நமஹ 30. ஓம் கங்காளிநே நமஹ 31. ஓம் தூம்ரலோசனாய நமஹ 32. ஓம் அபீரவவே நமஹ 33. ஓம் பைரவாய நமஹ 34. ஓம் நாதாய நமஹ 35. ஓம் பூதபாய நமஹ 36. ஓம் யோகினி பதயே நமஹ 37. ஓம் தநதாய நமஹ 38. ஓம் தனஹாரிணே நமஹ 39. ஓம் தனவதே நமஹ 40. ஓம் ப்ரீதி பாவனாய நமஹ 41. ஓம் நாகஹாராய நமஹ 42. ஓம் நாக பாசாய நமஹ 43. ஓம் வ்யோமகேசாய நமஹ 44. ஓம் கபால ப்ருதே நமஹ 45. ஓம் காலாய நமஹ 46. ஓம் கபால மாலிநே நமஹ 47...

இன்றைய ராசிபலன்கள்(01.09.2018) :

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க :goo.gl/1DEcrS

இன்றைய நாள் எப்படி?01.09.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம், ஆவணி மாதம் 16ம் தேதி,துல்ஹஜ் 20ம் தேதி,*01.09.18 சனிக்கிழமை,தேய்பிறை,சஷ்டி திதி இரவு 7.09 வரை;அதன்பின் சப்தமி திதி,பரணி நட்சத்திரம் இரவு 7.26 வரை;அதன்பின் கார்த்திகை நட்சத்திரம்,சித்த-அமிர்த யோகம்.சந்திராஷ்டமம் - சித்திரை,சுவாதி. மேலும் படிக்க :goo.gl/XCiXM6

கிருஷ்ணரின் கையில் உள்ள சுதர்சன சக்கரதின் மகிமை!!

Image
கிருஷ்ணரின் கையில் உள்ள சுதர்சன சக்கரம் மகிமை வாய்ந்தது அதன் ஆற்றல் அளவிட முடியாதது.சுதர்ஷன் என்றால் மங்களகரமானது என்று பொருள் `சக்ரா' என்றால் எப்பொழுதும் செயல்பாட்டில் இருப்பது என்று அர்த்தம். எல்லா ஆயுதங்களைக் காட்டிலும் இது ஒன்றே எப்பொழுதும் சுழன்று கொண்டிருக்கிறது. சாதாரணமாக `சுதர்சன சக்கரம்' கிருஷ்ணனின் சுண்டு விரலில் காணப்படும் ஆனால். விஷ்ணுவோ ஆள்காட்டி விரலில் வைத்துக் கொண்டிருக்கிறார். யார் மீதாவது ஏவும் பொழுது கிருஷ்ணனும், ஆள்காட்டி விரலில் இருந்து தான் ஏவுகிறார். எதிரிகளை அழித்த பின் சுதர்சனசக்கரம் மறுபடியும் அதன் இடத்திற்கே திரும்பி விடுகிறது. சுதர்சன சக்கரம் ஏவப்பட்ட பிறகும் ஏவி விட்டவனின் கட்டளைக்கு அது கீழ்ப்படிந்து நடக்கிறது. எவ்வித அழுத்தமும் இல்லாத சூன்யப்பாதையில் செல்வதால் சுதர்சன சக்கரத்தால் எந்த இடத்திற்கும் கண்மூடி கண் திறக்கும் நேரத்திற்குள் செல்ல முடிகிறது. ஏதாவது தடை எதிர்பட்டால். சுதர்சன சக்கரத்திரன் வேகம் அதிகரிக்கிறது. இதை `ரன்ஸகதி' என்பர். சுழலும் போது அது சத்தம் எழுப்புவதில்லை. அதனுடைய வடிவம் எத்தகையது என்றால். சின்னஞ்சிறு துளசி தளத்த...

இன்றைய ராசிபலன்கள்(31.08.2018) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க :goo.gl/VQ3qcU

இன்றைய நாள் எப்படி?31.08.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம், ஆவணி மாதம் 15ம் தேதி,துல்ஹஜ் 19ம் தேதி,*31.08.18 வெள்ளிக்கிழமை,தேய்பிறை,பஞ்சமி திதி இரவு 8.08 வரை;அதன்பின் சஷ்டி திதி,அசுவினி நட்சத்திரம் இரவு 7.41 வரை;அதன்பின் பரணி நட்சத்திரம்,அமிர்த-சித்த யோகம்.சந்திராஷ்டமம் - அஸ்தம்,சித்திரை. மேலும் படிக்க : goo.gl/JT76iw

வளம் தரும் பைரவர் மந்திரங்கள் !!

Image
பைரவர் மூல மந்திரம் : சுவானத்வஜாய வித்மஹோ சூலஹஸ்தய தீ மஹி தந்தோ பைரவ ப்ரசோதயாத் ஸ்ரீ பைரவர் ஸ்லோகம் : 1.ஸ்ரீ பைரவர் காயத்ரி மந்திரங்கள்: ஒம் ஷ்வானத் வஜாய வித்மஹே ! சூல ஹஸ்தாய தீமஹி ! தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !! ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே ஸ்வாந வாஹாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத் ஓம் திகம்பராய வித்மஹே தீர்கதிஷணாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத் 2.ஸ்ரீ பைரவ த்யானம்: ரக்த ஜுவால ஜடாதரம் சசிதரம் ரக்தாங்க தேஜோமயம் ஹஸ்தே சூலகபால பாச டமரும் லோகஸ்ய ரக்ஷா கரம் நிர்வாணம் ஸுநவாகனம் திரிநயனஞ்ச அனந்த கோலாகலம் வந்தே பூத பிசாச நாதவடுகம் ஷேத்ரஷ்ய பாலம்சிவம் பைரவ காயத்ரி : "ஷ்வானத் விஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி தன்னோ பைரவ ப்ரச்சோதயாத்!" ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் தியான சுலோகம் : காங்கேய பாத்ரம் டமருகம் திரிசுலம் வரம் கரை ஸமசந்ததம் த்ரிநேத்ரம் தேவயாயுதம் தப்தஸவர்ண வர்ஷணம் ஸ்வர்ணா கர்ஷணம் பைரவம் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் துதி : “ஸ்வர்ண கால பைரவம் த்ரிசுலயுக்த பாணி நம் வேத ருப ஸாரமேல் ஸம்யுதம் மஹேச்வரம் ஸ்மாச்ரி தேஷ ஸர்வதா ஸமஸ்தவஸ்து தாயினம் மகீந்திரி வம்ச பூ...

இன்று சங்கடஹர சதுர்த்தி!(30.08.2018) :

Image
சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப் புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே. விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஒவ்வொரு மாதமும் வரும் "சங்கடஹர சதுர்த்தி" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். "ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும். ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்க துவங்க வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை "மகா சங்கடஹர சதுர்த்தி...

இன்றைய ராசிபலன்கள்(30.8.2018) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/S5yrWF

இன்றைய நாள் எப்படி?30.08.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம், ஆவணி மாதம் 14ம் தேதி,துல்ஹஜ் 18ம் தேதி,*30.08.18 வியாழக்கிழமை,தேய்பிறை,சதுர்த்தி திதி இரவு 8.41 வரை;அதன்பின் பஞ்சமி திதி,ரேவதி நட்சத்திரம் இரவு 7.28 வரை;அதன்பின் அசுவினி நட்சத்திரம்,சித்த-அமிர்த யோகம்.சந்திராஷ்டமம் - உத்திரம்,அஸ்தம். மேலும் படிக்க :goo.gl/Ss7cGg

சந்தோஷம் மற்றும் செல்வம் நிலைக்க வீட்டில் வைத்திருக்கக் கூடாதவைகள் :

Image
நீங்கள் என்ன தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும், அதற்கான பலன் கிடைப்பதில்லையா? வீட்டில் சந்தோஷமே இருப்பதில்லையா? அப்படியெனில், நீங்கள் உங்கள் வீட்டில் வைத்திருக்கக்கூடாத சிலவற்றை வைத்துள்ளீர்கள் என்று அர்த்தம். இங்கு வீட்டில் செல்வம் மற்றும் சந்தோஷம் நிலைத்திருக்க வைத்திருக்கக் கூடாதவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் வீட்டில் அவை இருந் தால், உடனே அவற்றை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துங்கள். சரி, இப்போது அவை என்னவென்று பார்ப்போம். துளசி செடி : துளசி ஓர் புனிதமான செடி. இது வீட்டில் அமைதியையும், செல்வத்தையும் ஈர்க்கும் செடி. ஆனால் அந்த துளசி செடி வீட்டின் தெற்கு மூலையில் இருந்தால், அதனால் மிகுந்த கஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது தெரியுமா? ஆகவே, வீட்டின் தெற்கு மூலையில் இருந்தால், உடனே அதை மாற்றுங்கள். காலணி அலமாரி : காலணி அலமாரியை வீட்டின் உள்ளே வைக்காதீர்கள். மாறாக, அதனை வீட்டின் வெளியே வையுங்கள். இல்லையெனில், அது வீட்டினுள் நல்ல சக்தியை நுழைய விடாமல் செய்யும். பாலை திறந்தே வைக்காதீர்கள் வீட்டில் பாலை எப்போதும் திறந்தே வைத்திருக்காதீர்கள். பால் மட்டுமின்றி, பால் பொருட்களையும் திறந...

இன்றைய ராசிபலன்கள்(29.08.2018) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க : goo.gl/p4eaQN

இன்றைய நாள் எப்படி?29.08.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம், ஆவணி மாதம் 13ம் தேதி,துல்ஹஜ் 17ம் தேதி,*29.08.18 புதன்கிழமை,தேய்பிறை,திரிதியை திதி இரவு 8.41 வரை;அதன்பின் சதுர்த்தி திதி,உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 6.46 வரை;அதன்பின் ரேவதி நட்சத்திரம்,சித்த-மரண யோகம்.சந்திராஷ்டமம் - பூரம்,உத்திரம். மேலும் படிக்க : goo.gl/GrtmGF

காலக்கணக்கர் காலபைரவர் :

Image
நவகிரகங்கள் காலச்சக்கரத்தின் ஆளுகைக் குட்பட்டு செயல்படுகின்றன. இக்காலச் சக்கரத்தை இயக்குபவரே காலபைரவர். அவரது ஆணைக்கு உட்பட்டே ஒவ்வொரு நொடியும் உருவாகி மறைகிறது. காலபைரவர் சிவனின் ஒரு அம்சம். வாஸ்து புருஷனுக்கு இவரே கடவுள். பரமேஸ்வரனுக்கு 64 திருமேனிகள் உள்ளதுபோலவே பைரவருக்கும் 64 உருவங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானவர்கள் எட்டு பைரவர்கள். இவர்களை அஷ்ட பைரவர்கள் என்பர். ஒவ்வொரு பைரவரிடமிருந்தும் எட்டு பைரவர்கள் தோன்றினர். இவர்களே அஷ்டாங்க பைரவர்கள் என்கின்ற 64 பேர். அஷ்ட பைரவர்- தேவி- வாகனம் 1. அசிதாங்க பைரவர்- பிரம்மி- அன்னம். 2. ருரு பைரவர்- மகேஸ்வரி- ரிஷபம்.   3. சண்ட பைரவர்- கௌமாரி- மயில். 4. குரோத பைரவர்- வைஷ்ணவி- கருடன். 5. உன்மத்த பைரவர்- வாராஹி- குதிரை. 6. காலபைரவர்- இந்திராணி- யானை. 7. பீஷண பைரவர்- சாமுண்டி- சிம்மம். 8. சம்ஹார பைரவர்- சண்டிகா- நாய். சுவானம் என்று சொல்லப்படும் நன்றிமிக்க நாய்தான் பைரவரின் வாகனம். இது காவலுக்கு ஏற்றது. எமதூதர்களைப் பார்க்கும் சக்தி இந்த நாய்க்கு உண்டு. சிவன் கோவில்களில் பைரவருக்கு அனுதினமும் காலை- மாலை பூஜையும், நைவேத்தியமும் உண்டு. ...

இன்றைய ராசிபலன்கள்(28.08.2018) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க : goo.gl/R8S8dK 

இன்றைய நாள் எப்படி?28.08.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம், ஆவணி மாதம் 12ம் தேதி,துல்ஹஜ் 16ம் தேதி,*28.08.18 செவ்வாய்க்கிழமை,தேய்பிறை,துவிதியை திதி இரவு 8.10 வரை;அதன்பின் திரிதியை திதி,பூரட்டாதி நட்சத்திரம் மாலை 3:52 வரை;அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம்,மரண-அமிர்த யோகம்.சந்திராஷ்டமம் - மகம்,பூரம். மேலும் படிக்க : goo.gl/BijHCn

இன்றைய ராசிபலன்கள்(27.08.2018) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க : goo.gl/h4AbbP

இன்றைய நாள் எப்படி?27.08.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! *ஸ்ரீவிளம்பி வருடம், ஆவணி மாதம் 11ம் தேதி,துல்ஹஜ் 15ம் தேதி,*27.08.18 திங்கட்கிழமை,தேய்பிறை,பிரதமை திதி இரவு 7:11 வரை;அதன்பின் துவிதியை திதி, சதயம் நட்சத்திரம் மதியம் 3:52 வரை;அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம்,சித்த-மரண-யோகம்.சந்திராஷ்டமம் - ஆயில்யம், மகம். மேலும் படிக்க : goo.gl/UdVBjN

பைரவர் வழிபாட்டின் பலன்கள் :

Image
ஞாயிற்றுக்கிழமை: இராகு காலத்தில் ருத்ராபிஷேகம் , வடை மாலைசாற்றி வழிபட்டால் திருமணப்பேறு கிடைக்கும் . கடன் வாங்கி வட்டியும் ,அசலும் கட்ட முடியாமல் தவிப்பவர்கள் ஞாயிறுகிழமை இராகு காலத்தில்ஸ்ரீ கால பைரவருக்கு முந்திரிப்பருப்பு மாலை கட்டி , புனுகு சாற்றி ,வெண்பொங்கல் நெய்வேத்தியம் இட்டு வழிபட்டு பிரார்த்தனை செய்தால் நலம்கிடைக்கும் .   திங்கட்கிழமை :   வில்வார்ச்சனை செய்திட சிவனருள்கிட்டும் .திங்கட்கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர்அபிஷேகம் செய்து சந்தனக் காப்பிட்டு புனுகு பூசி நந்தியாவட்டை மலர்மாலை அணிவித்து வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள்விலகும் . செவ்வாய்க்கிழமை: மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால்இழந்த பொருளை திரும்பப் பெறலாம் . புதன்கிழமை :   நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிட்டும் . வியாழக்கிழமை : விளக்கேற்றி வந்தால் ஏவல் , பில்லி , சூன்யம் விலகும். வெள்ளிக்கிழமை: மாலையில் வில்வ அர்ச்சனை செய்து வந்தால் செல்வப்பேறு கிடைக்கும் . சனிக்கிழமை:   சனிபகவானுக்கு குரு பைரவர் . ஆகவே சனிக்கிழமையன்றுஇவரை பிரத்தேயமாக வழிபடுவதால் அ...

இன்றைய ராசிபலன்கள்(25.8.2018) :

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/y8ddv9

இன்றைய நாள் எப்படி?25.08.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,ஆவணி மாதம் 9ம் தேதி,துல்ஹஜ் 13ம் தேதி.*25.08.18 சனிக்கிழமை,வளர்பிறை,சதுர்த்தசி திதி மதியம் 3.59 வரை;அதன்பின் பவுர்ணமி திதி,திருவோணம் நட்சத்திரம் காலை 11.24 வரை;அதன்பின் அவிட்டம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - புனர்பூசம்,பூசம். மேலும் படிக்க : goo.gl/aSdvfc

இன்றைய ராசிபலன்கள்(24.8.2018) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/1tSx2S 

இன்றைய நாள் எப்படி?24.08.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,ஆவணி மாதம் 8ம் தேதி,துல்ஹஜ் 12ம் தேதி.*24.08.18 வெள்ளிக்கிழமை,வளர்பிறை,திரையோதசி திதி மதியம் 2.02 வரை;அதன்பின் சதுர்த்தசி திதி,உத்திராடம் நட்சத்திரம் காலை 8.53 வரை;அதன்பின் திருவோணம் நட்சத்திரம்,சித்த-மரண யோகம்.சந்திராஷ்டமம் - புனர்பூசம். மேலும் படிக்க : goo.gl/QN3HYg

இன்று ஏகாதசி!!(22-08-18):

Image
ஏகாதசியை விட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் கூறுகின்றன. அதனால், ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்திற்கு தயாராக வேண்டும். அன்றைய தினம் துளசி இலைகளை பறிக்கக் கூடாது, அதனால், அதை முதல் நாளே பறித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள், பழங்களை நிவேதனம் செய்து சாப்பிடலாம். சிறிது பலகாரங்களையும் ஏற்றுக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் பகலில் தூங்கக் கூடாது. இரவில் கண்டிப்பாக பஜனை செய்ய வேண்டும். இது முடியாவிட்டால், விஷ்ணு பற்றிய நூல்களை படிக்கலாம். இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும், உடல் ஆரோக்கியமாகும், வீட்டில் செல்வம் பெருகும், சந்ததி வளரும் என்பது நம்பிக்கை. வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள், மறுநாள் துவாதசி அன்று "பாரனை" என்னும் விரதத்தை மேற் கொள்வார்கள். ஏகாதசி மரணமும், துவாதசி தகனமும் யோகிகளுக்கு கூட கிடைக்காது என்ற சொல் வழக்கில் இருந்தே இந்த விரதங்களின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம்.

இன்றைய ராசிபலன்கள்(22.8.2018) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க : goo.gl/M9ykMJ

இன்றைய நாள் எப்படி?22.08.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,ஆவணி மாதம் 6ம் தேதி,துல்ஹஜ் 9ம் தேதி. *22.08.18 புதன்கிழமை,வளர்பிறை,ஏகாதசி திதி காலை 10.14 வரை;அதன்பின் துவாதசி திதி,பூராடம் நட்சத்திரம் நாள் முழுவதும்;அதன்பின் உத்திராடம் நட்சத்திரம்,அமிர்த யோகம்.சந்திராஷ்டமம் - மிருகசீரிடம். மேலும் படிக்க : goo.gl/7K7f5h

பயனுள்ள ஆன்மீக தகவல்கள் :

Image
1 சுமங்கலிப் பெண்கள் ஸ்நானம் செய்யும் போது வெறும் தலையில் குளிக்கக் கூடாது. சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டுதான் தலை முழுக வேண்டும். 2 துளசி மாடத்திலிருந்து பூஜைக்கு வேண்டிய துளசியை ஒடிக்கக்கூடாது. துளசி மாடம் பூஜைக்குரியது. பூஜைத் தேவைக்கு வேண்டிய துளசியை தனியாக வேறு துளசிச் செடிகளில் இருந்து பறிக்க வேண்டும். 3 சுபகாரியங்களுக்கெல்லாம் முதல் தேவையான பொருள் மஞ்சள், மங்கல காரியங்களுக்கு சீட்டை எழுதும்போது முதலில் எழுதப்படுவது மஞ்சள்தான். 4 மஞ்சள் பூசிக்குளிப்பது சுமங்கலிகள் மரபு. மஞ்சள் பூசிக் குளித்துவர துர்நாற்றம், தூக்கமின்மை என்பன அற்றுப் போகும். முக வசீகரமுண்டாகும். 5 இல்லங்களில் காலை, மாலை மஞ்சள் நீர் தெளித்து வர லஷ்மி கடாட்சமுண்டாகும். * கணபதி, சூரியன், அம்பிகை, மஹாவிஷ்ணு, பரமசிவன் ஆகிய ஐந்து மூர்த்திகளையும் ஒரேயிடத்தில் வைத்துப் பூஜிப்பதே பஞ்சாயன பூஜையாகும். துர்நாற்றம், தூக்கமின்மை என்பன அற்றுப் போகும். முக வசீகரமுண்டாகும். 6 சூரியனால் உடலாரோக்கியம் பெற்று அம்பிகை ஆகிய தாயின் ஆசியால் கிடைக்கும் சிறந்த வாழ்வை அடைந்து விஷ்ணுவினால் இம்மையின்பம் பெற்று ச...

இன்றைய ராசிபலன்கள்(21.8.2018) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க : goo.gl/jkLmKw

இன்றைய நாள் எப்படி?21.08.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,ஆவணி மாதம் 5ம் தேதி,துல்ஹஜ் 9ம் தேதி. *21.08.18 செவ்வாய்க்கிழமை,வளர்பிறை,தசமி திதி காலை 8.38 வரை;அதன்பின் ஏகாதசி திதி,மூலம் நட்சத்திரம் இரவு 3.54 வரை;அதன்பின் பூராடம் நட்சத்திரம்,அமிர்த-சித்த யோகம்.சந்திராஷ்டமம் - ரோகிணி. மேலும் படிக்க : goo.gl/YvGDN8

அட அப்படியென்ன சிறப்பு இந்த ஆவணி மாதத்தில்...!

Image
தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை தொடங்கி பங்குனி வரை பல்வேறு விசேஷங்கள் வருவதுண்டு. அதில், ஒரு சில மாதங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. ஆடிப் போய் ஆவணி வந்தால் நன்மை கூடி வரும் என்பதைப் போல் ஆவணி மாதம் மிகச் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஆடியில் சில நிகழ்ச்சிகள் செய்ய மாட்டார்கள். ஆவணி தொடங்கியதும், உடனே அந்த நிகழ்ச்சியினை வைத்துவிடுவார்கள். ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம வீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர். ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் ஞாயிறு என்றாலே சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6.00 - 7.00 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும். ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர். தேகநலனுக்காக சூரிய நமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவ...

இன்றைய ராசிபலன்கள்(20.8.2018):

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க : goo.gl/WYqxWx

இன்றைய நாள் எப்படி?20.08.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,ஆவணி மாதம் 4ம் தேதி,துல்ஹஜ் 8ம் தேதி. *20.08.18 திங்கட்கிழமை,வளர்பிறை,நவமி திதி காலை 7.25 வரை; அதன்பின் தசமி திதி,கேட்டை நட்சத்திரம் இரவு 1.45 வரை; அதன்பின் மூலம் நட்சத்திரம்,சித்த-அமிர்த யோகம். சந்திராஷ்டமம் - கார்த்திகை,ரோகிணி.மேலும் படிக்க : goo.gl/WDwUbC

இன்று அஷ்டமி !!(18.08.2018):

Image
எல்லா சிவ ஆலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார். காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பார்த்த நித்யபூஜா விதி கூறுகிறது. ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும், இலுப்பை எண்ணை, விளக்கு எண்ணை, தேங்காய் எண்ணை, நல்லஎண்ணை, பசு நெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றலாம். ஒன்றிலிருந்து ஒன்றை ஏற்றாமல் தனித்தனி தீபமாக ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம். அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம், நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும். சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு...

இன்றைய ராசிபலன்கள்(18.08.2018):

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/zyXvUn

இன்றைய நாள் எப்படி?18.08.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,ஆவணி மாதம் 2ம் தேதி,துல்ஹஜ் 6ம் தேதி. *18.08.18 சனிக்கிழமை,வளர்பிறை,சப்தமி திதி காலை 6.18 வரை; அதன்பின் அஷ்டமி திதி,விசாகம் நட்சத்திரம் இரவு 10.43 வரை; அதன்பின் அனுஷம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - அசுவினி,பரணி.மேலும் படிக்க : goo.gl/FZK8kB

கணவன் மனைவி பிரச்னைகள் தீர பைரவர் வழிபாடு :

Image
புதன்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை காலை 6 முதல் 7 மணிக்குள் அல்லது மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் அல்லது இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும்.இந்த இரண்டு கிழமைகளும் செய்யக் கூடாது.ஏதாவது ஒரு கிழமையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, 8 வாரங்கள் இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும். நமது ஊரில் இருக்கும் சிவாலயத்தில் உள்ள காலபைரவருக்கு வில்வமாலை   அணிவிக்க வேண்டும்.நமது பெயர் மற்றும் நமது வாழ்க்கைத்துணை(கணவன் எனில் மனைவி, மனைவி எனில் கணவன்)பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்;அர்ச்சனை செய்தபின்னர்,பைரவர் 108 போற்றி அல்லது பைரவர் 1008 போற்றியை அவரது சன்னதியில் அமர்ந்து கொண்டு ஜபிக்க வேண்டும்.(வாய்விட்டுச் சொல்லக்கூடாது).

இன்றைய ராசிபலன்கள்(17.08.2018):

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/LzoSEh

இன்றைய நாள் எப்படி?17.08.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,ஆவணி மாதம் 1ம் தேதி,துல்ஹஜ் 5ம் தேதி. *17.08.18 வெள்ளிக்கிழமை,வளர்பிறை,சஷ்டி திதி காலை 6.34 வரை;அதன்பின் சப்தமி திதி,சுவாதி நட்சத்திரம் இரவு 9.56 வரை;அதன்பின் விசாகம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - ரேவதி,அசுவினி. மேலும் படிக்க : goo.gl/6ipRrp

பைரவ வழிபாடு செய்வதின் அவசியம் :

Image
12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே. தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார்.சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார்.சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே. தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன்,பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான்.தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி,மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும்,கால வர்த்தமான நிர்ணயப்படி(ஜோதிட ரீதியாக சனிப்பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார். அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப்பிரமாணம் பெற்றுக்கொண்டார். சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும்,அவர்கள்   பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் விரும்பினார். அதனால்தான் ,ஏழரை நாட்டுச்சனி,அஷ்டமச்சனி,ஜன் மச்சனியால் அவதிப்படுவோர் பைரவ வழிபாடு பண்ணுவதன் மூலம் அத்தொல்லை களிலிருந்து விடுபட முடியும்.  

இன்று சஷ்டி!(16.08.2018) :

Image
சஷ்டி விரதம் என்பது மிகப் பெரிய விரதம். திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. ஐஸ்வர்யத்தைக் தரக்கூடியது ஆறு (6) என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது. ஜோதிடத்தில் 6ஆம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார். திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடியவரும் சுக்கிரன்தான். எனவே, சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம். 16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப் பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு. இதன் காரணமாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறுவது தவறு. சஷ்டி விரத நாட்களில் சிரத்தையாக இருந்து விரதம் மேற்கொள்பவர்கள் அனைத்து சிறப்பையும் பெற முடியும் என்பதை உறுதியுடன் சொல்லலாம். என்னிடம் ஜாதகம் பார்க்க வரும் சிலருக்கு கூட சஷ்டி விரதம் இருக்க வலியுறுத்தியுள்ளேன். சஷ்டிக்கு முன்பாக திருச்செந்தூருக்கு சென்று அங்கேயே தங்கியிருந்து சூரியன் மறைவுக்கு பின்னர் சிறிதளவு சாப்பிட்டு விட்டு, இரவில் பால் மட்...

இன்றைய ராசிபலன்கள்(16.8.2018) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க : goo.gl/un5dFA 

இன்றைய நாள் எப்படி?16.08.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,ஆடி மாதம் 31ம் தேதி,துல்ஹஜ் 4ம் தேதி. *16.08.18 வியாழக்கிழமை,வளர்பிறை,பஞ்சமி திதி காலை 7.19 வரை;அதன்பின் சஷ்டி திதி,சித்திரை நட்சத்திரம் இரவு 9.38 வரை;அதன்பின் சுவாதி நட்சத்திரம்,சித்த-அமிர்த யோகம்.சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி,ரேவதி. மேலும் படிக்க : goo.gl/KfxPHh

ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு விரதம் இருப்பது எப்படி?

Image
வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும். தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போடுவது சிறந்தது. தேய்பிறை அஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்கள ை கொண்டு அர்ச்சித்து, வெள்ளை பூசணியில் நெய் தீபம் ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 தெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்து, வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும். இவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறலாம். நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திரு...

இன்றைய ராசிபலன்கள்(15.8.2018):

Image
புதன்கிழமை, மேலும் படிக்க : goo.gl/aF4UUm 

இன்றைய நாள் எப்படி?15.08.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,ஆடி மாதம் 30ம் தேதி,துல்ஹஜ் 1ம் தேதி. *15.08.18 புதன்கிழமை,வளர்பிறை,சதுர்த்தி திதி காலை 8.29 வரை;அதன்பின் பஞ்சமி திதி,அஸ்தம் நட்சத்திரம் இரவு 9.49 வரை;அதன்பின் சித்திரை நட்சத்திரம்,மரண-சித்த யோகம்.சந்திராஷ்டமம் - பூரட்டாதி,உத்திரட்டாதி. மேலும் படிக்க : goo.gl/ugtP6m

இன்று நாக சதுர்த்தி!!(14.08.2018) :

Image
நாக சதுர்த்தி மற்றும் கருடபஞ்சமி ஆகிய  இரண்டும், அடுத்தடுத்து வரும் இரட்டை விரதங்கள் ஆகும். ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் தொடங்கும் முதல் பண்டிகை இது. தக்ஷிணாயன புண்ணியகாலம் (ஆடி முதல் - மார்கழி) வரை இறை வழிபாட்டிற்கு உகந்த காலம். பெரும்பாலும் கோலாகலக் கொண்டாட்டங்களைத் தவிர்த்துவிட்டு, விரதங்கள், வழிபாடுகள் என மக்கள் தங்கள் மனங்களில் இறையுணர்வை ஏற்படுத்திக் கொள்ளும் மாதங்கள் இந்த ஆறு மாதங்கள். நாகசதுர்த்தி விரதம் தங்கள் கணவரின் நலனுக்காகவும் பிள்ளைகளின் நலனுக்காகவும் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் ஆகும். நாகசதுர்த்தி அன்று காலை விரதம் இருந்து, பாம்புப் புற்றுக்கு பால் ஊற்றி, துள்ளுமாவு படைத்து கணவர் மற்றும் பிள்ளைகளின் நலனுக்காக வேண்டிக் கொண்டு பிரார்த்தனை செய்வார்கள். அடுத்த நாள் வருவது கருட பஞ்சமி. இந்த விரதத்தின் பின்னணியில் அன்பு மயமான ஒரு வரலாறும் உண்டு. ஒரு வீட்டில் 7 சகோதரர்களுக்கு ஒரே ஒரு தங்கை. பெற்றோர் காலமாகிவிட்டதால், சகோதரர்கள்  அந்தத் தங்கையை கண் போல பார்த்துக்கொண்டார்கள். வயலில் வேலை செய்யும் சகோதரர்களுக்கு அவள் தினமும் மதியம் கஞ்சி எடுத்துச் செல்வா...

இன்றைய ராசிபலன்கள்(14.8.2018) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க :goo.gl/sajchW 

இன்றைய நாள் எப்படி?14.08.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,ஆடி மாதம் 29ம் தேதி,துல்ஹஜ் 2ம் தேதி. *14.08.18 செவ்வாய்க்கிழமை,வளர்பிறை,திரிதியை திதி காலை 10.03 வரை;அதன்பின் சதுர்த்தி திதி,உத்திரம் நட்சத்திரம் இரவு 10.23 வரை;அதன்பின் அஸ்தம் நட்சத்திரம்,அமிர்த-சித்த யோகம்.சந்திராஷ்டமம் - சதயம்,பூரட்டாதி. மேலும் படிக்க : goo.gl/p1zN9b

இன்று ஆடிப்பூரம்!! (13.08.2018) :

Image
ஆடி மாதத்தில் ‘பூரம்’ நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் தினமே ஆடிப்பூரம். இது அனைத்து அம்மனுக்கும் உரிய திருநாளாக போற்றப்படுகிறது. மனிதர்களை இன்னல்களில் இருந்து மீட்பதற்கு, உலகத்தை காக்கும் அன்னை  தோன்றிய நாளே ஆடிப்பூரம் என்று அழைக்கப்படுவதாக ஆன்மிக பெரியோர்கள் கூறுவதுண்டு. எனவே, இந்நாளில் அன்னை உலகிற்கு விஜயம் செய்து மக்களுக்கு அருள் புரிவார் என்று நம்பப்படுகிறது. ஆடிப்பூர தினத்தில் ஆண்டாள் பிறந்ததாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. ஆடி மாதம் சூரியன், கடக ராசியான சந்திரன் வீட்டிலும், சந்திரன், சூரியனின் ராசியான சிம்மத்திலும் இடம் பெயர்ந்த போது, நள வருடம், சுக்ல பட்சம், சதுர்த்தசி, பூர நட்சத்திரம் கூடிய சனிக்கிழமையன்று துளசி மாடத்தினருகில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவள் ஆண்டாள். ஆண்டாளின் இயற்பெயர் கோதை. வடமாநிலங்களில் ‘கோதாதேவி’ என்று அழைப்பர். ஆண்டாள் அவதரித்த திருத்தலமான திருவில்லிபுத்தூரை,  ‘கோதாதேவி அவதார ஸ்தலம்’ என்றும் அழைப்பதுண்டு. இதனால் ஆடிப்பூரத்தன்று திருவில்லிபுத்தூர் உள்ளிட்ட வைணவ கோயில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். வைணவ கோயில்களிலும் திருவாடிப்பூ...