💥💥புரட்டாசியில் பெருமாள் வழிபாட்டின் மகிமைகள் 💥💥
இன்று ஸ்ரீ விகாரி வருடம்,
புரட்டாசி மாதப்பிறப்பு ( 18/09/19 ).
* புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும்.
*எந்த பாவங்களையும் பொசுக்கவல்லது புரட்டாசியில் எம்பெருமானை நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபடுவது. தீபம் இருளை அகற்றி ஒளி அளிப்பது போல் தடைகள், பாவங்கள் அனைத்தும் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் அருளக்கூடிய புண்ணிய மாதமே புரட்டாசி.
* புரட்டாசி மாதத்தில் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும். திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன.
* திருப்பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் புரட்டாசி மாதம் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.
*புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும். விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது
* புரட்டாசிக்கு இருக்கும் முக்கியத்துவம், அது பித்ரு தேவதை வழிபாடு, இறை வழிபாடு, சக்தி வழிபாடு என அனைத்து அம்சங்களையும் அடக்கியிருக்கிறது என்பதே. பித்ருக்களை வழிபடும் மஹாளயம், பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் நவராத்திரி இவையும் சேர்ந்து புரட்டாசிக்குப் பெருமை சேர்க்கிறது.


* புரட்டாசி மாதத் திருவோணம், திருமலை மலையப்ப சுவாமி திருஅவதார திருநாளாக கொண்டாடப்படுகிறது. ‘‘திருவேங்கடமலையில் வாசம் செய்யும் சீனிவாசப் பெருமாளே நமஸ்காரம். அனைத்து மங்களங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களை எல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். திருமகள் வசிக்கும் அழகான திருமார்பை உடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம் போல நன்மைகளை பொழிபவரே, சீனிவாசா உமக்கு நமஸ்காரம்....’’ என்று மனம் உருக சொல்லி வழிபட வேண்டும். இந்த துதியை சொல்ல, சொல்ல சகல செல்வங்களும் எம்பெருமானின் கடாக்ஷம் வந்து சேரும்.
* சந்திர சகோதிரியான திருமகள் நவராத்திரியில் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு அலங்காரம் கண்டு மகிழக்கூடிய புண்ணிய மாதமே புரட்டாசி.
வந்தாய் போலே வாராதாய்
வாராதாய் போல் வருவானே
செந்தாமரைக் கண் செங்கனி வாய்
நால் தோள் அமுதே எனது உயிரே
சிந்தாமணிகள் பகர் அல்லைப்
பகல் செய் திருவேங்கடத்தானே
அந்தோ அடியேன் உன பாதம்
அகலகில்லேன் இறையுமே.
- நம்மாழ்வார்.
பொருள்: கைக்கு எட்டினாற்போலேயிருந்து எட்டாதவனே! எட்டாதவன் போலிருந்து எட்டி நிற்பவனே! செந்தாமரைபோன்ற திருக்கண்களையும், செங்கனி போன்ற திருப்பவளத்தையும் நான்கு திருத்தோள்களையுமுடைய பரமபோக்யனே! எனக்கு உயிரானவனே! சிறந்த ரத்னங்களின் ஒளியான இரவையும் பகலாக்குமிடமானது திருமலையில் வாழ்பவனே! ஐயோ! உனது திருவடிகளே அடிமைச்சுவடறிந்த நான் ஒரு க்ஷணகாலமும் பிரிந்திருக்க வல்லேனல்லேன்.
"திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்"
விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :