நெகட்டிவ் எனர்ஜியை பாஸிடிவாக மாற்றும் கல்உப்பு :
‘கண் திருஷ்டி பட்டிருக்கும். இரு சுத்தி போடுறேன்’ என்று கூறி பாட்டிகள் அம்மாக்கள் கல் உப்பை அவர்கள் உள்ளங்கையில் வைத்து சுத்தி போடுவார்கள்.
பகுத்தறிவு மற்றும் நாத்திகவாதிகளை பொருத்த வரையில் இவை வெறும் மூட நம்பிக்கை. ஆனால் இதில் விஞ்ஞானம் உள்ளது என்று நமது முன்னோர்களுக்கு தெரியும் ஆங்கில வழி கல்வி பயின்ற நமக்கு இதெல்லாம் தெரிந்து கொள்ள
முடியாது.
முடியாது.
மனிதனோட வாழ்வில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் பாஸிடிவ் எனர்ஜி மற்றும் நெகட்டிவ் எனர்ஜி மூலம் நடக்கிறது. நமது வாழ்வில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தால் நிச்சயம் நமக்கு நெகட்டிவாக தான் தோன்றும். நெகட்டிவ் எனர்ஜி தான் மேலோங்கும். இந்த நெகட்டிவ் எனர்ஜியை பாஸிடிவாக மாற்ற கல் உப்பால் முடியும். நெகட்டிவ் எனர்ஜியை அதால் வெளியேற்ற முடியும். பாஸிடிவ் எனர்ஜி நம்மில் அதிகரிக்கும் உடலில் ஒருவித வைப்ரேஷன் தோன்றும் அது நெகட்டிவ் எனர்ஜியை வெளியே அல்லது எதிராளியிடம் சேர்க்கும். அதனால் தான் கிரமங்களில் உப்பை மட்டும் இலவசமாக பெற மாட்டார்கள்.
சில கோயிகளில் உப்பு வாங்கி கொட்டுவதும், பாவம் போக்க கடலில் குளிப்பதும் நம்மில் உள்ள நெகட்டிவ் எனர்ஜியை வெளியேற்ற தான். நீங்களும் உங்கள் உள்ளங்கையில் கல் உப்பை வைத்து மடித்து கொண்டு மனதினால் பாஸிட்டிவாக ஏதேனும் நினைத்து கொள்ளுங்கள் நிச்சயம் வாழ்வில் மாற்றம் வரும்.
Comments
Post a Comment