மகாலட்சுமி வாசம் செய்யும்
இடங்கள்....
உலக வாழ்வில்
பொருளின்றி வாழ்வது நரகத்திற்கு ஒப்பாகும். செல்வத்தை அருளும் மகாலட்சுமியின்
கடைக்கண் பார்வைக்காக நாம் அனைவருமே ஏங்குகிறோம். அன்னை குடியிருக்கும் பொருட்களாக
சிலவற்றை ஆன்மிகத்தில் குறிப்பிட்டுள்ளனர் நம் முன்னோர்கள்.
அவை: மஞ்சள், பூர்ண கும்பம், குங்குமம், கோலம், வாழை, மாவிலை, சந்தனம், தோரணம், திருவிளக்கு, கண்ணாடி, வில்வம், நெல்லிக்காய், துளசி, கோமியம், தாமரை, சங்கு, ஸ்ரீ சூர்ணம், திருமண் ஆகும்.
அவை: மஞ்சள், பூர்ண கும்பம், குங்குமம், கோலம், வாழை, மாவிலை, சந்தனம், தோரணம், திருவிளக்கு, கண்ணாடி, வில்வம், நெல்லிக்காய், துளசி, கோமியம், தாமரை, சங்கு, ஸ்ரீ சூர்ணம், திருமண் ஆகும்.
மேலும் பசு, யானை போன்ற விலங்குகளிடமும், முதியவர்களிடமும், பொறுமையும் அன்பும் மிக்கவர்களிடமும், சுமங்கலிகள், பசுக்களை பராமரிப்பவர்கள், நல்ல புத்தி
கொண்டவர்கள், ஞானிகள் ஆகியோரிடமும்
லட்சுமி நிரந்தரமாக இருப்பதாக ஐதீகம்.
ஒருமுறை விஷ்ணு காமதேனுவை படைக்க எண்ணினார்.
ஒரு பசுவை வரவழைத்து அதை காமதேனுவாக மாற்ற எண்ணி அனைத்து தேவர்களையும் அழைத்து
அதன் உடலில் சென்று அமருமாறு கூறினார். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி அனைத்து
தேவர்களும் ஒரு பசுவின் உடலில் சென்று தங்கினர்.
தாமதமாக வந்த லஷ்மிதேவிக்கு பசுவின் எந்த
இடத்திலும் இடம் கிடைக்கவில்லை. ஆனாலும் பசுவின் உடலில் தான் அமர வேண்டும் என
தீர்மானித்து
விட்டதினால்
காலியாக இருந்த அதன் ஆசன வாயில் சென்று அமர்ந்து கொண்டாள். அந்தப் பசு காமதேனுவாக
மாறியது. அந்த பசு மூத்திரம் பெய்ய அது லஷ்மி தேவியின் உடலை தழுவிக் கொண்டு வந்தது.
ஆகவேதான் பசுவின் பின் புரத்தை தொட்டு வணங்கினால் லஷ்மி கடாஷம் கிடைக்கும் என்ற
ஐதீகம்
வந்தது’ எனக்
கூறினார்.
உள்ளங்கையில் லட்சுமி உள்ளாள். காலையில்
எழுந்ததும் கையைப் பார்க்க வேண்டும். கையை நம்பித்தான் வாழ்க்கையே இருக்கிறது.
கையால் உழைத்தால்தான் தனலட்சுமியைக் காண முடியும். கை என்றாலே சக்தி என்றுதான்
பொருள். அவர் பெரிய கை என்றால் அவர் செல்வமுடையவர் என்று பொருள்.
விளக்கின்றி பூஜையில்லை. எல்லாத்
தெய்வங்களையும் விளக்கொளியில் வழிபடலாம். ஆதலின் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதியாய்
ஆண்டவரைக் கண்டார். எல்லாத் தெய்வகங்களும் விளக்கில் இருப்பினும் விளக்கை
லட்சுமியாகக் கருதுவது நம் மரபு.
திருமகள் திருமாலின் மார்பில் உறைகிறாள்.
ஆதலின் திருவுறை மார்பன்-ஸ்ரீநிவாசன் என்று திருமாலுக்குப் பெயர். திருமகளின்
அருளைப் பெறத் திருமாலையும் வழிபட வேண்டும். திருமாலை விடுத்துத்
திருமகளை மட்டும் வணங்கக் கூடாது. திருமகளைப் புருஷாகாரம் என்பர். அடியாருக்கு
அருள்புரியும்படித் திருமாலை தூண்டுபவள் திருமகளே.
விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.
செல் :+91 9443351497 , 9842499006.
Comments
Post a Comment