கர்மவினைகளை அழிக்க உதவும் பைரவர் வழிபாடு

ஒவ்வொரு உயிரும் தம் கர்ம வினைகளை தொலைக்க பிறந்தவர்களே. இந்த பூமியானது ஒரு கர்ம பூமி.
இந்த கர்மவினைகள் இரண்டு. அவை நல்வினை மற்றும் தீவினை ஆகும். நல்வினை மற்றும் தீவினை இவற்றை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். இது தான் விதி என்று அழைக்கப்படுகிறது.
கர்மவினைகளை அழிக்க பல வழிகள் உண்டு. சிவ வழிபாடு கர்மா வினைகளை குறைக்க உதவும்.
தொடர்ச்சியான சிவ வழிபாடு என்பது மிகப் பெரிய செயல் ஆகும். அதற்கு தடைகளும், இடையூறுகளும் நமது கர்மவினைகளால் வரும்.
விதியை மதியால் வெல்லலாம் என்கிற வாக்கியத்தில் மறைமுகமாக விதியை வெல்ல சிவ வழிபாடு சிறந்தது என சொல்லப்பட்டுள்ளது.
மதி என்ற சொல் சந்திரனையும், அறிவையும் குறிக்கிறது. ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் மதி என்கிற சந்திரனின் பலம் நன்றாக இருந்தால் அவர் தம் அறிவின் துணை கொண்டு விதியை வெல்லுவார் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
மதி என்கிற சந்திரனை சூடிய கடவுள்கள் வழிபாடு நமது கர்மவினைகளை போக்கக்கூடியது. பிறைசூடிய தெய்வங்கள் சிவபெருமானை பிரதிபலிக்கும் தெய்வங்கள் ஆகும்.
அவ்வாறு இருக்கும் தெய்வங்கள் சிவபெருமானின் அம்சம் பொருந்தியவையே. சிவ வழிபாடு முழுமை பெற இரண்டு சிவ வடிவங்களின் அருள் மிகவும் தேவை.
அவை தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர்.
தட்சணாமூர்த்தி அமைதியே உருவான சிவ வடிவம்
பைரவர் சிவபெருமானின் கோபமே உருவான ருத்ர வடிவம்.
தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய சிவ வடிவங்களும் பிறையை சூடியவர்கள். இவர்களது தலையில் மூன்றாம் பிறை சந்திரனை காணலாம்.
இந்த இரண்டு சிவ வடிவங்களின் துணையின்றி சிவ வழிபாடு முழுமை பெறாது.
தட்சணாமூர்த்தி சிவபெருமானின் யோகவடிவம். இவரை தொடர்ந்து வழிபட ஞானமும், செல்வமும், வெற்றியும் உண்டாகும். நமது கர்மவினைகள் படிப்படியாக நீங்கும்.
கர்மவினைகளை தன் பார்வையாலே எரிக்கும் வல்லமை கொண்டவர் பைரவர். பைரவர்களுள் சொர்ணபைரவரே வீட்டில் வைத்து வழிபாடு செய்யத்தக்கவர். மற்ற அனைத்து பைரவ வடிவங்கள் கோவிலிலோ அல்லது காடுகளிலோ அல்லது மலைகளிலோ வைத்து வழிபடத்தக்கன.
பைரவரே நவக்கோள்களின் அதிபதி ஆவார். சிவ வழிபாட்டின் பலனை நமக்கு தருமாறு நவக்கோள்களுக்கு ஆணையிடும் தலைவரும் பைரவரே ஆவார்.
“ஓம் நமோ பகவதே தக்ஷ்ணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரஞ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா”
மேற்கண்ட மந்திரம் தட்சணாமூர்த்தியின் சிறப்பான மந்திரம் ஆகும்.
இதற்கு பெரிய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. மந்திரம் செபிக்கும் காலங்களில் அசைவம் ஒன்று மட்டும் சாப்பிடக்கூடாது.
மேற்கண்ட தட்சணாமூர்த்தியின் மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் 21 முறை சிவத்தலத்தில் உள்ள தட்சணாமூர்த்தி சந்நிதியில் செபிக்க வேண்டும்.
பின்பு வீடு வந்து இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் 108 முறை செபிக்க வேண்டும். பின்பு தினமும் 108 முறை அல்லது 54 முறை அல்லது 27 முறை செபிக்க வேண்டும்.
தட்சணாமூர்த்தியின் முன்பு எவ்வித தோஷமும், பாவமும் நில்லாது ஓடும். இவ்வாறு தொடர்ந்து செபித்து வர நமது கர்மவினைகள் முற்றிலுமாக நீங்கி விடும்.
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சொர்ணபைரவாய ஹும் பட் ஸ்வாஹா”
மேற்கண்ட மந்திரம் சொர்ண பைரவரின் சிறப்பான மந்திரம் ஆகும்.
தட்சணாமூர்த்தியின் மந்திரத்தை ஜெபிக்க மேற்கொண்ட முறைகளே பைரவருக்கும் பொருந்தும்.

Comments

  1. 🙏நன்றி நண்பரே...
    தங்களின் இந்த அருமையான பதிவு
    எனது ஆன்மீக பயணத்தில் மேலும் ஒரு படி நிலை உயர்த்தியுள்ளது 🙏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :