இன்று பைரவருக்கு ஜென்ம அஷ்டமி!!(30.11.2018) :

கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும்.

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ!

காலதேவன் என்ற மஹாகால பைரவப் பெருமான் (பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு) ஈசனாகிய சிவபெருமானிடம் இருந்து உதயமானது கார்த்திகை மாதம் வரக் கூடிய தேய்பிறை அஷ்டமி அன்றுதான்!

(மனிதர்களுக்குத்தான் ஜன்ம நட்சத்திரத்தில் பிறந்த நாள் கொண்டாட வேண்டும்;தெய்வீக சக்திகளுக்கு ஜன்ம திதி அன்றுதான் கொண்டாடவேண்டும்)

இந்த நாள் முழுவதும் ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று வீட்டில் அல்லது கோவிலில் அல்லது உங்கள் வேலைகளைப் பார்த்தவாறு ஜபிக்கவும்; காலையிலும்,

மதியமும்,இரவிலும் பைரவப் பெருமானின் வாகனமாகிய நாய்க்கு உணவு தருக!(மூன்று வேளை முடியாவிட்டாலும் ஒருவேளையாவது தரவேண்டும்;)

இன்று முதல் அடுத்த வருடம் இதே நாள் வரை தினமும் பைரவ வாகனத்திற்கு தினமும் ஒருமுறையாவது உணவு தானம் தருவது நமது கர்மவினைகளை அடியோடு நீக்கும்; நமக்கு வளமான மற்றும் நிம்மதியான வாழ்க்கையைத் தரும்!!!

தொடர்ந்து ஜபிப்பதால்,உடல் வெப்பம் அதிகரிக்கும்.
எனவே,இன்று இரண்டு முறையாவது இளநீர் அருந்துங்கள்
அல்லது எலுமிச்சை சாறு ஒருமுறை அருந்துங்கள்.

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ!

பைரவரின் திருவருள் உங்கள் குடும்பத்திற்கு நன்மை பயக்குமாக.தென்னாடுடைய சிவனேப் போற்றி!!!நம சிவாய!!!



Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :