ஈசனிடம் உரிமையுடன் கேட்கும் உரிமை யாருக்கு உண்டு ??

நமசிவாய !!

நாம் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அருளிக்கொண்டு இருப்பவனை, இதை எனக்கு வழங்கவேண்டும், அருளவேண்டும், காக்கவேண்டும் என்று உரிமையுடன் கேட்கவும் ஒரு தகுதி கண்டிப்பாக வேண்டும் !! அப்படி கேட்டால் கண்டிப்பாக அருள்வார் கருணை கடவுள் !!

என்னதான் அந்த தகுதி ?

சிந்தையால் !! செய்கையால் !! உணர்வால் !! அனைத்தாலும் !! ஈசனை மட்டும் சிக்கென பற்றி, சிவத்தை முன்னிறுத்தி, ஈசனிடம் கூறி, எதையும் செய்யுங்கள் !! செயல்படுங்கள் !! அதுதான் தகுதி !!

இப்படித்தான் இருக்கிறேன் என்று நினைத்தாலும் சில விசயங்களில் நாமும் மறந்து விடுகிறோம் என்பதே மெய் !!

இப்படி சிவத்தை முன்னிறுத்தி, ஈசனிடம் கூறி, எதையும் செய்துவிட்டு அதில் ஏதேனும் இடையூறோ, தடங்கலோ, வந்தால் உரிமையுடன் “ பெருமானே தங்கள் திருவடியை நெஞ்சில் நிறுத்தி, தங்கள் நாமம் சொல்லி, தங்கள் திருவருளை மட்டுமே முன்னிறுத்தி இந்த செய்கையை செய்துள்ளேன் நீங்கள் தான் பொறுப்பு “ என்று உரிமையுடன் கேட்க உரிமை உண்டு, அதைவிடுத்து உங்கள் இஷ்டத்திற்கு எதையாவது செய்து விட்டு, இதில் இருந்து காப்பாற்று என்று கெஞ்சத்தானே முடியும்,  “ ஈசனே நீயே எல்லாமுமாய் எதையும் செய்யவல்லான் என்று நின் திருவருளால் உணர்ந்து !! உன்னை மட்டுமே சிக்கென பற்றி !! உன்னால் இயங்கும் என்னை கொண்டு இந்த செயலை செய்யவிளைகிறேன், நின் திருவருளை துணையாய் கொண்டு, நமசிவாய “ என்று மனதார கூறி செய்துபாருங்கள் அனைத்தும் சாத்தியமாகும், இவ்வாறு ஈசன் அருளிய வாழ்வில் ஒவ்வொரு நிகழ்விலும் ஈசனை முன்னிறுத்தி அவர்நாமம் செப்பி செய்து ஈசனிடம் உணர்வாக உரிமையுடன் வாழுங்கள் .

அனைத்தும் அற்புதமாக அற்புதத்தான் திருவருளால் சாத்தியமாகும் சான்று : சுந்தரபெருமான் வாழ்ந்தது காட்டிய நெறி !!திருச்சிற்றம்பலம்.. நற்றுணையாவது  நமசிவாயவே !!


Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :