மந்திர தீட்சை!!
அரசன் ஒருவனுக்கு, ஆன்மிக வாழ்க்கையில் ஈடுபட வேண்டும், தவம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஆத்மஞானம் பெற வேண்டுமானால், அதற்கு குரு ஒருவரிடம் மந்திரதீட்சை பெறுவது முற்றிலும் அவசியம் என்று, சாஸ்திரங்களின் மூலம் அறிந்தான். தொலைதுõரத்தில் இருக்கும் பிரம்மஞானி ஒருவரிடம் சென்று, மந்திரதீட்சை பெற முடிவு செய்தான். பிரம்மஞானியின் ஆஸ்ரமம் இருந்த மலைச்சாரலுக்குச் சென்றான். அவரைப் பணிந்து வணங்கி, நான் ஒரு சிவபக்தன். எனக்கு நீங்கள் மந்திரதீட்சை கொடுங்கள், என்று கேட்டுக்கொண்டான். மன்னனைப் பார்த்த பிரம்மஞானி, அவன் மந்திரதீட்சை பெறுவதற்குப் போதிய மனப்பக்குவம் இல்லாதவன். அவனுக்கு மந்திரதீட்சை பெறும் தகுதி இல்லை என்பதைப் புரிந்துகொண்டார். எனவே அரசனிடம், அரசே! நீங்கள் மந்திரதீட்சை பெறுவதற்கு உரிய நேரம் இன்னும் வரவில்லை. அதற்கு சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். நான் இப்போது உங்களுக்கு மந்திரதீட்சை தருவதற்கில்லை... என்று கூறினார். அரசன், தனக்கு மந்திரதீட்சை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சென்றிருந்தான்.
-
தீட்சை தராததால், மிகவும் ஏமாற்றத்துடன் அரண்மனை திரும்பினான். தன் அமைச்சரிடம், எனக்கு பிரம்மஞானி மந்திர உபதேசம் தர மறுத்துவிட்டார்... எப்படியும் நான் மந்திரதீட்சை பெற்றாக வேண்டும். அதற்கு என்ன வழி? என்று கேட்டான். மன்னர் பெருமானே! நமது நாட்டில் சாஸ்திரங்களை மிகவும் நன்கு கற்றறிந்த பெரிய சமஸ்கிருத பண்டிதர் ஒருவர் இருக்கிறார். நீங்கள் விரும்பினால், உடனே அவரிடம் நீங்கள் மந்திரதீட்சை பெறுவதற்கு நான் உரிய ஏற்பாடுகள் செய்கிறேன், என்றார் அமைச்சர். மன்னனும், அமைச்சர் சொன்னபடி மந்திர தீட்சை பெற்றுக்கொள்வது என்று முடிவு செய்தான். அமைச்சர், பண்டிதருடன் தொடர்புகொண்டு உரிய ஏற்பாடுகள் செய்தார். பண்டிதர் ஒரு நல்ல நாளில் அரண்மனைக்கு வந்தார். அவர் மன்னனுக்கு மந்திரோபதேசம் செய்து வைத்தார். அவருக்கு அரசன் நிறைய வெகுமதிகள் வழங்கினான். அரசன் தந்த பரிசுப் பொருட்களைப் பெற்றுக்கொண்ட பண்டிதர், மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார். அரசன், இப்போது தனக்கு மந்திர தீட்சை கிடைத்துவிட்டது! தனக்கு தீட்சை தர மறுத்த பிரம்மஞானிக்கு, இப்போது பாடம் புகட்ட வேண்டும்! என்று நினைத்தான்.
-
தன் வீரர்களை அழைத்து, எனக்கு மந்திரதீட்சை தர மறுத்த பிரம்மஞானியைப் பிடித்து வந்து, என் முன்னால் நிறுத்துங்கள்! என்று உத்தரவிட்டான். வீரர்களும் அவ்வாறே செய்தார்கள். சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த அரசன் ஏளனமாக, என்ன, எப்படி இருக்கிறீர்கள்? உங்களிடம் எனக்கு மந்திரதீட்சை கொடுங்கள் என்று நான் கேட்டுக்கொண்டேன். ஆனால் நீங்களோ, எனக்கு உபதேசம் செய்ய மறுத்துவிட்டீர்கள்! ஆனால், இப்போது என்ன ஆயிற்று தெரியுமா? நான் என்ன மந்திரத்தை உங்களிடம் உபதேசம் பெற வேண்டும் என்று விரும்பினேனோ, அதே மந்திரத்தை நான் இப்போது ஒரு பண்டிதரிடம் பெற்றுக்கொண்டேன், என்றான். பிரம்மஞானி எதுவும் பேசாமல், அமைதியாக இருந்தார். மன்னன் தொடர்ந்தான். ஓம் நமச்சிவாய - இதுதானே மந்திரம்! இந்த மந்திரத்தை தருவதற்குத் தானே நீங்கள் மறுத்தீர்கள்? இப்போது நான் விரும்பியபடி எனக்கு மந்திரதீட்சை கிடைத்துவிட்டது! என்றான் ஆணவமாக!
-
அது கேட்ட பிரம்மஞானி, அரசே நீங்கள் ஆணையிட்டால் இந்த சிப்பாய்கள் அதற்கு கட்டுப்படுவார்கள்.மற்றவர்கள் ஆணையிட்டால் கட்டுப்படுவார்களா?மாட்டார்கள்.
அரசனுக்குரிய தகுதி இல்லாத ஒருவனின் வார்த்தையை சிப்பாய்கள் கேட்பதில்லை.
ஆன்மீகம் என்பது இயற்கையை கட்டுப்படுத்தி,அதை கடந்துசெல்ல வேண்டிய ஒன்றாகும்.இயற்கையை கடந்து சென்ற ஒருவர் சொல்லும் மந்திரத்தை உச்சரித்தால்தான் சீடனுக்கும் அதை கடக்கும் ஆற்றல் கிடைக்கும். இயற்கையில் பிடியில் மாட்டியிருக்கும் பண்டிதர்கள் எவ்வளவுதான் மந்திர உபதேசம் கொடுத்தாலும் அதை கேட்பவர்களால் இயற்கையை கடந்து இருக்கும் கடவுளை அடைய முடியாது என்றார்.மன்னனுக்கு அப்போதுதான் புத்தி வந்தது.ஆன்மீகம் என்பது காசுகொடுத்து வாங்கும் பொருள் அல்ல என்பதை புரிந்துகொண்டார்.
-
தீட்சை தராததால், மிகவும் ஏமாற்றத்துடன் அரண்மனை திரும்பினான். தன் அமைச்சரிடம், எனக்கு பிரம்மஞானி மந்திர உபதேசம் தர மறுத்துவிட்டார்... எப்படியும் நான் மந்திரதீட்சை பெற்றாக வேண்டும். அதற்கு என்ன வழி? என்று கேட்டான். மன்னர் பெருமானே! நமது நாட்டில் சாஸ்திரங்களை மிகவும் நன்கு கற்றறிந்த பெரிய சமஸ்கிருத பண்டிதர் ஒருவர் இருக்கிறார். நீங்கள் விரும்பினால், உடனே அவரிடம் நீங்கள் மந்திரதீட்சை பெறுவதற்கு நான் உரிய ஏற்பாடுகள் செய்கிறேன், என்றார் அமைச்சர். மன்னனும், அமைச்சர் சொன்னபடி மந்திர தீட்சை பெற்றுக்கொள்வது என்று முடிவு செய்தான். அமைச்சர், பண்டிதருடன் தொடர்புகொண்டு உரிய ஏற்பாடுகள் செய்தார். பண்டிதர் ஒரு நல்ல நாளில் அரண்மனைக்கு வந்தார். அவர் மன்னனுக்கு மந்திரோபதேசம் செய்து வைத்தார். அவருக்கு அரசன் நிறைய வெகுமதிகள் வழங்கினான். அரசன் தந்த பரிசுப் பொருட்களைப் பெற்றுக்கொண்ட பண்டிதர், மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார். அரசன், இப்போது தனக்கு மந்திர தீட்சை கிடைத்துவிட்டது! தனக்கு தீட்சை தர மறுத்த பிரம்மஞானிக்கு, இப்போது பாடம் புகட்ட வேண்டும்! என்று நினைத்தான்.
-
தன் வீரர்களை அழைத்து, எனக்கு மந்திரதீட்சை தர மறுத்த பிரம்மஞானியைப் பிடித்து வந்து, என் முன்னால் நிறுத்துங்கள்! என்று உத்தரவிட்டான். வீரர்களும் அவ்வாறே செய்தார்கள். சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த அரசன் ஏளனமாக, என்ன, எப்படி இருக்கிறீர்கள்? உங்களிடம் எனக்கு மந்திரதீட்சை கொடுங்கள் என்று நான் கேட்டுக்கொண்டேன். ஆனால் நீங்களோ, எனக்கு உபதேசம் செய்ய மறுத்துவிட்டீர்கள்! ஆனால், இப்போது என்ன ஆயிற்று தெரியுமா? நான் என்ன மந்திரத்தை உங்களிடம் உபதேசம் பெற வேண்டும் என்று விரும்பினேனோ, அதே மந்திரத்தை நான் இப்போது ஒரு பண்டிதரிடம் பெற்றுக்கொண்டேன், என்றான். பிரம்மஞானி எதுவும் பேசாமல், அமைதியாக இருந்தார். மன்னன் தொடர்ந்தான். ஓம் நமச்சிவாய - இதுதானே மந்திரம்! இந்த மந்திரத்தை தருவதற்குத் தானே நீங்கள் மறுத்தீர்கள்? இப்போது நான் விரும்பியபடி எனக்கு மந்திரதீட்சை கிடைத்துவிட்டது! என்றான் ஆணவமாக!
-
அது கேட்ட பிரம்மஞானி, அரசே நீங்கள் ஆணையிட்டால் இந்த சிப்பாய்கள் அதற்கு கட்டுப்படுவார்கள்.மற்றவர்கள் ஆணையிட்டால் கட்டுப்படுவார்களா?மாட்டார்கள்.
அரசனுக்குரிய தகுதி இல்லாத ஒருவனின் வார்த்தையை சிப்பாய்கள் கேட்பதில்லை.
ஆன்மீகம் என்பது இயற்கையை கட்டுப்படுத்தி,அதை கடந்துசெல்ல வேண்டிய ஒன்றாகும்.இயற்கையை கடந்து சென்ற ஒருவர் சொல்லும் மந்திரத்தை உச்சரித்தால்தான் சீடனுக்கும் அதை கடக்கும் ஆற்றல் கிடைக்கும். இயற்கையில் பிடியில் மாட்டியிருக்கும் பண்டிதர்கள் எவ்வளவுதான் மந்திர உபதேசம் கொடுத்தாலும் அதை கேட்பவர்களால் இயற்கையை கடந்து இருக்கும் கடவுளை அடைய முடியாது என்றார்.மன்னனுக்கு அப்போதுதான் புத்தி வந்தது.ஆன்மீகம் என்பது காசுகொடுத்து வாங்கும் பொருள் அல்ல என்பதை புரிந்துகொண்டார்.
Comments
Post a Comment