மனதுக்குப்பிடித்த வாழ்க்கைத் துணை அமைய பைரவர் வழிபாடு :
மனதுக்குப்பிடித்த வாழ்க்கைத் துணை அமையவும்,திருமணத்தடை அகலவும் வெள்ளிக்கிழமை ராகு கால நேரமான காலை 10.30 முதல் 12 மணிக்குள் கால பைரவருக்கு சந்தனக்காப்பு பூச ஏற்பாடு செய்ய வேண்டும்;புனுகு பூசச் செய்து,தாமரை மலரை அணிவிக்க வேண்டும்;அவல் கேசரி,பானகம்,சர்க்கரைப்பொங்கல் இவைகளை படையலாக்க வேண்டும்;படைத்து நமது பெயருக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும்.
மேலும் ஞாயிறு தோறும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில் காலபைரவருக்கு சந்தனக்காப்பு பூச வைத்து,நமது பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளுக்கும்,8 ஞாயிற்றுக்கிழமைகளுக்கும் வழிபாடு செய்து வர எப்பேர்ப்பட்ட திருமணத்தடையாக இருந்தாலும் அது நீங்கிவிடும்.
Comments
Post a Comment