வளம் தரும் வெள்ளிக்கிழமை பூஜை :
மாதங்களில் நான் மார்கழி என்றான் பகவான் கிருஷ்ணன். ஆண்டின் மற்ற மாதங்களிலும் ஏராளமான பண்டிகைகள், விரதங்கள் என்று இருந்தாலும் மார்கழி மாதத்தின் சிறப்பை விளக்குவதற்கு இந்த வரிகள் அதிகம் பயன்படுத்தப்படுவதை நாம் அறிவோம். மாதங்களைப் போலவே எல்லா நாட்கிழமைகளும் இறைவனுக்கு உகந்தவை தான் என்றாலும் வெள்ளிக்கிழமை கொஞ்சம் கூடுதல் சிறப்பு வாய்ந்தது என்பதை அறிவோம். குறிப்பாக பெண் தெய்வங்களை வணங்க, படையலிட வெள்ளிக்கிழமை சிறப்பான நாளாக நடைமுறையில் உள்ளது.
செல்வம் செழிக்க மகாலட்சுமி பூஜை :

திருமண தடை நீங்கிட வெள்ளிக்கிழமை அமிர்த கடிகை பூஜை :
வெள்ளிக்கிழமை தோறும் ஸ்ரீ துர்கை அம்மனை தொடர்ந்து அமிர்தகடிகை நேரத்தில் (காலை 11.30 - 12.00) மஞ்சள், குங்குமம், பூ, தாலிக்கயிறு, வெற்றிலை பழம் பாக்கு வைத்து வழிபாடு செய்து அந்த மஞ்சள், குங்குமம், பூ, தாலிக்கயிறு, வெற்றிலை பழம் பாக்கு ஆகியவற்றை சுமங்கலி பெண்களிற்கு பிரசாதமாக தரவேண்டும். இப்படி செய்து வந்தால் அம்மன் மனம் கனிந்து, வேண்டுவோரின் திருமண தடை நிச்சயம் நீங்கும். இந்த பூஜை செய்யும் போது எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றுவதை தவிர்த்திடுதல் நலம்.
ஒவ்வொரு அம்மன் சன்னதிகளிலும் வெள்ளிக்கிழமைகளில் மனமுருக பிரார்த்திக்கும் பெண்களின் வேண்டுதல்களை, தாயாக இந்த உலகத்தை காத்து ரட்சிக்கும் அன்னை பராசக்தி நிறைவேற்றி தருகிறாள்.
Comments
Post a Comment