கணவன்,மனைவிக்குள் எப்போதும் சண்டை ஏற்படாமல் இருக்க வழிபாடு :
ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் திருமணமும், அதற்கு பிறகான திருமண வாழ்க்கையும் மிக சிறப்பாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் எண்ணமாக இருக்கும். ஆனால் தற்காலங்களில் திருமண எண்ணமாக மீது ஒரு அலட்சியமான மனநிலை கொண்டு, திருமணமான ஆணும், பெண்ணும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று போட்டி போட்டு தினமும் தங்களுக்குள் சண்டை, சச்சரவுகளில் ஈடுபடுகின்றனர். ஒரு சிலர் திருமண பந்தத்தை முறித்து கொண்டும் பிரிகின்றனர். இத்தகைய திருமண வாழ்வு சார்ந்த தம்பதிகள் சண்டையிட்டு கொள்ளாமல் ஒன்றாக வாழ பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
திருமணமான தம்பதிகள் எப்போதும் சண்டை சச்சரவுகள் இல்லாமல் வாழ பூஜையறையில், ராதை – கிருஷ்ணன் சேர்ந்திருக்கும் படத்தை வைத்து தினமும் அப்படத்திற்கு பூக்கள் சமர்ப்பித்து வணங்கி தினமும் தம்பதிகளுக்குள் மனஸ்தாபங்கள் சண்டைகள் ஏற்படாமல் தடுக்கலாம். வயதில் மூத்த தம்பதிகளின் ஆசீர்வாதங்கள் பெறுவதாலும் இளம் தம்பதிகள் வாழ்வில் நன்மைகள் பல ஏற்படும். திருமணமான நாள் முதல் வரும் ஒவ்வொரு பிரதோஷ தினத்தன்றும் சிவன் கோயிலுக்கு சென்று நந்தி பகவானுக்கு பச்சரிசி, வெல்லம், சேர்த்து படையல் வைத்து, நெய் விளக்கேற்றி வணங்க வேண்டும்.வழிபட்டு முடிந்ததும் படையல் பிரசாதத்தை கோயிலில் உள்ள பக்தர்களுக்கு கொடுக்க வேண்டும்.

Comments
Post a Comment