பணக்காரனாக மாற்றக்கூடிய சங்கு வழிபாட்டு முறை !!

ருத்ராட்சம், சாலக்கிராமம், வலம்புரி சங்கு போன்ற பொருட்களில் ஏதவது ஒன்றையாவது வீட்டில் வைத்திருந்தால் அந்த வீட்டிற்கு பல நன்மைகள் வந்து சேரும் என்பது நம்பிக்கை.

இதில் ருத்ராட்சம் சிவனுக்குரியது, சாலக்கிராமம் விஸ்ணுவிற்குரியது, வலம்புரி சங்கு லட்சுமிக்குரியது.

இந்த பதிவில் வலம்புரி சங்கால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து பார்ப்போம் வாருங்கள்.


ஆயிரம் சிப்பியானது ஒரு இடம்புரி சங்கு. ஆயிரம் இடம்புரி சங்கானது ஒரு வலம்புரி சங்கு. மகாலட்சுமிக்குரிய வலம்புரி சங்கு ஒருவரிடம் கிடைப்பதே அபூர்வம்.

அப்படி கிடைத்துவிட்டால் அதனை முறையாக பராமரித்து சிறப்பாக பூஜை செய்து அவசியம்.
வலம்புரி சங்கை ஒருவர் தன் வீட்டிலோ அல்லது தொழில் செய்யும் இடத்திலோ வைத்துக்கொள்ளலாம்.

அனால் தினமும் சுத்தமாக இருந்து அதற்கு பூஜை செய்வது மிக மிக முக்கியம்.

வலம்புரி சிங்கிற்கு முறையாக பூஜை செய்யும் பட்சத்தில் ஒருவர் தான் இழந்த செல்வங்கள் அனைத்தையும் திரும்ப பெறுவார

அதோடு பலவகையிலும் அவருக்கு செல்வம் வந்து சேரும்.

வலம்புரி சங்கில் சிறிது நீர் ஊற்றி அதில் துளசி போட்டுவிட்டு, பூஜை செய்து முடித்தபின் அந்த நீரை குடித்துவந்தால் உடம்பில் உள்ள பிணிகள் விலகும்.

ஆன்மீக ரீதியாக நல்ல நாட்கள் என கூறப்படும் சித்திரா பௌர்ணமி, ஆணி மாத வளர்பிறை அட்டமி, ஆடி மாத பூர நட்சத்திரம், புரட்டாசி மாத பௌர்ணமி போன்ற நாட்களில் வலம்புரி சங்கில் பால் வைத்து

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து மகாலட்சுமிக்கு பூஜை செய்துவந்தால் ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை.



Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :