பசுவின் பால் சைவமா அசைவமா ?
மாமிசம் சாப்பிடுபவர்கள் சைவர்களைப் பார்த்து, நீங்கள் குடிக்கும் பால், பசுவின் உடலிலிருந்து தானே வருகிறது.
அதன் ரத்தம் தானே பாலாக மாறுகிறது, அதைக் குடிக்கும் நீங்களும் அசைவர்கள் தான், என்று கேலி பேசுவார்கள்.
இன்றும் அந்த கிண்டல் தொடர்ந்தபடிதான் உள்ளது.
அதற்கு காரணம் அவர்களின் விளக்கக் குறைவே.
முதலில் அசைவம் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு மிருகக்தைக் கொன்று அதன் இறைச்சியைச் சாப்பிட்டால் தான் அது அசைவம். பால் அப்படியல்ல.
பாலைக் கறக்காமல் விட்டால் தான் பசுவுக்கு துன்பம் ஏற்படும்.
ஆனால், பால் கறக்கும் விஷயத்தில் கவனம் வேண்டும்.
பசுவுக்கு நான்கு மடு இருக்கும்.
இதில் இரண்டில் இருந்து மட்டுமே பால் கறக்க வேண்டும். மற்ற இரண்டு மடுக்களை கன்றுக்காக விட்டுவிட வேண்டும்.
பசும்பால் மனிதனுக்கு சாந்த குணத்தை தரும் வல்லமையுள்ளது.
அது புனிதமானதும் கூட.
பசுவின் கோமியமும் மருந்தாகவும், கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது.
அது புனிதமானது என்பதால் தான், பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன், என்று விநாயகருக்கு வாக்கு கொடுக்கிறார் அவ்வைப்பாட்டி.
இதிலிருந்தே புரியாத பலரும் பால் சைவமா அல்லது அசைவமா என்று புரிந்து கொள்ளலாம்.
எது எப்படி புரிந்து கொண்டாலும் சைவர்களுக்கு எதிராக கோஷம் போட ஒரு கோஷ்டி இருந்து கொண்டுதான் இருக்கும்.
பசு காயத்ரி மந்திரம்:-
ஓம் பசுபதயேச வித்மஹே மகா
தேவாய தீ மஹி தந்தோ பசுதேவி:
ப்ரசோதயாத்.
பசுவானவள் பரமேஸ்வரனுக்குத் தாயாகவும்,வசுக்களுக்கு
பெண்ணாகவும் ஆதித்யர்களுக்கு சகோதரியாகவும் நாபியில்
அமிர்தத்தை வைத்துக் கொண்டவளாகவும்,இருக்கிறாள்.
பசுவை அடிக்கவோ, விரட்டவோ கூடாது.பூஜிக்க வேண்டுமென
வேதம் சொல்கிறது.
தேவிபாகவதம், பிரும்ம வைவர்த்தம் போன்ற புராணங்கள்
ஸுரபி உபாக்யானம் மிக அழகானது.
பிரும்ம சிருஷ்டியில் உலகம் உய்ய முதலில் பசுவைப்படைத்து அதன் உடலில் பதினான்கு உலகையும் முப்பத்து
முக்கோடி தேவர்களையும் இருக்கச் செய்தான்.
அதில் முதலில் வந்தவர்களான தர்மராஜனும் காலதேவனும்தான் முகத்தில் இருந்தனர். மற்றவர்கள் உடல் எங்கும் குடியேறினார்கள்.
இதில் இரண்டு பேர்கள் தாமதமாக வந்தார்கள்.
அவர்கள் மஹாலட்சுமியும் கங்கையும்.பசுவின் உடலில்
இவர்களுக்கு இடம் இல்லை.
லட்சுமியும் கங்கையும் பசுவை மிகவும் வேண்டினார்கள்.
எங்கேயாவது இருக்க ஓர் இடம் கொடுத்தால் போதும் என்று
கெஞ்சினார்கள்.
பசுவும்,தாய்மார்களே, உங்கள் மீது எனக்கு அனுதாபம் இருக்கிறது. ஆனால் இடமே இல்லையே, ஒன்று வேண்டுமானால் செய்யுங்கள், என் உடலிலிருந்து வரும் சாணம்,கோமூத்ரம் இரண்டும் யாருக்கும்
சொந்தமாகவில்லை.
நீங்கள் விரும்பினால் அதில் இருக்கலாம் என்று சொல்ல லட்சுமியும் கங்கையும் மிகுந்த சந்தோஷத்துடன் அந்த இடத்தில்
வாஸம் செய்ய ஆரம்பித்தார்கள்.
அதனால் இன்றைக்கும் பசுவின் பின் புறத்தில் லட்சுமியும்,
கங்கையும் இருப்பதாக சாஸ்திரம்.அதனால் பசுவின் சாணமும்,
கோமூத்ரமும் சகல பாபங்களையும் போக்கி லட்சுமி
கடாட்சம் அளிக்கக் கூடியது என்கிறது சாஸ்திரம்.
இந்த பசு காயத்ரி ஸ்லோகத்தை கூற எல்லா பாக்கியங்களும்
கிடைக்கும்.ஓம் நமச்சிவாய...!
அதன் ரத்தம் தானே பாலாக மாறுகிறது, அதைக் குடிக்கும் நீங்களும் அசைவர்கள் தான், என்று கேலி பேசுவார்கள்.
இன்றும் அந்த கிண்டல் தொடர்ந்தபடிதான் உள்ளது.
அதற்கு காரணம் அவர்களின் விளக்கக் குறைவே.
முதலில் அசைவம் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு மிருகக்தைக் கொன்று அதன் இறைச்சியைச் சாப்பிட்டால் தான் அது அசைவம். பால் அப்படியல்ல.
பாலைக் கறக்காமல் விட்டால் தான் பசுவுக்கு துன்பம் ஏற்படும்.
ஆனால், பால் கறக்கும் விஷயத்தில் கவனம் வேண்டும்.
பசுவுக்கு நான்கு மடு இருக்கும்.
இதில் இரண்டில் இருந்து மட்டுமே பால் கறக்க வேண்டும். மற்ற இரண்டு மடுக்களை கன்றுக்காக விட்டுவிட வேண்டும்.
பசும்பால் மனிதனுக்கு சாந்த குணத்தை தரும் வல்லமையுள்ளது.
அது புனிதமானதும் கூட.
பசுவின் கோமியமும் மருந்தாகவும், கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது.
அது புனிதமானது என்பதால் தான், பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன், என்று விநாயகருக்கு வாக்கு கொடுக்கிறார் அவ்வைப்பாட்டி.
இதிலிருந்தே புரியாத பலரும் பால் சைவமா அல்லது அசைவமா என்று புரிந்து கொள்ளலாம்.
எது எப்படி புரிந்து கொண்டாலும் சைவர்களுக்கு எதிராக கோஷம் போட ஒரு கோஷ்டி இருந்து கொண்டுதான் இருக்கும்.
பசு காயத்ரி மந்திரம்:-
ஓம் பசுபதயேச வித்மஹே மகா
தேவாய தீ மஹி தந்தோ பசுதேவி:
ப்ரசோதயாத்.
பசுவானவள் பரமேஸ்வரனுக்குத் தாயாகவும்,வசுக்களுக்கு
பெண்ணாகவும் ஆதித்யர்களுக்கு சகோதரியாகவும் நாபியில்
அமிர்தத்தை வைத்துக் கொண்டவளாகவும்,இருக்கிறாள்.
பசுவை அடிக்கவோ, விரட்டவோ கூடாது.பூஜிக்க வேண்டுமென
வேதம் சொல்கிறது.
தேவிபாகவதம், பிரும்ம வைவர்த்தம் போன்ற புராணங்கள்
ஸுரபி உபாக்யானம் மிக அழகானது.
பிரும்ம சிருஷ்டியில் உலகம் உய்ய முதலில் பசுவைப்படைத்து அதன் உடலில் பதினான்கு உலகையும் முப்பத்து
முக்கோடி தேவர்களையும் இருக்கச் செய்தான்.
அதில் முதலில் வந்தவர்களான தர்மராஜனும் காலதேவனும்தான் முகத்தில் இருந்தனர். மற்றவர்கள் உடல் எங்கும் குடியேறினார்கள்.
இதில் இரண்டு பேர்கள் தாமதமாக வந்தார்கள்.
அவர்கள் மஹாலட்சுமியும் கங்கையும்.பசுவின் உடலில்
இவர்களுக்கு இடம் இல்லை.
லட்சுமியும் கங்கையும் பசுவை மிகவும் வேண்டினார்கள்.
எங்கேயாவது இருக்க ஓர் இடம் கொடுத்தால் போதும் என்று
கெஞ்சினார்கள்.
பசுவும்,தாய்மார்களே, உங்கள் மீது எனக்கு அனுதாபம் இருக்கிறது. ஆனால் இடமே இல்லையே, ஒன்று வேண்டுமானால் செய்யுங்கள், என் உடலிலிருந்து வரும் சாணம்,கோமூத்ரம் இரண்டும் யாருக்கும்
சொந்தமாகவில்லை.
நீங்கள் விரும்பினால் அதில் இருக்கலாம் என்று சொல்ல லட்சுமியும் கங்கையும் மிகுந்த சந்தோஷத்துடன் அந்த இடத்தில்
வாஸம் செய்ய ஆரம்பித்தார்கள்.
அதனால் இன்றைக்கும் பசுவின் பின் புறத்தில் லட்சுமியும்,
கங்கையும் இருப்பதாக சாஸ்திரம்.அதனால் பசுவின் சாணமும்,
கோமூத்ரமும் சகல பாபங்களையும் போக்கி லட்சுமி
கடாட்சம் அளிக்கக் கூடியது என்கிறது சாஸ்திரம்.
இந்த பசு காயத்ரி ஸ்லோகத்தை கூற எல்லா பாக்கியங்களும்
கிடைக்கும்.ஓம் நமச்சிவாய...!
Comments
Post a Comment