சொர்ணாகர்ஷண பைரவர் :

ஸ்ரீஸ்வர்ண பைரவியை தன் மடிமீது அமர்த்தியவாறு காட்சி தரும். இந்த மூர்த்தியை மனமுருகி வழிபட, பொன் பொருள் சேரும். ஐஸ்வரியம் பெருகும் என்பர்.



சிதம்பரம் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஒரு பைரவர், சொர்ணாகர்ஷண பைரவர் எனப்படுகிறார். திகம்பரராக டமருகம், சூலம், பாசம் மற்றும் கபாலம் ஏந்தியவராக நின்ற கோலத்தில் அருள்கிறார். அருகில், நாய் வாகனமும் உள்ளது.

முற்காலத்தில் தில்லை கோயிலில் சேவை செய்யும் அந்தணர்கள், பூஜை முடிந்ததும் செம்பினால் ஆன தாமரையை பைரவரின் பாதத்தில் வைத்து வணங்கிச் செல்வார்களாம். மறுநாள், சுவாமியைப் பணிந்து அந்த மலரை எடுத்துக் கொள்வர் அது, அவர்களுடைய பணிகளுக்கேற்ப, பொன்னாக மாறியிருக்கும் என்றொரு தகவல் உண்டு. இன்றும் தன்னை வணங்கும் அன்பர்களின் மனப்பூர்வமான கோரிக்கைகளை ஏற்று, அருள் வழங்கி வருகிறார் பைரவமூர்த்தி.

Comments

Popular posts from this blog

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :

ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழில் :

பைரவர் காவியம்