குறையாத செல்வவளம் அருளும் பைரவர் :


திருச்சி-உறையூர் சாலை ரோட்டில் உள்ளது. ஜெயகாளிகாம்பாள் ஆலயம். இந்த ஆலயத்தில் அஷ்டபைரவர்களின் திருமேனிகள் சுதை வடிவில் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு அஷ்ட பைரவர்கள் தங்கள் துணைவியர் மற்றும் வாகனங்களுடன் காட்சி அளிப்பது அற்புதமான காட்சியாகும். ஒவ்வொரு மாதம் தேய்பிறை அஷ்டமியில் இங்குள்ள அஷ்டபைரவருக்கும் சொர்ண ஆகாச பைரவருக்கும் யாகமும் அபிஷேகமும் நடைபெறுகிறது. பக்தர்கள் நூற்றுக்கணக்கில் இந்த யாகத்தில் கலந்து கொள்கின்றனர். இந்த யாகத்தில் கலந்து கொள்வதால் செல்வ வளர்ச்சி, வழக்கில் வெற்றி கண் திருஷ்டி அகலுதல் போன்ற பயன்கள் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். இதே ஆலயத்தில் சொர்ண ஆகாஷ பைரவருக்கு தனி சன்னதி உள்ளது.


சுவர்ணலதா என்கிற சுவர்ண பைரவியை தன் மடி மீது அமர்த்திக் கொண்டு இவர் காட்சி தருகிறார். இவர் மஞ்சள் நிறம் கொண்டவர். மஞ்சள் நிற பீதாம்பர ஆடைகள் அணிந்தவர். பொன்னால் ஆன அட்சய பாத்திரம் ஏந்தியவர். சொர்ண பைரவி மங்களம் தரும் நாயகி ஆவார். பொன் கொட்டும் குடம், தாமரை, அபயமுத்திரை தரித்து சொர்ண பைரவரை தழுவியவாறு காட்சி தருகிறாள். சொர்ண பைரவரின் படத்தை வீட்டில் வைத்து முறைப்படி பூஜித்தால் வறுமை விலகி லட்சுமி கடாட்சம் பெருகும். ஆக, பைரவரை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம் காலத்தை நிர்ணயம் செய்யும் பைரவரை நாம் எந்த நேரத்திலும் வழிபடலாம். பகை அம்சங்களை நீக்கக் கூடியவர் பைரவர். தேய்பிறை அஷ்டமியில் பைரவரை நாம் பூஜை செய்து வணங்கினால் வறுமை அகன்று செல்வம் பெருகும்.

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :