சரஸ்வதி ஸ்தோத்திரம்
சரஸ்வதி ஸ்தோத்திரம்
எங்ஙனம் சென்றிருந்தீர் - எனது
இன்னுயிரே ! - என்றன் இசையமுதே !
திங்களைக் கண்டவுடன் - கடல்
திரையினைக் காற்றினைக் கேட்டவுடன்
கங்குலைப் பார்த்தவுடன் - இங்கு
காலையில் இரவியைத் தொழுதவுடன்
பொங்குவீர் அமிழ்தெனவே - அந்தப்
புதுமையிலே துயர் மறந்திருப்பேன்
மாதமொர் நான்காய் நீர் - அன்பு
வறுமையி லேஎனை வீழ்த்திவிட்டீர்
பாதங்கள் போற்றுகின்றேன் - என்றன்
பாவம்எலாம் கெட்டு ஞானகங்கை
நாதமொடு எப்பொழுதும் - என்றன்
நாவினி லேபொழிந் திடவேண்டும்
வேதங்கள் ஆக்கிடுவீர் ! - அந்த
விண்ணவர் கண்ணிடை விளங்கிடுவீர் !
மேலும் படிக்க க்ளிக் :http://goo.gl/YmGb6Z செய்யவும்
Comments
Post a Comment