திருவோணம் நட்சத்திர தோஷ வழிபாடு

திருவோணம் நட்சத்திர தோஷ வழிபாடு:- திருவோணம் நட்சத்திரக்காரர்கள் படித்தவராகவும், புத்திசாலியாகவும் இருப்பார்கள். இசை, ஜோதிடம், கணிதம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் இருக்கும். உங்கள் அதீதமான, நல்ல சக்திவாய்ந்த உள்ளுணர்வு ஒன்று இருக்கும். உங்களுக்கு கவர்ச்சிமிக்க, தாராள மனம் படைத்த மனைவி, கணவன் கிடைப்பார். உங்கள் வாழ்க்கையில், 9-வது மற்றும் 24-வது வயதில், நல்ல அனுகூலமான பலன்களை எதிர் பார்க்கலாம்.தெய்வீக வழிபாட்டில் பக்தியும், பெரியவர்களிடத்தில் மரியாதையும் கொண்டிருப்பர். பொது விஷயங்களில் ஆர்வத்துடன் பங்கேற்பர். மற்றவர்களைப் புரிந்த வல்லவர்கள், பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் கொண்டிருப்பர். நிலபுலன்களை அதிகம் பெற்றிருப்பர். இந்நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன், தெய்வம் சக்தி. முழுநாளிகை 55 என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல் பூந்துறையை சேர்ந்த விஜய் சுவாமிஜி. அவர் மேலும் கூறியதாவது:- திருவோணம் நட்சத்திரக்காரர்கள் சக்தியை வழிபட்டால் சகல செல்வங்களை பெறலாம். சிவத்தினின்று சக்தியைப் பிரிக்க முடியாது. உலகம்யாவும் சிவசக்தி மயமானது. சக்தி பல்வேறு தொழில்களைப் புரியவும், பல்வேறு தத்துவங்களை விளக்கவும் பல்வேறு வடிவங்களை எடுக்கிறாள். முத்தொழில்களை செய்யும் போது பிராம்மாணி, வைஷ்ணவி, உருத்ராணி என்று பெறுகிறாள். சிவத்திற்கு ஒப்பிடும் போது துர்க்கை என்றும், தீமையை அழிக்கும் போது காளியுமாகிறாள். வித்தை-கல்வியின் வடிவெடுக்கும் போது சரஸ்வதி என்றும்,நவதானிய, செல்வம் என்று வடிவெடுக்கும் போது லஷ்மியாகவும் பெயர் பெறுகிறாள். வாழ்வு சிறப்புற ஆட்சியானது சிறப்புற்றிருக்க வேண்டும் என்பதை துர்க்கையும், செல்வத்தை வழங்க திருமகளும், கலை ஞானங்களைப் பெற சரஸ்வதியும், ஞானத்துக்கும் நல்லறிவிற்கும் அறிகுறியாக விநாயகரும், வாழ்வை ஆற்றல் படைத்தாக்க முருகனும் விளங்குகின்றனர். அவதாரபுருஷர்களாக, சித்தர்களாக தோன்றியவர்கள் கூட சக்தியை வணங்கி வந்தனர். ராமபிரான் இலங்கை போகும் முன்பு துர்க்கை பூஜை செய்ததாகவும், கண்ணன் காத்யாயினி பூஜை செய்ததாகவும், ராம கிருஷ்ணர் காளியை வணங்கியதாகவும் நாம் அறிந்த செய்தியாகும். ஜகதம்பா, உணவு அளிக்கும் அன்னபூரணியாகவும், அனைத்துக்கும் அரசியான ராஜராஜேஸ்வரி (பவானி) இயற்கையின் உயிரை உண்டு. தோற்றுவிப்பவளாகவும், மகாசக்தி பேராற்றல் மிக்கவள் என பல பெயர்களால் அழைக்கப்படுகிறாள். வீரம், செல்வம், கல்வி, அருள் வேண்டி சக்தியை நோக்கி நோறகப்படும் நவராத்திரி விழா நம்மவர்களால் பயபக்தியுடன் கொண்டாடப்படுகிறது. இதுவே சக்தியின் சிறப்பை உலகெங்கும் பறை சாற்றுகிறது. இது மட்டுமின்றி கௌரி விரதம், வரலட்சுமி விரதம் போன்ற சக்தியை நோக்கி நோற்கப்படும் விரதங்களாகும். திருவோணம் நட்சத்திரத்தால் ஏற்படும் நோய்கள்: உடல் துர்நாற்றம், வயிறு உப்புசம், சிறுநீர்க் குறைவு, கிருமிகளின் தொற்று, சர்க்கரை நோய், வெள்ளைப்பாடு, தொண்டை குரல் வளைப்புண், பல் ஆடுதல், மண்ணீரல் வீக்கம், சளி, இருமல், ஆஸ்துமா, கரப்பான், தோல் நோய், போன்றவையாகும். மேலும் படிக்க: http://goo.gl/3qUV5X

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :