💥💥இன்று ஓர்
ஆலயம்💥💥
அன்பில் மாரியம்மன் கோவில்
சுவாமி : மாரியம்மன்.
தீர்த்தம் : கொள்ளிட தீர்த்தம்.
தல விருட்சம் : வேம்பு மரம்.
தலச்சிறப்பு : சமயபுரம், நார்த்தான் மலை, வீரசிங்க பேட்டை, கண்ணனூர், புன்ணை நல்லூர், திருவேற்காடு, அன்பில் மாரியம்மன் ஆகிய
சிறப்பு மிக்க அம்மன் ஸ்தலங்களில் அன்பில் மாரியம்மன் மற்ற அனைத்து அம்மனுக்கும்
மூத்தவள். அன்பில் மாரியம்மனுக்கு ஏழு குழந்தைகள் உள்ளன. மற்ற
திருக்கோவில்களில் அம்மனுக்கு குழந்தை கிடையாது. நண்பகல் 12.00
மணியளவில் கண் குறைபாடு
உள்ளவர்களுக்கு பூசாரியால் பச்சிலை மூலிகைகளால் ஆன சாறு கண்களில் பிழிந்து
விடப்படுகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் கண் நோயில் இருந்து
குனமடைவதாக நம்பப்படுகிறது.
தல வரலாறு : மஹா மாரியம்மன், சுமார் 700 ஆண்டுகள்
பழமையான கோவில். இத்திருகோவிலில் கொல்லிடம் ஆற்றில் வெள்ளம்
வரும்பொழுது வேப்பமரத்தடியில் அம்மன் தங்கியதாக கூறப்படுகிறது. பின்னர்
இத்திருக்கோவிலை முதலாங்க சக்கரவர்த்தி கட்டியதாக கூறப்படுகிறது.
வேண்டுதல் : குழந்தை வேண்டி அம்மனை வழிபட்டால்
பலன் கிடைக்கும். கண் சம்பந்தமான நோய்கள் தீர இந்த அம்மனை வழிபடலாம்.
அம்மை இருக்கும் காலத்தில் இந்த கோவிலில் வந்து தங்கி பூஜை செய்தால் பலன்
கிடைக்கும்..
நடைதிறப்பு : காலை 7:00 மணி முதல்
மதியம் 1:00 மணி வரை , மாலை 4:00
மணி முதல் இரவு 8:00
மணி வரை.
பூஜை விவரம் : வருடபிறப்பு, ஆடிவெள்ளி, தைவெள்ளி, அம்மாவசை, பௌவுர்ணமி போன்ற நாட்களில்
சிறப்பு பூஜை நடைபெறும்.
திருவிழாக்கள் :
வைகாசி - 5 ம் நாள் பஞ்சப்பிரகார உற்சவம், 6
– ம் நாள் விடையாற்றி நடைபெறும்.
ஆனி - மகாசண்டி ஹோமம் நடைபெறும்.
பங்குனி - முதல் ஞாயிறு பூச்சொரிதல் நடைபெறும் பின்னர் 15 நாள் அம்மன் விரதம், அந்த சமயத்தில் அம்மனுக்கு மாவிளக்கு
மட்டும் படையல் வைக்கப்படும்.
பங்குனி - இரண்டாம்ஞாயிறு அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் கோவிலை வலம்
வருவர்.
பங்குனி - மூன்றாவது ஞாயிறு குடியேறுதல் பின்னர் அடுத்தல் பத்து
நாட்கள் திருவிழா, கண்ணாடி பல்லக்கு திருத்தேர்
நடைபெறும்.
அருகிலுள்ள நகரம் : லால்குடி.
கோயில் முகவரி : அன்பில் மாரியம்மன் கோவில்,
அன்பில், லால்குடி வட்டம், திருச்சி மாவட்டம்.
விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.
செல் :+91 9443351497 , 9842499006.
Comments
Post a Comment