#vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam 💥💥 இன்று ஓர் ஆலயம் 💥💥 அழகர் திருக்கோவில் மதுரை சுவாமி : கள்ளழகர் , பரமஸ்வாமி , சுந்தராஜர். அம்பாள் : கல்யாண சுந்தரவல்லி தாயார். தீர்த்தம் : நூபுரகங்கை , சந்திரபுஷ்கரணி , கருடதீர்த்தம் , அனுமார்தீர்த்தம் உள்ளிட்ட 108 புண்ணிய தீர்த்தங்கள். தலவிருட்சம் : சந்தன மரம். தலச்சிறப்பு : சித்ரா பவுர்ணமியன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மிகச் சிறப்பான திருவிழாவாக மதுரை மக்களால் கொண்டாடப்படுகிறது. தெய்வ பிரதிஷ்டை அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருக்கும். திருத்தல வரலாறு : ஒரு காலத்தில் எமதர்ம ராஜனுக்கு சாபம் ஏற்பட்டது. இச்சாபத்தை போக்க பூலோகத்தில் தற்சமயம் கோயில் இருக்கும் அழகர் மலை விருசுபகிரி என்னும் இம்மலையில் தவம் செய்கிறார். இம்மலை 7 மலைகளை கொண்டது. தர்மராஜனின் தவத்தை மெச்சி பெருமாள் காட்சிதந்தார். இறைவனின் கருணையை போற்றும் விதமாக தர்மராஜன் பெருமாளிடம் தினந்தோறும் நான் ஒரு முறையாவது பூஜை செய்ய வரம் த...
Posts
Showing posts from July, 2019
astrology | உங்கள் கால் பெருவிரல் ரேகையில் உங்கள் வாழ்கை | 98425 99006 bairava peedam
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps

# vijaaiswamiji # bairavafoundation # bairavapeedam 🔥 🔥 சனீஸ்வர பகவான் கதை 🔥 🔥 மனிதனுக்கு ஒரு குணம் உண்டு. அடங்கிப் போவதை யெல்லாம் அதட்டுவது; அடங்காதவைக்குப் பணிந்து விடுவது என்பதுதான் அது. நவகிரகங்களை அவனால் அடக்க முடியாமல் போனதால், அவற்றுக்குப் பணிந்து பக்தனாகி விட்டான். கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் ஆதிக்கம் செலுத்துவதை ஆராய்ந்து சோதிடம் என்ற ஒரு சாஸ்திரத்தையே இயற்றினான். மனிதனைப் பாதிக்கும் நவகிரகங்களில் சனியும் ஒன்று. சகல துக்கங்களைப் போக்கி அருள் பவர்; உத்தமோத்தமர்; வில், அம்பு, கத்தி, வரதம் ஏந்தியவர். கோரைப் பல், கருமை யான தேகம் கொண்டவர். நீல ஆடை, நீலமணி, நீலோற்பலம் ஆகியவற்றை அணியாகக் கொண்டு விளங்குபவர் என்று தியான சுலோகம் வர்ணிக்கிறது. சில்ப ரத்னம், தத்துவ நீதி போன்ற நூல் களும் சனி பகவானை வர்ணிக்கின்றன. சூரியன் மனைவியான சம்ஞா கணவனின் உக்கிரத்தைப் பொறுக்க மாட்டாமல், நிழலான சாயா என்பவளைப் படைத்து, அவளை தன் கணவனிடம் விட்டுத் தான் தந்தை வீடு சென்று விட்டாள். இந்த சாயாதேவியிடம் சூரியனுக்கு சனி பகவான் பிறந்தார். சம்ஞாவின் புத்திரனான யமன் சனியை உதைக்...
- Get link
- X
- Other Apps

# vijaaiswamiji # bairavafoundation # bairavapeedam 💥 💥 இன்று ஓர் ஆலயம் 💥 💥 🔥 🔥 அருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில் ஸ்ரீவில்லிப்புத்தூர் 🔥 🔥 சுவாமி : வடபத்ரசாயி, ரங்கமன்னார். அம்பாள் : ஆண்டாள் நாச்சியார். தீர்த்தம் : திருமுக்குளம், கண்ணாடித் தீர்த்தம். தலச்சிறப்பு : இத்தலத்தின் கோபுரம் தமிழக அரசின் சின்னமாக அமைந்துள்ளது மிகவும் சிறப்பாகும். இத்தலம் 108 திவ்ய தேசங்களில் 90 வது திவ்ய தேசம் ஆகும். இத்தலத்தில் மூலவர் வடபத்ரசாயி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் மட்டுமே ஆண்டாள், ரங்கமன்னார்,கருடாழ்வார் ஆகிய மூவரும் ஒரே ஸ்தானத்தில் காட்சியளிக்கிறார்கள். உற்சவர் பெருமாள் பேண்ட், சட்டை அணிந்தும், முக்கிய விழாக்காலங்களில் வெள்ளை வேஷ்டி அணிந்தும் அருள்பாலிக்கிறார். திருப்பதி பெருமாளுக்கு புரட்டாசி 3 வது சனிக்கிழமை பிரம்மோற்சவத்துக்கு ஆண்டாளுக்கு சூட்டிய மாலை அணிவிக்கப்படுகிறது. இங்கு ஆண்டாள் திருக்கல்யாணத்துக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலிலிருந்து திருமணப் பட்டுப் புடவை வருகிறது. மதுரையில் சித்திரைத் திருவிழா அழகர் எதிர் சேவையின் போது ஆண்டாள...