Posts

Showing posts from October, 2018

ஸ்ரீ ஐயப்பன் ஹரிவராசனம் பாடல் அர்த்தம்!!

Image
ஹரிவராசனம் விஸ்வமோஹனம் ஹரிததீஸ்வர மாராத்ய பாதுகம் அரிவிமர்த்தனம் நித்ய நர்தனம் ஹரி ஹராத்மஜம் தேவமாஸ்ரயே (சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா) மிக சிரேஷ்டமான சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவரும், விஸ்வத்தையே (பிரபஞ்சத்தையே) தன் முறுவலால் மோகிக்கச் செய்பவரும், ஹரிதம் என்ற குதிரையில் பவனி வரும் சூர்ய பகவானாலேயே ஆராதிக்கப்படும் பாதங்களை உடையவரும், சத்ருக்களை அழிப்பவரும், நித்யம் ஆனந்த நர்த்தனம் செயபவருமாகிய ஹரிஹரபுத்ர தேவனை சரணடைகிறேன். சரணகீர்த்தனம் சக்த மானஸம் பரணலோலுபம் நர்த்தனாலஸம் அருணபாஸுரம் பூதநாயகம் ஹரிஹராத்மஜம் தேவ மாஸ்ரயே (சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா) சரண கோஷத்தை கேட்பதனால் மிகவும் மன மகிழ்ச்சியடைபவரும், பிரபஞ்சத்தைக் காத்து ரட்சிப்பவரும், நர்த்தனமிடுபவரும், அருணோதயத்தினைப் போல் ஒளிமயமான காந்தியை உடையவரும், பூதநாயகனுமாகிய ஹரி ஹரபுத்ர தேவனைச் சரணடைகிறேன். ப்ரணய ஸத்யகம் ப்ராணநாயகம், ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்சிதம் ப்ரணவ மந்திரம் கீர்த்தனப்ப்ரியம் ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே (சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா) பிரியமான சத்யகாவின் கணவரும், தன்னைச் சரணடைந்...

நமது ஏக்கங்களைத் தீர்க்கும் பைரவர் வழிபாடுகள்!!!

Image
பைரவ வழிபாடு செய்ய முடிவெடுத்துவிட்டால்,அசைவம ் சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும்;மேலும் எந்த நோக்கத்துக்காக வழிபாடு செய்கிறோம் என்பதை எவரிடமும் சொல்லாமலிப்பதும் அவசியம் ஆகும்.சொன்னால் அந்த வழிபாட்டு முறையை தொடர்ந்து செய்ய முடியாமல் போய்விடும்.அந்த அளவுக்கு பொறாமை இன்று தமிழ்நாடெங்கும் பரவியிருக்கிறது.குடும்பத்த ோடு அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட் டால்,100% பலன்கள் விரைவாக கிடைக்கும்.யார் வழிபாடு செய்கிறார்களோ,அவர் மட்டும் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினால் 60% பலன்களே கிடைக்கும். நமது குழந்தையின் படிப்பில் மந்தத்தன்மை நீங்கிட: புதன் கிழமை அன்று காலை 6 முதல் 7 மணிக்குள் அல்லது மதியம் 1 முதல் 2 மணிக்குள் அல்லது இரவு 8 முதல் 9 மணிக்குள் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்துக்கு பின்வரும் பொருட்களோடு செல்ல வேண்டும்; 1.மரிக்கொழுந்து மாலை(வேறு எந்த பூவும் இருக்கக் கூடாது) 2.புனுகு 3.பாசிப்பருப்பு கலந்த சாதம்(வீட்டில் சமைத்திருக்க வேண்டும்) 4.பாசிப்பருப்பு கலந்த பாயாசம் இவைகளில் பூசாரியிடம் மரிக்கொழுந்து மாலையை பைரவருக்கு அணியச் சொல்லி,கொடுக்க வேண்டும்.நாம் கொண்டு வந்திருக்கும் பாத்திரத...

இன்றைய ராசிபலன்கள்(01.11.2018) :

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-01-11-2018-astro1.html 

இன்றைய நாள் எப்படி?01.11.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,ஐப்பசி மாதம் 15ம் தேதி,ஸபர் 22ம் தேதி, *01.11.18 வியாழக்கிழமை,தேய்பிறை,அஷ்டமி திதி காலை 8.52 வரை;அதன்பின் நவமி திதி,ஆயில்யம் நட்சத்திரம் இரவு 2.10 வரை;அதன்பின் மகம் நட்சத்திரம்,சித்த-அமிர்த யோகம்.சந்திராஷ்டமம் - உத்திராடம். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-01-11-2018-news2562.html

இன்றைய ராசிபலன்கள்(31.10.2018) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-31-10-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?31.10.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,ஐப்பசி மாதம் 14ம் தேதி,ஸபர் 21ம் தேதி, *31.10.18 புதன்கிழமை,தேய்பிறை,சப்தமி திதி மதியம் 12.10 வரை; அதன்பின் அஷ்டமி திதி,பூசம் நட்சத்திரம் காலை 3.47 வரை;அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - பூராடம்.மேலும் படிக்க : http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-31-10-2018-news2561.html

இன்று சஷ்டி!(30.10.2018) :

Image
சஷ்டி விரதம் என்பது மிகப் பெரிய விரதம். திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. ஐஸ்வர்யத்தைக் தரக்கூடியது ஆறு (6) என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது. ஜோதிடத்தில் 6ஆம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார். திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடியவரும் சுக்கிரன்தான். எனவே, சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம். 16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப் பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு. இதன் காரணமாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறுவது தவறு. சஷ்டி விரத நாட்களில் சிரத்தையாக இருந்து விரதம் மேற்கொள்பவர்கள் அனைத்து சிறப்பையும் பெற முடியும் என்பதை உறுதியுடன் சொல்லலாம். என்னிடம் ஜாதகம் பார்க்க வரும் சிலருக்கு கூட சஷ்டி விரதம் இருக்க வலியுறுத்தியுள்ளேன். சஷ்டிக்கு முன்பாக திருச்செந்தூருக்கு சென்று அங்கேயே தங்கியிருந்து சூரியன் மறைவுக்கு பின்னர் சிறிதளவு சாப்பிட்டு விட்டு, இரவில் பால் மட்...

இன்றைய ராசிபலன்கள்(30.10.2018) :

Image
 செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-30-10-2018-astro1.html 

இன்றைய நாள் எப்படி?30.10.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,ஐப்பசி மாதம் 13ம் தேதி,ஸபர் 20ம் தேதி, *30.10.18 செவ்வாய்க்கிழமை,தேய்பிறை,சஷ்டி திதி மதியம் 2.29 வரை;அதன்பின் சப்தமி திதி,திருவாதிரை நட்சத்திரம் காலை 6.58 வரை;அதன்பின் பூசம் நட்சத்திரம்,மரண-சித்த யோகம். சந்திராஷ்டமம் - மூலம்.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-30-10-2018-news2560.html

சூரியனுக்கு காட்சி அளித்த சிவபெருமான்!!

Image
ஒரு முறை சூரிய பகவான் கிரிவலம் குறித்து கேலியாக பேசிவிட்டார்.அதற்கு அவர் அனுபவித்த சோதனைகளைப் பற்றி கேளுங்கள். சூரிய பகவான் உலகமெங்கும் உள்ள பல மலைகளின் மேல் தன் கதிர்களை வீசியபடியே, ஏழு குதிரைகள் பூட்டிய தன் தேரின் மீது பவனிவந்து கொண்டே இருப்பார். ஒரு முறை, அவர் திருவண்ணாமலையின் மீது, வழக்கமான அலட்சியத்துடன் சுட்டெரிக்கும் கதிர்களை வீசிய படியே வந்து கொண்டிருந்தார். சிவனே அல்லவா அண்ணாமலையாக அங்கு எழுந்தருளியிருக்கிறார். அவரது நெற்றிக்கண் முன், சூரியனின் வெப்பம் மிகச்சாதாரணமானதல்லவா!இதை உணராத சூரியன், கர்வத்துடன் தன் உஷ்ணத்தை அண்ணாமலை மீது பாய்ச்ச அதனால் அவருக்கு  வந்த வினை, அவரது தேர்சக்கரங்கள் வெடித்துச் சிதறின, தேர் சரிந்தது, ஏழு குதிரைகளும் உயிரை விட்டன. உடனே சூரியபாகவான் பிரம்மாவை நோக்கி, பிரம்மனே! காலத்தின் இயக்கமே நின்று விட்டதே! இதென்ன சோதனை, எனக் கதறினான். அப்போது அசரீரி ஒலித்தது. சூரியனே! நீ மற்ற மலைகளைப் போல் அண்ணாமலையை வெறும் கற்பாறையென நினைக்காதே. அங்கே சிவனே மலையாக இருக்கிறார். அங்கு செல்லும் போது மலையை வலம் செய்தபடியே ஒதுங்கிச் செல்ல வேண்டும்.அந்த கிரிவ...

பைரவரை வணங்கினால் எங்கும் வெற்றி எதிலும் வெற்றி :

Image
ஒருசமயம் பிரம்மன், சிவபெருமானை கண்டும் வணங்காமல் ஆணவமாக சென்று விடுகிறார். “மகாவிஷ்ணுவே மகேஸ்வரனை வணங்கிவிட்டு செல்கிறார். ஆனால் இந்த பிரம்மனின் கர்வத்தை பாருங்கள்“ என்று கைலாய மலையில் இருக்கும் தேவரிஷிகள் பேசி கொண்டார்கள். ஆனால் ஈசன், பிரம்மனின் செயலை பெரியதாக எடுத்து கொள்ளவில்லை. இருந்தாலும், உலகமே வணங்கும் தம் கணவரை, பிரம்மதேவன் இப்படி அலட்சியம ் செய்கிறாரே என்று மனம் வருந்தினார் அன்னை பார்வதிதேவி. தன் மனகவலையை தன் கணவரிடமும் சொன்னார் தேவி. இதனால் பிரம்மனை அழைத்த ஈசன், “உன்னை விட பெரியவர்களாக இருந்தாலும், சிறியவர்களாக இருந்தாலும் எவருக்கும் மரியாதை தர வேண்டும்.” என்று பிரம்மனுக்கு அறிவுரை சொன்னார் சிவன். கிளி பிள்ளைக்கு சொல்லுவது போல் பிரம்மனுக்கு புத்தி சொன்னாலும் அதை காது கொடுத்து கேட்காமல் அங்கும் இங்குமாக பார்ப்பதும் சைகையை செய்து கொண்டே சிவனின் பேச்சை அலட்சியம் செய்தபடி இருந்தார் பிரம்மன்.“சிவனே.. எமக்கும் எல்லாம் தெரியும். உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் ஐந்து தலைதான். அதனால் நீங்கள் எனக்கு எந்த அறிவுரை சொல்லியும் என் நேரத்தையும் உங்கள் நேரத்தையும் வீணாக்க வேண்டாம்” என்றார் ப...

இன்றைய ராசிபலன்கள்(29.10.2018) :

Image
 திங்கட்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-29-10-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?29.10.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம், ஐப்பசி மாதம் 12ம் தேதி, ஸபர் 19ம் தேதி, *29.10.18 திங்கட்கிழமை,தேய்பிறை,பஞ்சமி திதி மாலை 4.39 வரை;அதன்பின் சஷ்டி திதி,மிருகசீரிடம் நட்சத்திரம் காலை 8.22 வரை;அதன்பின் திருவாதிரை நட்சத்திரம்,அமிர்த-சித்த யோகம்.சந்திராஷ்டமம் - கேட்டை.மேலும் படிக்க : http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-29-10-2018-news2559.html

இன்றைய ராசிபலன்கள்(27.10.2018) :

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-27-10-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?27.10.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம், ஐப்பசி மாதம் 10ம் தேதி, ஸபர் 17ம் தேதி, *27.10.18 சனிக்கிழமை,தேய்பிறை,திரிதியை திதி இரவு 8.19 வரை;அதன்பின் சதுர்த்தி திதி,கார்த்திகை நட்சத்திரம் காலை 10:22 வரை;அதன்பின் ரோகிணி நட்சத்திரம்,அமிர்த யோகம்.சந்திராஷ்டமம் - விசாகம்.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-27-10-2018-news2557.html

பிள்ளையார் எறும்பு பிறந்த கதை!!

Image
முப்பத்து முக்கோடி தேவர்கள் முதல் ஓரறிவு கொண்ட உயிரினங்கள் வரை எல்லா ஜீவன்களுக்கும் படியளப்பவர் பரமேஸ்வரன். இதை அறியாதவளா பார்வதிதேவி?! ஆனாலும் அவளுக்கு, ‘இந்தத் தொழிலை ஈசன் சரிவர கவனிக்கிறாரா?’ என்றொரு சந்தேகம். அதற்குத் தீர்வு காண முனைந்தாள். சிறு பாத்திரம் ஒன்றை எடுத்து வந்து அதற்குள் கறுப்பு எறும்புகள் சிலவற்றைப் பிடித்துப் போட்டு மூடி விட்டாள். ‘இந்த எறும்புகளுக்கு ஈசன் எப்படி உணவு அளிக்கிறார், பார்க்கலாம்!’ என்பது அவளது எண்ணம். மறு நாள், ”ஸ்வாமி, நேற்று எல்லா ஜீவராசிகளுக்கும் படியளந்தீர்களா?” என்று ஈசனிடம் கேட்டாள். ‘உலகநாயகி தன்னோடு விளையாடுகிறாள்!’ என்பது ஈசனுக்குப் புரிந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ”இதிலென்ன சந்தேகம்… பாத்திரத்தில் நீ சிறை வைத்த எறும்புகளைப் பார்த்திருந்தால், இந்தக் கேள்விக்கே இடம் இருந்திருக்காது!” என்றார். பார்வதிதேவி, ஓடோடிச் சென்று பாத்திரத்தைத் திறந்து பார்த்தாள்! சுறுசுறுப்புடன் சுற்றிக் கொண்டிருந்தன எறும்புகள். அத்துடன் சில அன்னப் பருக்கைகளும் கிடந்தன. ‘ச்சே… வீணாக ஸ்வாமியை சந்தேகப்பட்டு விட்டோமே!’ என வருந்தினாள் தேவி. ”மகேஸ்...

பைரவர் யாருடைய அம்சம்?

Image
பைரவர், வீரபத்திரர், ÷க்ஷத்ர பாலர் ஆகிய மூவரும் சிவபெருமானுடைய அம்சம் தான். தீய அரக்கர்களை அழித்தபோது பைரவராகவும், தட்சனின் யாகத்தை அழித்தபோது வீரபத்திரராகவும், திருத்தலங்களைக் காக்கும் நிலையில் ÷க்ஷத்ர பாலராகவும் போற்றப்படுகிறார். புராண அடிப்படையில் இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. வில்வம், செம்பருத்தி, தவிர்த்த மற்ற மலர்களை பைரவருக்கு பயன்படுத்தலாம். சம்பா சாதம், உள ுத்தம்பருப்பு கலந்த தயிர்சாதம், அப்பம், மிளகுவடை ஆகியவை இவருக்குரிய நைவேத்யம். எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். துன்பங்களும், துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகிப் போனால் வாழ்க்கை என்பதை வாழப் பிடிக்காமல் மனம் ஏங்கும். அப்படி சோகத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் அமுத மொழியாக பைரவர் வழிபாடு கூறப்படுகிறது. கடவுள் வழிபாடு செய்துவிட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார்.  

இன்றைய ராசிபலன்கள்(26.10.2018) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-26-10-2018-astro1.html 

இன்றைய நாள் எப்படி?26.10.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம், ஐப்பசி மாதம் 9ம் தேதி, ஸபர் 16ம் தேதி, 26.10.18 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, துவிதியை திதி இரவு 9:40 வரை;அதன்பின் திரிதியை திதி, பரணி நட்சத்திரம் காலை 10:51 வரை; அதன்பின் கார்த்திகை நட்சத்திரம், சித்தயோகம். சந்திராஷ்டமம் - சுவாதி.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-27-10-2018-news2556.html

பிரிந்த தம்பதி ஒன்று சேர வழி :

Image
இதிகாச ரத்தினம் என்று சிறப்பிக்கப்படும் ராமாயணத்தில் சுந்தரகாண்டம் பகுதி மிகவும் புனிதமானது. சுந்தரம் என்பதற்கு "அழகு' என்பது பொருள். சீதாதேவியைப் பிரிந்த ராமபிரானுக்கு அனுமன் மூலம்,"கண்டேன் சீதையை' என்ற நல்ல செய்தி கிடைத்தது இதில் தான். அசோகவனத்தில் சோகமே உருவாக அமர்ந்திருந்த சீதைக்கு நம்பிக்கை ஒளியாக அனுமன் தோன்றி ராமனின் வரவிருப்பதை எடுத்துச் சொன்னதும் இப்பகுதியே. கிரக தோஷத்தினால், பல்வேறு சோதனைகளில் சிக்கி செய்வதறியாது திகைப்பவர்கள், திருமணமாகாத கன்னியர்கள் மிகச் சிறந்த பரிகாரமாக சுந்தர காண்ட பாராயணத்தை அருளாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர இதை விடச் சிறந்த பரிகாரம் வேறு இல்லை. காயத்ரிமந்திரம் ஜெபித்த பலனை சுந்தரகாண்டத்தின் மூலம் பெறமுடியும். சுந்தரகாண்டத்தில் 68சர்க்கங்கள்(பகுதிகள்) உள்ளன. வளர்பிறையில் நல்லநாளில் தொடங்கி, தொடர்ந்து ஒருநாளைக்கு ஒரு சர்க்கம் வீதம் 68 நாட்கள் பாராயணம் செய்யவேண்டும். 68வது நாளில் ராம பட்டாபிஷேக சர்க்கத்தையும் சேர்த்து படித்து நிறைவு செய்யவேண்டும். தினமும் ராமர் படத்தின் முன் பால் அல்லது பழம் படைத்து வழிபட...

பெருவாழ்வு கிட்டும் பைரவர் வழிபாடு :

Image
பைரவப் பெருமானை காலையில் வணங்கினால் சர்வ நோய்கள் நீங்கும். நண்பகலில் வணங்கினால் சித்திகள் கிட்டும். மாலையில் வழிபட்டால் சகல பாவங்களும் விலகும். அர்த்த சாமத்தில் வழிபட்டால் வாழ்வில் எல்லா வளமும் பெருகி மன ஒருமைப்பாடும் கிடைத்து முக்திநிலை என்ற இறைப்பரம்பொருளான பைரவப் பெருமானை அடையும் சாகாக் கல்வியும் மரணமில்லாப் பெருவாழ்வும் கூட கிட்டும். பைரவப் பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல் தயிர் சாதம் தேன் செவ்வாழை வெல்லப் பாயாசம் அவல் பாயாசம் உளுந்து வடை சம்பா அரிசி சாதம் பால் மற்றும் பல பழவகைகள் வைத்து வழிபாடு செய்வது உத்தமம். பைரவ மூர்த்திக்குப் பிடித்தமானது சந்தன காப்பு. பால் தேன் பன்னீர் பழரசம் அபிஷேகமும் மிக விஷேடம். இதில் வாசனை திரவியங்களான புனுகு அரகஜா ஜவ்வாது கஸ்தூரி கோரோசனை குங்குமப்பூ பச்சை கற்பூரம் சேர்த்து சந்தனகாப்பு செய்து வழிபடுவது என்பது தேவர்களின் ஆண்டுக்கணக்கில் ஒரு கோடி ஆண்டு பைரவ லோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் என்று சிவபுராணம் கூறுகிறது. விஜய் சுவாமிஜி, செல் :+91 9443351497 , 9842499006, www.bairavafoundation.org www.swarnabhairavapeedam.o rg

இன்றைய ராசிபலன்கள்(25.10.2018) :

Image
வியாழக்கிழமை , மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-25-10-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?25.10.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,ஐப்பசி மாதம் 8ம் தேதி,ஸபர் 15ம் தேதி, *25.10.18 வியாழக்கிழமை,வளர்பிறை,பிரதமை திதி இரவு 10.34 வரை;அதன்பின் துவிதியை திதி,அசுவினி நட்சத்திரம் காலை 11.29 வரை;அதன்பின் பரணி நட்சத்திரம்,அமிர்த-சித்த யோகம். சந்திராஷ்டமம் - சித்திரை.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-25-10-2018-news2555.html

இன்று அன்னாபிஷேக வழிபாடு!!(24.10.2018) :

Image
ஒவ்வொரு மாதத்தில் பவுர்ணமி அன்றும் நம் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் நைவேத்தியம் உண்டு என்று பெரியோர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். அந்த வகையில் ஐப்பசி மாதம் வருகிற பவுர்ணமியில் அனைத்து சிவாலயங்களில் மஹா அன்னாபிஷேக விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். அதுசமயம் பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு வேண்டுகிறோம். அன்னாபிஷேகத்திற்கு வரலாறு அல்லது தகவல்கள் உண்டா? 1. தட்சனிடம் பெற்ற சாபம் சிவபெருமானால் சந்திரன் சாபநிவர்த்தி  செய்ததது இம்மாதம் என்று குறிப்பிடப்படுகிறது. " சந்திரனை தன் சூட்டினார் போலும் - அப்பர் தேவாரம். 2. அறிவியலின் படி சந்திரன் இம்மாதத்தில் தான் (ஐப்பசி) பூமிக்கு மிக அருகில் இருக்கும் என்று குறிக்கப்படுகிறது. 3. நவகிரகங்களில் சந்திரனுக்கு நெல் (அரிசி) உகந்தது . அதன் பொருட்டு சிவ பெருமானுக்கு லிங்கம் முழுவதும் அன்னத்தால் நிரப்பப்பட்டு வழிபாடு செய்வார்கள் . இதனால் சந்திரனின் கதிர்வீச்சு முழுவதும் சமன் செய்யப்படுகிறது. 4. சிதம்பர நடராஜர் கோயிலில் நித்யம் ஸ்படிக லிங்கத்திற்கு அன்னாபிஷேகம்  செய்வது வழக்கமாக உள்ளது. இன்றும் நீங்கள் ...

இன்றைய ராசிபலன்கள் (24.10.2018) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-24-10-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?24.10.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,ஐப்பசி மாதம் 7ம் தேதி,ஸபர் 14ம் தேதி, *24.10.18 புதன்கிழமை,வளர்பிறை,பவுர்ணமி திதி இரவு 11.01 வரை;அதன்பின் பிரதமை திதி,ரேவதி நட்சத்திரம் காலை 10.27 வரை;அதன்பின் அசுவினி நட்சத்திரம்,மரண யோகம்.சந்திராஷ்டமம் - அஸ்தம். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-24-10-2018-news2554.html

கர்மாவை அழிப்பது எப்படி??

Image
ஒரு நாள் மாலை நேரம் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி மலைமீது உலா செல்லும்போது டிஆர்பி எனப்படும் டி.ஆர்.பி ராமச்சந்திர ஜயர் புறப்பட்டார்திடீரென அவருக்கு ஒரு சந்தேகம் தோன்றியது ஸ்ரீ பகவான் இடம் கேட்டார். " பகவான் ஒருவர் தனது கர்மாவை பிறப்பினால் ஏற்பட்டிருக்கும். தன்னுடைய விதியை முற்றிலுமாக மாற்றி கொள்ள இயலுமா?". என்றார் பகவானே நிச்சயமாக 100% மாற்றிக்கொள்ள முடியும்" என்று சொல்லிவிட்டு சற்று நேரம் மௌனமாக நடந்தார் பின். ஜயரிடம் ". கர்மா. ஒருவரை இரண்டு விதங்களில் பாதிக்கிறது.  கடந்த கடந்த கால நிகழ்வுகள். ஒருவர் செய்த வினைகள் .வெற்றி .தோல்வி. அதற்கான முயற்சிகள். அதனால் அடுத்தவருக்குச் செய்த துன்பம் போன்றவற்றால் வரும் கர்மா ஒருபுறம்  எதிர்காலத் திட்டங்கள். ஆசைகள். லட்சியங்கள் .அதை அடைவதற்காக செய்யும் முயற்சிகள் .அதனால் விளையும் கர்மாக்கள் மறு புறம். பிராரப்த கர்மாவை  ஒருவர் முயன்று நிர்மூலம் செய்து விட்டால் 50% கர்மா அழிந்துவிடும் . பழையது அழிந்தது போல் புதியதும் அழிந்துவிடும் என்று ஒருவர்உறுதி பூண்டால் எஞ்சி இருப்பது நிகழ்காலம் மட்டும் தானே!" என்றார் பகவான் ...

பைரவ அஷ்டமி விபரம் :

Image
ஒவ்வொரு தமிழ் மாத அஷ்டமியும் ஒவ்வொரு பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த நாட்களில் பைரவரை வழிபாட்டால் எல்லா நலமும் பெற்று வாழலாம். பைரவர் மிக சக்தி வாய்ந்தவர்.   அஷ்டமி விபரம்: சித்திரை: - சநாதனாஷ்டமி வைகாசி: - சதசிவாஷ்டமி ஆணி: - பகவதாஷ்டமி ஆடி: - நீலகண்டாஷ்டமி ஆவணி: - ஸ்தாணு அஷ்டமி புரட்டாசி: - சம்புகாஷ்டமி ஐப்பசி: - ஈஸ்வராஷ்டமி கார்த்திகை: - ருத்ராஷ்டமி மார்கழி: - சங்கராஷ்டமி தை: - தேவதேவாஷ்டமி மாசி: - மகேஸ்வராஷ்டமி பங்குனி: - த்ரயம்பகாஷ்டமி

இன்றைய ராசிபலன்கள்(23.10.2018) :

Image
செவ்வாய்க்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-23-10-2018-astro1.html 

இன்றைய நாள் எப்படி?23.10.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,ஐப்பசி மாதம் 6ம் தேதி,ஸபர் 13ம் தேதி, *23.10.18 செவ்வாய்க்கிழமை,வளர்பிறை,சதுர்த்தசி திதி இரவு 10.25 வரை;அதன்பின் பவுர்ணமி திதி,உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 9.33 வரை;அதன்பின் ரேவதி நட்சத்திரம்,அமிர்த-சித்த யோகம்.சந்திராஷ்டமம் - உத்திரம்.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-23-10-2018-news2553.html

இன்று பிரதோஷம்!!(22.10.2018) :

Image
சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை. பிரதோஷம் என்றால் என்ன? சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான். தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது திருமகள், ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துப மணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. லட்சுமியைத் திருமால் ஏற்றுக் கொண்டார். மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. இதைக்கண்டு தேவர்களும், முனிவர்களும் பெரிதும் நடுங்கினர். உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன் அந்த ஆலகால விஷத்தை உண்டார். தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன் தளிர்க...

இன்றைய ராசிபலன்கள்(22.10.2018) :

Image
திங்கட்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-22-10-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?22.10.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,ஐப்பசி மாதம் 5ம் தேதி,ஸபர் 12ம் தேதி, *22.10.18 திங்கட்கிழமை,வளர்பிறை,திரையோதசி திதி இரவு 10.22 வரை;அதன்பின் சதுர்த்தசி திதி,பூரட்டாதி நட்சத்திரம் காலை 8.07 வரை;அதன்பின்உத்திரட்டாதி நட்சத்திரம்,மரண-சித்த யோகம்.சந்திராஷ்டமம் - பூரம்.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-22-10-2018-news2552.html

இன்று ஏகாதசி!!(20.10.2018) :

Image
ஏகாதசியை விட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் கூறுகின்றன. அதனால், ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்திற்கு தயாராக வேண்டும். அன்றைய தினம் துளசி இலைகளை பறிக்கக் கூடாது, அதனால், அதை முதல் நாளே பறித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள், பழங்களை நிவேதனம் செய்து சாப்பிடலாம். சிறிது பலகாரங்களையும் ஏற்றுக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் பகலில் தூங்கக் கூடாது. இரவில் கண்டிப்பாக பஜனை செய்ய வேண்டும். இது முடியாவிட்டால், விஷ்ணு பற்றிய நூல்களை படிக்கலாம். இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும், உடல் ஆரோக்கியமாகும், வீட்டில் செல்வம் பெருகும், சந்ததி வளரும் என்பது நம்பிக்கை. வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள், மறுநாள் துவாதசி அன்று "பாரனை" என்னும் விரதத்தை மேற் கொள்வார்கள். ஏகாதசி மரணமும், துவாதசி தகனமும் யோகிகளுக்கு கூட கிடைக்காது என்ற சொல் வழக்கில் இருந்தே இந்த விரதங்களின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம்.

இன்றைய ராசிபலன்கள்(20.10.2018) :

Image
சனிக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-20-10-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?20.10.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,ஐப்பசி மாதம் 3ம் தேதி,ஸபர் 10ம் தேதி, *20.10.18 சனிக்கிழமை,வளர்பிறை,ஏகாதசி திதி இரவு 7.44 வரை; அதன்பின் துவாதசி திதி,சதயம் நட்சத்திரம் நாள் முழுவதும்; அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம்,அமிர்த யோகம். சந்திராஷ்டமம் - ஆயில்யம்.மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-20-10-2018-news2550.html

மனதுக்குப்பிடித்த வாழ்க்கைத் துணை அமையவும், திருமணத்தடை அகலவும் பைரவர் வழிபாடு :

Image
வெள்ளிக்கிழமை ராகு கால நேரமான காலை 10.30 முதல் 12 மணிக்குள் கால பைரவருக்கு சந்தனக்காப்பு பூச ஏற்பாடு செய்ய வேண்டும்;புனுகு பூசச் செய்து,தாமரை மலரை அணிவிக்க வேண்டும்;அவல் கேசரி,பானகம்,சர்க்கரைப்பொங ்கல் இவைகளை படையலாக்க வேண்டும்;படைத்து நமது பெயருக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும். மேலும் ஞாயிறு தோறும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில் காலபைரவருக்கு சந்தனக்காப்பு பூச வைத்து,நமது பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளுக்கும்,8 ஞாயிற்றுக்கிழமைகளுக்கும் வழிபாடு செய்து வர எப்பேர்ப்பட்ட திருமணத்தடையாக இருந்தாலும் அது நீங்கிவிடும்.

விஜயதசமி நன்னாளில் கல்வியை தொடங்குவது ஏன்?

Image
விஜயதசமி நன்னாளில் பெரும்பாலான குழந்தைகளைப்படிக்கவைக்கும் வழக்கம் எப்படி ஏற்பட்டது? ஆதிசங்கரர், தன்னுடைய சுற்றுப்பயணத்தின்போது `மண்டனமிஸ்ரர்' என்னும் வேறு சமயத்தைப் பின்பற்றும் ஞானியுடன் விவாதம் செய்ய நேர்ந்தது. போட்டியில் ஆதிசங்கரர் வெற்றிபெறவே, மண்டனமிஸ்ரர் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, சங்கரரின் சீடராகி அவருடனே புறப்படுகிறார். அப்போது மண்டனமிஸ்ரரின் மனைவியான சரசவாணி தன்னுடைய கணவரைப் பிரிய மனமில்லாமல் தானும் அவர்களுடன் வருவதாகக் கூறுகிறாள். ஆனால் ஆதிசங்கரர், பெண்களை தன் சிஷ்யைகளாக ஏற்றுக்கொள்வதில்லை என்று கூற, சரசவாணியோ தான் அவர்களுடன் கூடவே வராமல் அவர்களுக்குப்பின்னால் தொடர்ந்து வருவதாகவும், சங்கரரோ மற்ற சீடர்களோ திரும்பிப் பார்க்க வேண்டாம் எனவும், தன்னுடைய கால் கொலுசின் ஒலி கேட்பதை வைத்து, தான் வருவதை அறியலாம் என்றும் கூறுகிறாள்.மேலும் படிக்க : http://goo.gl/thlBTb

இன்றைய ராசிபலன்கள்(19.10.2018) :

Image
வெள்ளிக்கிழமை, மேலும் படிக்க :http://bairavafoundation.org/astrology_aries-19-10-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?19.10.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,ஐப்பசி மாதம் 2ம் தேதி,ஸபர் 9ம் தேதி, *19.10.18 வெள்ளிக்கிழமை,வளர்பிறை,தசமி திதி மாலை 5.54 வரை;அதன்பின் ஏகாதசி திதி,அவிட்டம் நட்சத்திரம் அ.காலை 4.03 வரை;அதன்பின் சதயம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - பூசம்.மேலும் படிக்க :http://bairavafoundation.org/today-tamil-daily-calendar-19-10-2018-news2549.html

ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு விரதம் இருப்பது எப்படி?

Image
வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும். தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போடுவது சிறந்தது.   தேய்பிறை அஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர் களை கொண்டு அர்ச்சித்து, வெள்ளை பூசணியில் நெய் தீபம் ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும்.   ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 தெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்து, வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும்.   இவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறலாம்.   நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய...

சந்தோஷம் தரும் சரஸ்வதி விரத பூஜை !!

Image
நவராத்திரி விழாவின் 9-ம் நாள் விழா சரஸ்வதி பூஜையாகும். அன்றைய தினம் வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விழாவின் 9-ம் நாள் விழா சரஸ்வதி பூஜையாகும். அன்றைய தினம் வீடுகளிலும், அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். சரஸ்வதி வழிபாட்டுக்கு முன்னதாக, வழிபாடு செய்யும் இடத்தை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். சந்தனம் தெளித்து குங்குமம் இட வேண்டும். சரஸ்வதியின் படத்திற்கும், படைக்கப்பட வேண்டிய பொருட்களுக்கும் சந்தனம் தெளித்து, குங்குமம் இடுவதும் அவசியம். கல்விக்கு அதிபதியான சரஸ்வதி அன்னையின், அருள் பார்வையில் படும் படியாக புத்தகங்களை வைத்து முன்பாக வாழை இலை விரித்து அதில் படையலுக்காக சமைக்கப்பட்ட நிவேதனங்களை வைக்க வேண்டும். சுண்டல், சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவற்றை சரஸ்வதி தேவிக்கு நிவேதனமாக படைக்கலாம். அவல், பொரி, கடலை, பழங்களும் வைக்க வேண்டும், செம்பருத்தி, ரோஜா, வெண் தாமரை போன்றவை சரஸ்வதி தேவிக்கு உகந்த மலர்களாகும். இவற்றை மாலை தொடுத்து கல்வியின் அத...

இன்றைய ராசிபலன்கள்(18.10.2018):

Image
வியாழக்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-18-10-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?18.10.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,ஐப்பசி மாதம் 1ம் தேதி,ஸபர் 8ம் தேதி, *18.10.18 வியாழக்கிழமை,வளர்பிறை,நவமி திதி மதியம் 3.52 வரை;அதன்பின் தசமி திதி,திருவோணம் நட்சத்திரம் இரவு 1.35 வரை;அதன்பின் அவிட்டம் நட்சத்திரம்,சித்த யோகம்.சந்திராஷ்டமம் - புனர்பூசம்,பூசம். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-18-10-2018-news2548.html

கொடிய தோஷங்களை போக்கும் பாதாள பைரவர் :

Image
ராமேஸ்வரம் ராமலிங்க சுவாமி கோவிலில் விசாலாட்சி அம்மன் சன்னிதி இருக்கிறது. இந்த சன்னிதியின் அருகில், ராமர் தன் வில்லால் உருவாக்கிய ‘கோடி தீர்த்தம்’ அமைந்துள்ளது. சிவலிங்க பிரதிஷ்டையின் போது ராமர், இந்த தீர்த்த நீரையே பயன்படுத்தியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. வட இந்தியாவில் இருந்து வரும் பக்தர்கள் கங்கை நீரை கொண்டு, இங்குள்ள ராமலிங்கத்தையும், இங்குள்ள கோடி தீர்த்தத்தை எடுத்துச் சென்று காசியில் உள்ள காசி விஸ்வநாதரையும் பூஜிப்பது வழக்கமாக நடைபெற்றுவரும் நிகழ்வாகும். கோடி தீர்த்தம் அருகில் பாதாள பைரவர் அருள்பாலிக்கிறார். ராமபிரான், இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டபோது, அவரைப் பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது. ராமரை விட்டு நீங்கிய பிரம்மஹத்தியால் பிறருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, ஈசன் பைரவ மூர்த்தியை அனுப்பினார். பைரவர், பிரம்மஹத்தியை தனது காலால் அழுத்தி பாதாளத்தில் தள்ளினார். எனவே அவர் பாதாள பைரவர் என அழைக்கப்படுகிறது. இந்த பைரவரை வழிபட்டால் கொடிய தோஷங்களும், வறுமை, நோய் யாவும் உடனடியாக அகலும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பாதாள பைரவருக்கு 5 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழி...

இன்றைய ராசிபலன்கள்(17.10.2018) :

Image
புதன்கிழமை, மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/astrology_aries-17-10-2018-astro1.html

இன்றைய நாள் எப்படி?17.10.2018 தமிழ் பஞ்சாங்கம் :

Image
இன்று! ஸ்ரீவிளம்பி வருடம்,புரட்டாசி மாதம் 31ம் தேதி,ஸபர் 7ம் தேதி, *17.10.18 புதன்கிழமை,வளர்பிறை,அஷ்டமி திதி மதியம் 1.48 வரை;அதன்பின் நவமி திதி,உத்திராடம் நட்சத்திரம் இரவு 10.58 வரை;அதன்பின் திருவோணம் நட்சத்திரம்,அமிர்த-சித்த யோகம்.சந்திராஷ்டமம் - திருவாதிரை,புனர்பூசம். மேலும் படிக்க :http://www.bairavafoundation.org/today-tamil-daily-calendar-17-10-2018-news2547.html

இன்று அஷ்டமி !!(16.10.2018):

Image
எல்லா சிவ ஆலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார். காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பார்த்த நித்யபூஜா விதி கூறுகிறது. ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும், இலுப்பை எண்ணை, விளக்கு எண்ணை, தேங்காய் எண்ணை, நல்லஎண்ணை, பசு நெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றலாம். ஒன்றிலிருந்து ஒன்றை ஏற்றாமல் தனித்தனி தீபமாக ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம்.அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம், நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும். சனி பிரதோஷத்தன்று பைரவருக்...