இன்று அன்னாபிஷேக வழிபாடு!!(24.10.2018) :

ஒவ்வொரு மாதத்தில் பவுர்ணமி அன்றும் நம் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் நைவேத்தியம் உண்டு என்று பெரியோர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன்.

அந்த வகையில் ஐப்பசி மாதம் வருகிற பவுர்ணமியில் அனைத்து சிவாலயங்களில் மஹா அன்னாபிஷேக விழா மிகவும் சிறப்பாக நடைபெறும்.

அதுசமயம் பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு வேண்டுகிறோம்.

அன்னாபிஷேகத்திற்கு வரலாறு அல்லது தகவல்கள் உண்டா?

1. தட்சனிடம் பெற்ற சாபம் சிவபெருமானால் சந்திரன் சாபநிவர்த்தி  செய்ததது இம்மாதம் என்று குறிப்பிடப்படுகிறது.

" சந்திரனை தன் சூட்டினார் போலும் - அப்பர் தேவாரம்.

2. அறிவியலின் படி சந்திரன் இம்மாதத்தில் தான் (ஐப்பசி) பூமிக்கு மிக அருகில் இருக்கும் என்று குறிக்கப்படுகிறது.

3. நவகிரகங்களில் சந்திரனுக்கு நெல் (அரிசி) உகந்தது . அதன் பொருட்டு சிவ பெருமானுக்கு லிங்கம் முழுவதும் அன்னத்தால் நிரப்பப்பட்டு வழிபாடு செய்வார்கள் . இதனால் சந்திரனின் கதிர்வீச்சு முழுவதும் சமன் செய்யப்படுகிறது.

4. சிதம்பர நடராஜர் கோயிலில் நித்யம் ஸ்படிக லிங்கத்திற்கு அன்னாபிஷேகம்  செய்வது வழக்கமாக உள்ளது. இன்றும் நீங்கள் கண்டு களிக்கலாம்.

5. அன்னாபிஷேகத்தின் பொழுது நான்கு வேதங்களும் - திருமுறை பாராயணங்களும் நடைபெறும்.


6. சுவாமிக்கு சாற்றப்பட்ட அன்னத்தை மூன்றில் ஒரு பகுதியை கோயில் ஏரி , குளம் , ஆறு அல்லது கிணற்றில் விட்டு வழிபாடு செய்வார்கள்.

7. நம் மக்களுக்கு என்றும் உணவு - நீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்க இறைவனுக்கு அன்னாபிஷேத்தை செய்து வழிபாடு செய்து வருகிறோம்.

8. சிவ பெருமானுக்கு அபிஷேக பிரியர் என்று பெயர் வழங்கப்படுகிறது. அந்த வகையில் அன்னாபிஷேகத்தையும் சேர்த்து அன்று முதல் இன்று வரை வழிபாடு செய்து வருகிறோம்.

9. சிவ பெருமானுக்கு சுத்த அன்னம் தான் நித்தலும் நைவேத்யமாக காட்டப்படுகிறது.

10. எந்த பவுர்ணமியில் இல்லாத ஒன்று இந்த பவுர்ணமிக்கு  ஓர் சிறப்பு உள்ளது. காரணம் இந்த பவுர்ணமியில் தான் சுவாமிக்கும் அன்னம் சாத்தப்படுகிறது. பக்தர்களுக்கும்  பசி தீர உணவு வழங்கப்படுகிறது.

எனவே அன்பர்களே அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று இறைவனை தரிசித்து புண்ணியம் பெறுமாறு வேண்டுகிறோம்.


Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :