இன்று குருபெயர்ச்சி!!(04.10.2018) :

இன்று குரு பெயர்ச்சி தினம் என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள குரு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.  பக்தர்கள் இதில் கலந்து கொண்டு குரு பகவான் அருள் பெறுக.

குரு பெயர்ச்சி பலன்கள் :

வீரமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசிக்காரர்களே. ராசிக்கு 7வது வீடான துலாம் ராசியில் அமர்ந்து சம சப்தமபார்வையை வீசும் குரு பகவான் அக்டோபர் முதல் ராசிக்கு 8வது வீட்டில் அமரப்போகிறார். உங்கள் ராசி அதிபதி செவ்வாயின் நட்பு கிரகம் குரு என்பதால் பாதிப்பு அதிகம் இருக்காது.

எட்டில் குரு வந்தால் எமனால் கண்டம், சுகக்கேடு' என்று புலிப்பாணி சோதிடர் சொன்னாலும் அச்சம் வேண்டாம், ஏனென்றால் குருபகவான், உங்கள் ராசி அதிபதி செவ்வாயின் நட்பு கிரகம் என்பதால் பயப்பட தேவையில்லை. நல்லதே நடக்கும். குரு இருக்கும் இடம் கெடுதி. குரு பார்வை கோடி நன்மை என்பார்கள் எனவே குரு பார்வையினால் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்று பார்க்கலாம்.

குருபகவான் எட்டாம் வீட்டில் இருந்து மீனம், ரிஷபம், கடகம் ராசிகளைப் பார்க்கிறார். இது உங்கள் ராசிக்கு 2,4,12ஆம் வீடுகளைப் பார்ப்பதால் பலன்கள் நல்லதே நடக்கும். பணப்புழக்கம் அதிகம் இருக்கும், கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். 4வது வீட்டை பார்ப்பதால் புதிய சொத்துக்களை வாங்குவீர்கள், வண்டி வாகனங்களை பராமரிப்பீர்கள். விரைய ஸ்தானமான 12வது வீட்டில் பார்வை விழுவதால் செலவுகளை சுப விரையமாக மாற்றுங்கள். வெளிநாடு செல்லும் யோகம் வரும்.
மேலும் படிக்க :https://bit.ly/2NjKfRg

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :