#vijaaiswamiji #bairavafoundation #bairavapeedam
அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல்…
இது மிகத் தொன்மையான பழக்கமாகும்.கல்லானது எவ்வளவு பாரத்தையும் தாங்கும். ஆனால் தன் சக்திக்கு மீறினால் பிளந்து போகுமே தவிர வளைந்து கொடுக்காது. இத்தகைய கல்லைப்போல் உன்
வாழ்க்கையில் உன் கற்பிற்கு சோதனை வருமானாலும் உறுதியுடன் இருந்து உன் கற்பைக் காத்துக்கொள் என்பதே இதன் பொருள்.
திருமண பந்தத்தில் இணையும் நாள்வரை, மணப்பெண்ணானவள் தன்னை பிறர் பார்த்திருந்தால், திருமண நாளில் அதை அக்னிக்குள் சமர்ப்பித்து தன்னைப் பரிசுத்தப்படுத்திக் கொள்வதுடன், தன்னை திருமணம் செய்து கொள்பவரின் பாவங்களையும் அதே அக்னியில் சாட்சியாக நீக்கி, பரிசுத்தப்படுத்தி, தன் ஆற்றல் எனும் ஆக்ஞை சக்கரத்தை கணவனுக்கு முழுமையாகக் கொடுத்து புருவ மத்தியில் திலகமாக ஏற்றுக்கொள்கிறாள்.


மணமகன் மணமகளின் வலக்கால் கட்டைவிரலைப் பிடித்து, அக்னிக்கு வலதுபுறம் அம்மி மீது ஏற்றி வைக்கிறான். "இந்தக் கல்லின் மீது ஏறி நிற்பாயாக. இந்தக் கல்லைப்போல நீ மனம்கலங்காமல் உறுதியாக இருக்க வேண்டும். இல்லறவாழ்வில் உனக்கு ஏற்படும் இடர்களைப் பொறுத்துச் சகித்துக் கொள்ள வேண்டும். எது வந்தாலும் அசையாமல் ஏற்றுக்கொள்" என்று கூறி, மனோதத்துவ அடிப்படையில் அவளுக்கு மனோபலம் அளிக்கிறான். எந்த உலோகத்தையும்விடக் கல் உறுதியானது. வளைக்கவோ, உருக்கவோ முடியாதது. அதனால்தான் இந்த பாவனைக்கு மிக உறுதியான கல்லான அம்மியை வைத்து உபயோகிக்கிறார்கள்.பெண்ணின் கழுத்தில் மங்கல நாண் சூடிய கணவன், மணப்பெண்ணைப் பார்த்து, இனி நான் உனது உயிர்மூச்சாகவும், கல்லைப்போல மன உறுதியுடனும் இருந்து உன் வாழ்க்கைக்கு வழிகாட்டுவேன் என்பதை கூறவே அம்மி மீது காலை வைத்து மெட்டியை அணிவிக்கிறான்.
அருந்ததி பார்த்தல் :
அதன்பின் மணமக்கள் அருந்ததி தரிசனம் செய்கிறார்கள். அருந்ததி காணக்கிடைப்பதற்கரிய அருமையானநட்சத்திரம். கற்புடைய பெண் அருந்ததியைப் போல் போற்றப்படுவாள் என்பதே இதன் உட்பொருளாகும். வேள்வியை சுற்றும் மூன்றாம் சுற்றில் அருந்ததி பார்த்தல் நடைபெறும். இருவரையும் கூட்டிக்கொண்டு மண்டபத்தின் வடக்கு வாசலுக்கு வந்து வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களுக்குப் பூஜை செய்து அருந்ததியைக் காண்பிப்பர். இந்த நட்சத்திரத்தைக் காட்டுவது நல்வாழ்க்கையும், வளத்தையும் பெறுவதற்கேயாகும்.
வசிஷ்டரின் மனைவி அருந்ததி. சிறந்த பதிவிரதை. வானத்தில் துருவ மண்டலத்திற்கு அருகில் ஏழு நட்சத்திரங்களிற்கிடையில் வசிஷ்ட நட்சத்திரமும் அதன் அருகில் அருந்ததி இருப்பதாகவும் பண்டைய புராணங்கள் கூறுகின்றன.
அருந்ததியோடு சேர்த்து துருவ நட்சத்திரத்தையும் காட்டுவாள். துருவ நட்சத்திரம் விண்ணில் ஒரு நிலையான இருப்பிடத்தை கொண்டுள்ளதாலும் மற்ற விண்மீன்கள் நிலைத்திருப்பதற்குக் காரணமாகவும், கட்டுத்தறியாகவும் இருப்பதால் எங்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவீராக என்று தரிசிப்பதாகும்.
இவர்கள் எம்வாழ்க்கையில் ஒரு வழிகாட்டியாக அமைகிறார்கள். துணைவனைப்போல் மணமகனுக்கு ஸ்திரத்தன்மையும், அருந்ததியைப் போல் மணமகளுக்குப் பதிவிரதத்தன்மையும் இருத்தல் வேண்டும் என்பதாகும்.
இருவரும் உருவத்தில் தனித்தனியாக இருந்தாலும் மனதில் ஒன்றாக இணைந்து இன்ப, துன்பங்களை பகிர்ந்து வாழ வேண்டும் என்று கூறவே அம்மி மிதித்து அருந்ததி பார்க்கின்றனர்.
விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :