💥💥 பைரவப் பெருமான் ஒரு அறிமுகம் 💥💥
உலகத்தில் ஏராளமான மதங்களும், வழிபாட்டுமுறைகளும் இருக்கின்றன; ஆனால், ஒவ்வொரு மதத்திலும் ஒரே ஒரு கடவுள், ஒரே ஒரு மதப் புத்தகம், ஒரே ஒரு வழிபாட்டுமுறை என்று மட்டுமே இருக்கிறது; நமது இந்து தர்மத்தைத் தவிர!
உலகத்தில் ஏராளமான மதங்களும், வழிபாட்டுமுறைகளும் இருக்கின்றன; ஆனால், ஒவ்வொரு மதத்திலும் ஒரே ஒரு கடவுள், ஒரே ஒரு மதப் புத்தகம், ஒரே ஒரு வழிபாட்டுமுறை என்று மட்டுமே இருக்கிறது; நமது இந்து தர்மத்தைத் தவிர!
நமது இந்து தர்மத்தை நமது
முன்னோர்கள் ஷண்மத வழிபாடு என்று வகுத்துள்ளனர். ஆறு விதமான இறைவழிபாட்டுமுறைகளின்
தொகுப்பே நமது இந்து தர்மம் என்பது இதற்கான சரியான விளக்கம் ஆகும்.
விநாயகரை வழிபடுபவர்களைக் கொண்ட
வழிபாட்டு முறைக்கு காணபத்தியம் என்று பெயர்; முருகக்கடவுளை வழிபடுபவர்களை உடைய வழிபாட்டுமுறையை கவுமாரம் என்று
அழைக்கிறோம். அம்மனை வழிபடும் முறைகளின் தொகுப்பே சாக்தம் ஆகும். சூரியனை வழிபடும்
வழிபாட்டை சவுரம் என்கிறோம். விஷ்ணுவை வழிபடும் முறையை வைஷ்ணவம் என்கிறோம்.
சிவனை வழிபடும் வழிபாட்டுமுறைக்கு
சைவம் என்று பெயர். இந்த வழிபாட்டுமுறையானது உலகில் மனித இனம் நாகரீகமடைந்ததில்
இருந்தே நடைமுறையில் இருக்கிறது. இன்று மற்ற மதங்களின் தலைமை பீடங்கள் இருக்கும்
இடங்களில் கூட இந்த வழிபாடு இருந்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.
இதையே கடந்த 20,00,000
ஆண்டுகளாக நமது சிவாலயங்களில்
தென்னாடுடைய சிவனே போற்றி;
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பாடி வருகிறோம்.
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பாடி வருகிறோம்.
இந்த சிவவழிபாட்டின் ஒரு
உட்பிரிவே பைரவ வழிபாடு ஆகும். இந்த பைரவ வழிபாடு ஐந்து பெரும்பிரிவுகளைக்
கொண்டிருந்தது. இந்த ஐந்து பெரும்பிரிவுகளில் நான்கு இன்றும் நமது பாரத தேசத்தில்
ஆங்காங்கே வழிபாட்டுமுறையாக இருக்கின்றன. அவைகளை நம்மால் பின்பற்ற இயலாது;
அவை: மாவிரதம், காளாமுகம், காபாலம், பாசுபதம், ஐக்கியவாத சைவம்.
இவைகள் பல கடுமையான
கட்டுப்பாடுகளை நமது ஒரு பிறவி முழுவதும் பின்பற்ற வேண்டும். சிறிது
பின்பற்றுவதிலிருந்து நழுவினாலும், இந்த வழிபாட்டு முறையிலிருந்து நாமே விலகிவிடுவோம்.
பழமையான ரிக் வேதம், அதர்வண வேதம்; உத்திர காரணாகமம், பூர்வகாரணாகமம், அஜிதாகமம், சுப்ரபேதாகமம், அம்சுத்வேதாகமம், மகுடாகமம், ரெளரவாகமம் போன்ற ஆகமங்களிலும், பல சாஸ்திர நூல்களிலும் பைரவ
வரலாறு விரிவாக கூறப்பட்டுள்ளது. (ஆகமம் என்றால் சிவ வழிபாட்டுமுறைகளை எளிமையாகத்
தெரிவிக்கும் புராதன நூல் என்று பெயர்; இதில் சிவாலயம் கட்டும் முறைகள், வழிமுறைகளும் இருக்கும்)
ஜைன சமயத்தில் விஜயபத்ரர், வீரபத்ரர், மணி பத்ரர், ஸ்ரீபைரவர், அபராஜிதர் என்ற பெயர்களில்
க்ஷேத்ரபாலகராக வழிபட்டனர். 96 வகையான பைரவர்கள் ஜைன சமயத்தில் உள்ளனர். பௌத்த சமயத்தில் 84 வகையான வயிரவர்களும், வாமம் அல்லது சாக்தத்தில் 64 வகை வைரவர்களும், வைஷ்ணவத்தில் சக்கரத்தாழ்வார்
உருவில் பைரவரையும், கிருஸ்துவ சமயத்தில் நோவாஸ் ஆர்க்
எனப்படுவது பிரளய காலத்தில், க்ஷேத்திரபாலகரின் தோணியை
ஒத்துள்ளது. செயிண்ட் மைக்கேல், செயிண்ட் ஜார்ஜ் என கிருஸ்துவர்கள் வழிபடுவது ஸ்ரீபைரவருடன்
ஒப்பிடக் கூடியவர்கள்.
சக்திகள், தேவர்கள், யோகினிகள், சநகாதி முனிவர்கள், கிங்கரர்கள், சித்தர்கள் என அனனத்துத்
தரப்பினரும் வழிபடும் தெய்வம் ஸ்ரீகால பைரவப் பெருமான் ஆவார்.
எங்கும் எதிலும்,நீக்கமற நிறைந்து நின்று, இந்த பிரபஞ்சத்தையும், பஞ்சபூதங்களையும் சிருஷ்டித்து, உருவின்றி ஜோதியாக நிற்கும்
சர்வேஸ்வரனின் முதல் மூர்த்தமே ஸ்ரீபைரவப் பெருமான்!!!
நம் குலதெய்வம், நமது இஷ்ட தெய்வம், நமது ஜாதகப்படி நமக்கு தற்போது
நடைபெறும் திசை புக்தி அந்தரத்துக்குரிய தெய்வம் என்று எந்தக் கடவுளையும் நாம்
வழிபட்டாலும், அந்தக் கடவுள்களுக்கும், ஸ்ரீகால பைரவப் பெருமானை
வழிபடுவதற்கும் ஒரே ஒரு வித்தியாசம் உண்டு.
நாம் எந்தக் கடவுளை வழிபட்டாலும், அந்தக் கடவுளிடம் நாம் திரும்பத்
திரும்ப வேண்டும் கோரிக்கை மட்டுமே நிறைவேறும்.
ஆனால், ஸ்ரீகாலபைரவப் பெருமானை வழிபட்டால், நமக்கு என்னென்ன குறைகள் உண்டோ அத்தனைக் குறைகளையும் தானாகவே நிறைவேறும். நாம் ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபடும்போது அவரிடம் மறந்து போய் எதையாவது வேண்டிய மறந்து போனாலும்,அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை; மேலும், முற்பிறவி வரையிலும் நாம் பழுத்த சிவனடியாராக இருந்தால் அல்லது ஏதாவது ஒரு சித்தரின் நேரடி சீடராக இருந்தால் மட்டுமே இப்பிறவியில் தொடர்ந்து ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபட வேண்டும்.
ஆனால், ஸ்ரீகாலபைரவப் பெருமானை வழிபட்டால், நமக்கு என்னென்ன குறைகள் உண்டோ அத்தனைக் குறைகளையும் தானாகவே நிறைவேறும். நாம் ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபடும்போது அவரிடம் மறந்து போய் எதையாவது வேண்டிய மறந்து போனாலும்,அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை; மேலும், முற்பிறவி வரையிலும் நாம் பழுத்த சிவனடியாராக இருந்தால் அல்லது ஏதாவது ஒரு சித்தரின் நேரடி சீடராக இருந்தால் மட்டுமே இப்பிறவியில் தொடர்ந்து ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபட வேண்டும்.
ஸ்ரீகாலபைரவரும், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ணாகர்ஷண
பைரவரும் ஒருவரே!
உங்களுக்கு கடுமையான சோகங்கள், வேதனைகள், சிக்கல்கள், சிரமங்கள் இருந்தால் நீங்கள்
முதலில் வழிபட வேண்டியது ஸ்ரீகால பைரவப் பெருமானையே! சில வருடங்கள்/மாதங்கள்
ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபட்டப் பின்னர், நீங்களாகவே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாட்டிற்கு
நகர்ந்துவிடுவீர்கள்.
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
Comments
Post a Comment