💥💥இன்று ஓர் ஆலயம்💥💥
🔥🔥அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் 🔥🔥
சுவாமி : ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்.
அம்பாள் : கற்பகாம்பாள்.
தீர்த்தம் : கங்கா தீர்த்தம்.
தலச்சிறப்பு : இத்திருத்தலத்தில் 12/4/2012 அன்று திருக்குடமுழுக்கு நடைபெற்றது.  இத்தலத்தில் இறைவன் பிரமபுரீஸ்வரர், இறைவி கற்பகாம்பாளாக பக்தர்களுக்கு அருள்பாலிகின்றனர்.  எயினனூர் என்னும் இவ்வூர் மருவி ஏனாநல்லூர் என அழைக்கப்படுகிறது.
தல வரலாறு : ஏனாதிநாத நாயனார் அரசகுடும்பத்தினருக்கு வாள்வித்தை பயிற்றுவித்தவர் (இவரது காலம் கி.பி. 660 – 840 அப்பருக்கு பிற்காலத்தவர்).  இதனால் ஏனாதி நாயனாருக்கு புகழும் பெருமையும் சேர்ந்தது.  அதிசூரன் என்பவனும் வாள்  வித்தையில் பயிற்சி அளிப்பவன்.  தற்பெருமையினால் மிகக் கர்வம் கொண்டு தீய எண்ணங்களை வளர்த்துக் கொண்டான்.   இதனால் அதிசூரனுக்கு மதிப்பு குறைந்தது.  இதனால் ஏனாதி நாயனாரை எதிரியாக கருதி அவரிடம் நேரில் சென்று போர் செய்ய  அறைகூவல் விடுத்தான் அதிசூரன்.  வெளியிடத்தில் சாளக்கரை போட்டி நடக்க இருவரும் சம்மதித்தனர்.


அதிசூரனுக்கும், ஏனாதி நாயனாருக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் இருபக்கமும் பலர் உயிர் துறந்தனர்.  அதிசூரன் போரில்  தோல்வியடைந்தான்.  ஏனாதி நாயனார் தன்னைவிடச் சிறந்த பயிற்சியாளர் என்ற உண்மையை அறிந்து கொண்டாலும் அவன்  மனதின் தீய எண்ணங்கள் ஏனாதி நாயனாரைக் கொல்ல திட்டம் தீட்டியது.  ஏனாதி நாயனார் திருநீற்றுத் தொண்டில்  சிவபெருமானையும் சிவனடியார்களையும் வழிபட்டு வந்தார்.  இதனால் திருநீறு பூசிய அடியார்க்கு தீங்கு செய்ய மாட்டார்  என்பதை அறிந்தான் அதிசூரன்.  அதிசூரன் மீண்டும் ஏனாதி நாயனாரிடம் சென்று தனியாக போர்புரிய அழைப்பு விடுத்தான்.
சிவவேடம் பூண்டு சண்டைக்கு அழைக்க இதுவரை திருநீறு பூசாத அவன் நெற்றியில் சைவ சின்னமான விபூதி பட்டை  கேடயத்தால் மறைக்கப்பட்டிருந்தது கேடயம் விலகி நன்றாகத் தெரியவே அதைப் பார்த்தி ஏனாதி மிக்க மகிழ்வு கொண்டு  அமைதியாக நிற்க அதிசூரன் தன் வாளால் ஏனாதி நாயனாரை தாக்கினான்.  சிவனடியாரகத் தென்பட்டதால் அமைதியாக  இருக்கவே அதிசூரன் பழிதீர்த்து கொண்டதால் இறைவன் ஏனாதி நாயனாருக்கு காட்சி தந்து முக்தி அளித்தார்.  எனவே இத்தலம்  ஏனாதிநாத நாயனார் திருக்கோவில் எனவும் அழைக்கப்படுகிறது.
வழிபட்டோர் : ஏனாதிநாத நாயனார்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரைமாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.
கோயில் முகவரி : ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்,
ஏனாநல்லூர், கும்பகோணம்தஞ்சாவூர் மாவட்டம்.

விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.

#அருள்மிகுபிரம்மபுரீஸ்வரர்திருக்கோவில்ஏனாநல்லூர்கும்பகோணம்



Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :