பைரவர் வழிபாடு பலன்கள்....
பைரவர் வழிபாடு பலன்கள்....
மாயப் பிறப்பறுத்து மகிமைகள் பல தரும் ஸ்ரீ பைரவரைக் குறித்த ஒவ்வொரு வழிபாட்டுக்கும் குறிப்பிட்ட பலன்கள் உண்டு.
ஞாயிற்றுக்கிழமை : ராகு காலத்தில் ருத்ராபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால் திருமணப்பேறு கிடைக்கும். கடன் வாங்கி வட்டியும், அசலும் கட்ட முடியாமல் தவிப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் ஸ்ரீ கால பைரவருக்கு முந்திரிப் பருப்பு மாலை கட்டி, புனுகு சாற்றி, வெண் பொங்கல் நைவேத்தியம் இட்டு வழிபட்டு பிரார்த்தனை செய்தால் நலம் கிடைக்கும்.
திங்கட்கிழமை : வில்வார்ச்சனை செய்திட சிவனருள் கிட்டும். திங்கட்கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து சந்தனக் காப்பிட்டு புனுகு பூசி நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து வழிபட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்.
தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவவை வணங்கி ``கால பைரவ அஷ்டகம்'' படித்து வந்தால் எதிரிகளை அழித்து, கடன்கள் தீர்ந்து, யம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்ட நாள் வாழலாம்.
11 முறை வலம் வந்து, ஒவ்வொரு சுற்றுக்கும் 1 மிளகு தீபம் ஏற்றி வழிபட ஸ்ரீ பைரவரின் பூரண அருள் கிட்டும்.
(1 மிளகு தீபம் - 27 வாள்மிளகை ஒரு துணியில் பொட்டலமாக கட்டி, நல்லெண்ணையில் தோய்த்தது)
http://www.bairavafoundation.org/
Comments
Post a Comment