💥💥 திருவண்ணாமலையில் நாளை  குபேரர் கிரிவலம் 💥💥
நாளை!
ஸ்ரீ விகாரி வருடம், 24.11.19, கார்த்திகை மாதம் 8ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலையில்  குபேரர் கிரிவலம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு குபேரர் கிரிவலத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்திகை மாதம் சிவராத்திரி அன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை குபேர லிங்கத்திற்கு குபேரர் வந்து சூட்சமாக (மறைமுகமாக) பூஜை செய்வார் என்பதும், அதன் பின்னர் குபேரர் கிரிவலம் செல்வார் என்பதும், குபேரர் பூஜை செய்வதை கண்டால் வீட்டில் செல்வம் பெருகும் என்பதும் ஐதீகம்.

இதையொட்டி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்கத்திற்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை செய்யப்படுகிறது.
பின்னர் மாலை 5 மணியளவில் லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறும். குபேரர் பூஜை செய்வதை காண்பதற்காக ஆண்டுதோறும் திரளான பக்தர்கள் குவிகின்றனர்.



குபேர பகவான், திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதாகவும், இந்த நாளில் பக்தர்கள் கிரிவலம் வந்தால் செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது. இந்த ஆண்டு வருகின்ற 24-ந் தேதி கார்த்திகை மாத சிவராத்திரியையொட்டி குபேர லிங்க சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
அன்று குபேர கிரிவலத்தையொட்டி கிரிவலப் பாதையில் உள்ள வீடுகளில் முன்பாக பெண்கள் அரிசி மாவால் கோலம் போட்டு, வெற்றிலை வைத்து நெய்விளக்கு ஏற்றி வழிபடுவார்கள்.

தமிழகத்தை சேர்ந்த பிற மாவட்ட மக்களும் சாமி தரிசனம் செய்ய திருவண்ணாமலை குவிவார்கள்.

இதனால் திருவண்ணா மலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதம் இந்த ஆண்டு குபேரர் கிரிவலத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :