💥💥இன்று ஓர் ஆலயம்💥💥
🔥🔥அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோவில் 🔥🔥
சுவாமி : அருள்மிகு மகா மாரியம்மன்.
தலச்சிறப்பு : மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் இந்த அம்பாளை வேண்டிக்கொள்வர்.  நோய் குணமானவுடன்,  'பாடைகாவடி' எடுத்து பிரார்த்தனையை நிறைவேற்றுவர்.  பக்தர்கள், "தன்  உடல் நலமடைந்தால் உற்சவ காலத்தில் பாடை மீது  படுத்து ஆலயத்தை வலம் வருவதாக  வேண்டிக் கொள்வர்". பங்குனி மாதம் நடைபெறும் உற்சவத்தின் போது ஆயிரக்கணக்கான  பாடை  வழிபாடுகள் நடைபெறும். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் பாடை மீது படுக்க, கயிறால் கட்டுவர்.  பிறகு சுமந்து வருவர்.  கொள்ளிச் சட்டி எடுக்க வேண்டிய முறை உள்ளவர் அதனை எடுத்துக்  கொண்டு முன்னால் வருவார்.  இவர்கள் ஆலயத்தை வலம்  வந்ததும் பாடை பிரிக்கப்படும்.  பிரித்ததும் மஞ்சள் நீரைத் தெளிக்க, படுக்கும் போது மயக்கமுற்றவர் தெளிந்தெழுவார்.  வேண்டுதல் நிறைவேற்றப்பட்டதும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவார்கள். இப்படிப்பட்ட பாடைக்  காவடி வழிபாடுகளை ஏற்பதுதான் இந்த மாரியம்மனுக்குச் சிறப்பாகும்.
தல வரலாறு : வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர்  காதக் கவுண்டர் என்பவர் வசித்து வந்தார்.  அவர் மனைவி பெயர் கோவிந்தம்மாள்.  இருவரும்  இறைபக்தி மிக்கவர்கள்.  காதக் கவுண்டர் விவசாய வேலை செய்து வந்தார்.  அவர் மனைவி  பக்கத்துக் கிராமங்களுக்குச் சென்று தின்பண்டங்கள் விற்கும் அங்காடி வியாபாரம் செய்து வந்தார்.   வியாபாரத்திற்காகப் புங்கஞ்சேரிக்கு கோவிந்தம்மாள் சென்றிருந்தார்.  அன்று வெள்ளிக்கிழமை,  நல்ல வியாபாரம் நடந்தது நெல்லும், காசும், நிறையக் கிடைத்தன.  எல்லாம் இறையருள்  என்றெண்ணிக்கொண்டு மகிழ்ச்சியாக, அங்குள்ள ஒரு குளத்திற்கு குளிக்கச் சென்றார்.
அப்போது,  ஒரு பிராமணரும் அவரது மனைவியும் குழந்தையுடன் அங்கிருந்த அடைக்கலங்காத்த அய்யனார்கோயில் பக்கம் போவதைப் பார்த்தார்.  குளித்துவிட்டுக் கரையேறிய பின்  அய்யனார்கோயில் பக்கமிருந்து குழந்தை அழும் குரலைக் கேட்டார் கோவிந்தம்மாள்.  அங்கே  விரைந்து சென்ற கோவிந்தம்மாள், பெண் குழந்தை ஒன்று அங்கே அழுது கொண்டு இருப்பதைக்  கண்டாள்.  தெருக்காரர்கள் ஓடி வந்தனர், குழந்தையைக் கொண்டு வந்து விட்டவர்களைத் தேடிப் பார்த்தனர்.  அங்கு யாரும் தென்படவில்லை. அழுது கொண்டிருந்த அந்தக் குழந்தையைக் கோவிந்தம்மாள் தூக்கினாள்.  குழந்தை அழுவதை மறந்து அழகாகச் சிரித்தது.  
அந்தக்  குழந்தையின் அழகில் மயங்கிய அத்தெருவாசிகள் அனைவரும் அக்குழந்தையைத் தாமே வளர்க்க வேண்டுமென்று போட்டியிட்டனர்.  கடைசியாக அந்தக் தெரு நாட்டாண்மைக்காரர் வளர்ப்பார் என்ற முடிவுக்கு வந்தனர்.  தனக்கு குழந்தை கிடைக்கவில்லையே என்று கோவிந்தம்மாளுக்கு வருத்தம்.   புங்கஞ் சேரியில் கோழிகளும், ஆடு, மாடுகளும் திடீரென இறக்கத் தொடங்கின பலருக்கு அம்மை  நோய் தாக்கியது. அய்யனார் கோயிலில் கிடைக்கப் பெற்ற அந்தப் பெண் குழந்தைக்கும் அம்மை  வார்த்து விட்டது, ஊரே பெரும் துயரம் அடைந்தது.  இந்நிலையில் ஒருவர் ஆவேசம் வந்து, அந்தப்  பெண் குழந்தையைக் கோவிந்தம்மாளிடம் கொடுத்துவிட வேண்டும்.  அப்போதுதான் இந்த ஊர் நலம் பெறும் என்று கூறினார்.


ஊடனே கோவிந்தம்மாளை அழைத்து அக்குழந்தையைக் கொடுத்துவிட்டனர்.  குழந்தையை எடுத்து  வந்து சீதளா எனப் பெயரிட்டுக் கோவிந்தம்மாள் வளர்க்கத் தொடங்கினாள்.  ஆனால் கடுமையான  அம்மையால் மூன்றாம் நாள் அக்குழந்தையின் உயிர் பிரிந்து விட்டது.  ஆறாத்துயரம் அடைந்த  கோவிந்தம்மாளும் அவர் கணவரும், குழந்தையின் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து தம்  வீட்டு கொல்லையில் அடக்கம் செய்து விட்டனர். (சிலர் அக்குழந்தை ஏழரை ஆண்டுகள் கோவிந்தம்மாள் வீட்டில் வளர்ந்து பல அற்புதங்களைச் செய்து, பின்னரே இறந்ததாகவும் கூறுகிறார்கள்).
பின்னர், குடமுருட்டி ஆற்றில் நீராடிவிட்டு வருவோரில் சிலர், கோவிந்தம்மாள் வீட்டுக்  கொல்லைப்புறம் வந்த போது ஆவேசமாக வந்து ஆடினர்.  அவர்கள் நான்தான் மாரியம்மன்  குழந்தை வடிவில் இங்கு வந்தேன்.  என்னை வழிபடுவோருக்கு அருள் புரிவேன் என்று கூறினார்.   அன்தபடி குழந்தையைச் சமாதி செய்த இடத்தில் கீற்று கொட்டகை போடப்பட்டது மக்கள் வந்து  வழிபடத் தொடங்கினர் பின்னர் அவ்விடத்தில் கோயிலும் எழுப்பப் பெற்றது சீதளாதேவி  மகாமாரியம்மன் கோயிலாகப் பெயர் பூண்டு வரந்தரும் தெய்வமாக அன்னை பராசக்தி அங்கே  விளங்கலானாள்.  அதுவே வலங்கைமான் மாரியம்மன் கோயில் தோன்றி வளர்ந்த வரலாராக  கூறப்படுகிறது.
நடைதிறப்பு : காலை 5.30 மணி முதல் பிற்பகல் 1.00 வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை, ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் நடைசாத்தப்படுவது இல்லை.ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 11.00 மணி வரை நடைதிறந்து இருக்கும்.
பூஜைவிவரம் : ஆறுகாலபூஜை.
திருவிழாக்கள் :
ஒவ்வொரு ஆவணி ஞாயிற்றுக்கிழமையும் திருவிழா,
ஆவணி கடைசி ஞாயிறு தெப்பத்திருவிழா,
பங்குனி 2-ம் ஞாயிறு "பாடைகாவடி திருவிழா" சிறப்பானது,
பங்குனி மூன்றாவது ஞாயிறு "புஷ்பபல்லாக்கு",
பங்குனி "கடைஞாயிறுதிருவிழா".
அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.
கோயில்முகவரி : அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்,
வலங்கைமான் - 612 804, திருவாரூர் மாவட்டம்.
தொலைபேசி  எண் : 04374-264575

விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.

#அருள்மிகுமகாமாரியம்மன்திருக்கோவில்வலங்கைமான்திருவாரூர்மாவட்டம்



Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :