வாழ்கை பசுமையாகட்டும் ! வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் !!
கால்பெருவிரல்ரேகை
ஜோதிடம்-ஒரு தொகுப்பில்
இன்று....

12 – நாடிகளில் அமைந்துள்ள முக்கியமான விஷயங்கள்
1. பூர்வ நாடி
உடல் – ஆயுள் பூர்வநாடியில் அமைந்துள்ள ரேகைகளை வைத்துத்தான் ஒருவரின் ஆரோக்கியம் ஆயுள் இவற்றை தீர்மானிக்க முடியும் மேலும் பூர்வநாடி ரேகையில் தோஷரேகை காணப்பட்டால் சரீரம் அடிக்கடி நோய்வாய்ப்படும் ஆயுள் குறையும். ஆனால் எல்லா தோஷரேகைக்கும் தீர்வும் வழிமுறையும் உண்டு எனவே கவலைப்பட தேவையில்லை. உடல் உறுப்புகளுக்கும் பூர்வநாடி ரேகைக்கும் தொடர்பு உண்டு.
2. துதிநாடி
வாக்கு – தனம் – குடும்பம் ஆகியவற்றை பற்றி அறிந்து கொள்ள துதி நாடி ரேகையில் அமைந்துள்ள ரேகை அமைப்பை வைத்துத்தான் தெரிந்து கொள்ள முடியும்.
மேற்படி ரேகையில் யோக கோடுகள் உள்ள ரேகையிருந்தால் ஒருவருக்கு செல்வம் நீர்வீழ்ச்சி போல வந்து சேரும் மேலும் மேற்படி நாடியில் தோஷரேகையிருந்தால் தன விருத்தி உண்டாகாது. ஆனால் அதற்கும் தீர்வு உண்டு.
3. அங்காரக நாடி
இளைய சகோதரம் – தைரியம் ஆகியவற்றை மேற்படி நாடியில் அமைந்துள்ள ரேகையை வைத்துத்தான் அறிந்து கொள்ள முடியும்.
அங்கார நாட்டியில் யோக ரேகையிருந்தால் இளைய சகோதர உறவு மேம்படும். அதீத மனோபலம் உண்டாகும். அதேசமயம் மேற்படி நாடியில் தோஷரேகையிருந்தால் இளைய சகோதர உறவு பாழ்படும் மனோபலம் குன்றும் ஆனால் அவற்றை நிவர்த்திக்க வழியுண்டு.
4. சதுர் நாடி
நிலம் – வீடு, சுகம், தாய், கல்வி ஆகியவற்றை சதுர் நாடியில் அமைந்துள்ள ரேகை கோடுகளை வைத்துத்தான் தீர்மானிக்க முடியும். மேலும் மேற்படி நாடியில் தோஷ ரேகை இருந்தால் அதற்கு தீர்வு உண்டு.
5. பஞ்சம நாடி
பூர்வீகம் – புத்தி – குழந்தை – தாய்மாமன் ஆகியவற்றை பஞ்சம நாடியில் அமைந்துள்ள ரேகை கோடுகளை வைத்துத்தான் தீர்மானிக்க முடியும் மேலும் பஞ்சம நாடியில் தோஷ ரேகையிருந்தால் பூர்வீகம் அழியும், புத்தி பேதலிக்கும், தோஷப்பட்ட குழந்தை பிறக்கும் ஆனால் இதற்கு சாஸ்திர ரீதியான தீர்வு உண்டு. 




6. சத்ரு நாடி
நோய் – கடன் – வம்பு, வழக்கு, எதிரி ஆகியவற்றை சத்ரு நாடியிலுள்ள ரேகை கோடுகளை வைத்துத்தான் தீர்மானிக்க முடியும் மேலும் அவற்றில் குறையிருந்தால் நிவர்திக்க சாஸ்திர ரீதியான தீர்வு உண்டு.
7. சப்தம நாடி
திருமணம் – கூட்டாளி ஆகியவற்றிலுள்ள நிறை குறைகளை சப்தம நாடியிலுள்ள ரேகை கோடுகளை வைத்துத்தான் தீர்மானிக்க முடியும் மேலும் மேற்படி நாடியில் தோஷ ரேகை கோடுகள் இருந்தால் திருமண வாழ்க்கை நரகமாகும், கூட்டாளிகளால் பெருத்த ஏமாற்றம் உண்டாகும் மேலும் மேற்படி நாடியில் தோஷ ரேகை கோடுகள் இருந்தால் அதற்கு சாஸ்திர ரீதியான தீர்வு உண்டு.
8. அஷ்ட நாடி
கண்டம் – விபத்து – அவமானம் – சிறைவாசம் – மாங்கல்ய பலம் ஆகியவற்றை அஷ்ட நாடியிலுள்ள ரேகை கோடுகளை வைத்துத்தான் தீர்மானிக்க முடியும் மேலும் அவற்றில் குறைபாடு காணப்பட்டாலும் நிவர்த்திக்க சாஸ்திர ரீதியான தீர்வு உண்டு.

9. நவ நாடி
தந்தை – அதிர்ஷ்டம் – செல்வம் ஆகியவற்றை நவ நாடியிலுள்ள ரேகை கோடுகளை வைத்து தெரிந்து கொண்டு அதில் குறைபாடுகள் இருந்தால் சாஸ்திர ரீதியான தீர்வு காண முடியும்.

10. தச நாடி
தொழில் – கர்ம ஸ்தானம் – ஆகியவற்றை தச நாடியில் அமைந்துள்ள ரேகையை வைத்துத்தான் அறிந்து கொள்ள முடியும் மேலும் அவற்றில் குறைபாடுகள் இருந்தால் சாஸ்திர ரீதியாக நிவர்த்திக்க முடியும்.

11. ஏக நாடி
வருமானம் – மூத்த சகோதரம் – இளைய சகோதரம் ஆகியவற்றை ஏக நாடியில் அமைந்துள்ள ரேகை கோடுகளை வைத்துத்தான் திர்ர்மானிக்க முடியும் மேலும் அவற்றில் தோஷம் இருந்தால் சாஸ்திர ரீதியாக தீர்வு உண்டு.

12. விராய நாடி
விரயம் – தூக்கம் – தூர தேச வாழ்க்கை – தூர தேச பயணம் – ஆகியவற்றை விரய நாடியில் அமைந்துள்ள ரேகைக் கோடுகளை வைத்துத்தான் தீர்வு காண முடியும்.

தொடரும்......

விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006,
www.bairavafoundation.org
www.swarnabhairavapeedam.org

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

பரிஹாரங்க பைரவர் பூஜை