வாழ்கை பசுமையாகட்டும் ! வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் !!
கால்பெருவிரல்ரேகை
ஜோதிடம்-ஒரு தொகுப்பில்
இன்று....
அங்காரக நாடி
1. அங்காரக நாடியில் விலவக் கோடு இருந்தால் சகோதர உறவு மேம்படும் முகுந்த மனோபலம் உண்டாகும்.
2. அங்காரக நாடியில் வாகைக் கோடு இருந்தால் இளைய சகோதர சகோதரி உறவு பலப்படும் தரத்திற்கு கடும் தோஷமும் ஏமாற்றமும் உண்டாகும் அதற்கு தீர்வு பஞ்சம நாடி ரேகை மூலம் அறிந்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
3. அங்காரக நாடியில் நாக கொடு இருந்தால் இளைய சகோதரத்துடன் சதா காலம் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே இருக்கும்.
இதற்கு தீர்வு பஞ்சம நாடியிலும் நவ நாடியிலும் அமைந்துள்ள ரேகை கோடுகளின் மூலம் அறிந்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
4. அங்காரக நாடியில் சங்குகோடு இருந்தால் இளைய சகோதரத்திற்கு ஆயுள் கண்டம் உண்டாகும்.
இதற்கு தீர்வு பஞ்சம நாடியில் அமைந்துள்ள ரேகை கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
5. அங்காரக நாடியில் சூரியகோடு இருந்தால் இளைய அங்காரக நாடியில் சூரியகோடு இருந்தால் இளைய சகோதரத்துடன் எல்ல விஷயத்திலும் கருத்து வேறுபாடு உண்டாகும்.
இதற்கு தீர்வு பஞ்சம நாடியிலும் நவ நாடியிலும் அமைந்துள்ள ரேகை கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
6. அங்காரக நாடியில் வருணக் கோடு இருந்தால் இளைய சகோதர உறவு மேம்படும்.
7. அங்காரக நாடியில் சக்கரக் கோடு இருந்தால் இளைய சகோதரத்திற்கு தோஷம் உண்டாகும் ஆனால் அதற்கு தீர்வு பஞ்சம நாடியிலுள்ள ரேகை கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்திக்கலாம்.
8. அங்காரக நாடியில் கத்திரி கோடு இருந்தால் இளைய சகோதரத்திற்கு தோஷம் உண்டாகும் ஆனால் இதற்கு நவ நாடியிலும் துதி நாடியிலும் பஞ்சம நாடியிலும் அமைந்துள்ள ரேகை கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
9. அங்காரக நாடியில் கூர்ம கோடு இருந்தால் இளைய சகோதரத்தால் நன்மையும் மேலான உதவியும் பாசமிகு சகோதர உறவும் மேம்படும்.
ஆனால் அங்காரக நாடியில் வாகைக்கோடு, நாகக் கோடு, சங்குக்கோடு, சூரியக்கோடு, வருணக்கோடு, சக்கரக் கோடு, கத்திரிக்கோடு, கூர்மக்கோடு, அந்திமக்கோடு, சந்திரக் கோடு, குழிமுககோடு இவற்றில் ஏதாவது ஒன்றோ அல்லது பலவோ கூர்ம கோட்டுடன் கூடியிருந்தால் இளைய சகோதர உறவு பிரச்சினைக்குரியதாக மாறிவிடும். ஆனால் அப்படி இருந்தால் அதற்கு தீர்வு பரிகாரமும் பஞ்சம நாடியிலும் நவ நாடியிலும் அமைந்துள்ள ரேகை கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்திக்கலாம்.
10. அங்காரக நாடியில் அந்திமக் கோடு இருந்தால் இளைய சகோதர உறவு மிகவும் கவலை அழிப்பதாக மாறிவிடும்.
ஆனால் அதற்கு தீர்வு துதி நாடியிலும் பூர்வ நாடியிலும் பஞ்சம நாடியிலும் நவ நாடியிலும் அமைந்துள்ள ரேகை கோடுகள் மூலம் அறிந்து மேற்படி இளைய சகோதர உறவை மேம்படுத்திக் கொள்ளலாம்.
11. அங்காரக நாடியில் சந்திரக் கோடு இருந்தால் இளைய சகோதரத்துடன் எல்லா விஷயத்திலும் கருத்து வேறுபாடு உண்டாகும்.
ஆனால் இதற்கு தீர்வு பஞ்சம நாடியிலும் துதி நாடியிலும் அமைந்துள்ள ரேகை கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
12. அங்காரக நாடியில் குழிமுக கோடு இருந்தால் இளைய சகோதரத்துடன் சேர்ந்து எத்தொழில் செய்தாலும் நஷ்டம் உண்டாகும்.
ஆனால் அதற்கு தீர்வு பஞ்சம நாடியிலும் நவ நாடியிலும் துதி நாடியிலும் அமைந்துள்ள ரேகை கோடு மூலம் அறிந்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
13. அங்காரக நாடியில் கருதமுக கோடு அல்லது கஜமுக கோடு இவ்விரண்டில் ஏதாவது ஒன்றோ அல்லது இரண்டும் இருந்தால் இளைய உறவு மிகவும் அதிர்ஷ்டமாகவும் பலபேர் போற்றும் படியும் அமையும்.
ஆனால் அங்காரக நாடியில் பேர்படி யோக கோடுகளோடு தோஷ கோடுகளாக வாகைக்கோடு, நாகக் கோடு, சங்குக்கோடு, சூரியக்கோடு, வருணக்கோடு, சக்கரக் கோடு, கத்திரிக்கோடு, கூர்மக்கோடு, அந்திமக்கோடு, சந்திரக் கோடு, குழிமுககோடு இவற்றில் ஏதாவது ஒன்றோ அல்லது பலவோ சேர்ந்து இருந்தால் இளைய சகோதர உறவு பாதிக்கும் ஆனால் இதற்கு தீர்வு பஞ்சம நவ நாடியில் அமைந்துள்ள ரேகையில் உள்ளது.





சதுர் நாடி
1. சதுர் நாடியில் வில்வக்கோடு அமைந்திருந்தால் ஏராளமான நிலம், வீடு மனை யோகம் உண்டு மேலும் தாயாருக்கு நீண்ட ஆயுள் உண்டாகும் பரிபூரண பூமி யோகமும் வாகன யோகமும் உண்டாகும்.
2. சதுர் நாடியில் வாகைக் கோடு அமைந்திருந்தால் வீடு, பூமி ஆகியவை நஷ்டமடையும் தாயாருக்கு தீராதா உடல் வியாதி உண்டாகும் ஆனால் அதற்கு தீர்வும் பரிகாரமும் நவ நாடியில் அமைந்துள்ள ரேகைகளையும், பஞ்சம நாடியில் அமைந்துள்ள ரேகைக் கோடுகளையும் ஆராய்ந்து தீர்வும் நிவர்த்திக்கும் பரிகாரமும் தெரிந்து கொள்ளலாம்.
3. சதுர் நாடியில் நாக கோடு அமைந்திருந்தால் வீடு, பூமி இவற்றில் இனம் தெரியாத மற்றும் காரணம் காண முடியாதபடி பிரச்சனைகள் தோன்றும் மேலும் மருத்துவத்தால் தீர்வு காண முடியாத உடல் நோய் தாயாருக்கு ஏற்படும் இதற்கு தீர்வும் பரிகாரமும் பஞ்சம நாடி மற்றும் நவநாடி ரேகை கோடுகளை வைத்து முடிவு செய்து கொள்ளலாம்.
4. சதுர் நாடியில் சங்கு கோடு அமைந்திருந்தால் வீட்டில் அடிக்கடி துர்மரணம் ஏற்படும் மிகுந்த துரதிருஷ்டம் உண்டாகும் கவலைக்கிடமாகவே இருக்கும் ஆனால் இதற்கு தீர்வும் நிவர்த்திக்கும் வழிமுறையும் பஞ்சம நாடி, துதி நாடி மற்றும் நவ நாடியில் அமைந்துள்ள ரேகை கோடுகளை வைத்து தீர்வு காண முடியும்.
5. சதுர் நாடியில் சூரியக்கோடு அமைந்து இருந்தால் ஏராளமான வீடு, பூமி யோகம் அமையும் அதனாம் மற்றவர்களை துளியும் மதிக்காத மிகுந்த தலைக்கனமும், கர்வமும் உண்டாகும்.
6. சதுர் நாடியில் வருணக்கோடு இருந்தால் பரிபூரண பூமி யோகமும் வீடு மனை யோகமும் அமையும் மற்றவர்கலை மதிக்கும் பண்பும் உதவும் குணமும் இயற்கையாகவே அமைந்து விடும்.
7. சதுர் நாடியில் சக்கரக்கோடு அமைந்திருந்தால் அடிக்கடி பூமி வாங்கும் அமைப்பும் பூமி வாங்கிய பிறகு இனம் தெரியாத பிரச்சனையில் குறைந்த விலைக்கு விற்கும் நிலையும் பிறகு பூமி வாங்கி அதே போல் குறைந்த விலைக்கு விற்கும் நிலையும் சக்கரம் சுழலுவது போல இதே நிலை தொடர்ந்து கொண்டே இருக்கும். இதற்கு தீர்வும் பரிகாரமும் பஞ்சம நாடியில் அமைந்துள்ள ரேகை கோடுகளை வைத்து முடிவு செய்து கொள்ளலாம்.
8. சதுர் நாடியில் கத்திரிக்கோடு அமைந்து இருந்தால் சுயநலமும் மற்றவர்கள் வீழ்ச்சியில் மகிழ்ச்சி காணும் மன நிலையும் உண்டாகும்.
9. சதுர் நாடியில் கூர்ம கோடு அமந்திருந்தால் அதிர்ஷ்டமான பூமி யோகம் வாழ்நாள் முழுவதும் உண்டாகும்.
10. சதுர் நாடியில் அந்திமக் கோடு அமைந்திருந்தால் இடம் வாங்கினாலும் வீடு கட்ட அதிககாலம் எடுத்து கொள்வர் அதாவது எதிலும் மந்த தன்மை உண்டாகும். இதற்கு பஞ்சம நாடி ரேகை கோடுகளை வைத்து முடிவு செய்து கொள்ளலாம்.
11. சதுர் நாடியில் சந்திரக்கோடு அமைந்திருந்தால் வீடு, பூமி வாங்கிய பிறகு யோகமாக தெரிவது அவற்றை விற்கும் போது துரதிருஷ்டமானதாக ஆகிவிடும். இதற்கு தீர்வும் பரிகாரமும் துதி நாடி மற்றும் பஞ்சம நாடியில் ரேகைகளை வைத்து தீர்வு காண முடியும்.
12. சதுர் நாடியில் குழிமுக கோடு அமைந்திருந்தால் வீடு, பூமியில் பெரும் பொருள் விரயமும் நஷ்டமும் உண்டாகும் இதற்கு தீர்வும் பரிகாரமும் பஞ்சம நாடியில் அமைந்துள்ள ரேகை கோடுகளை வைத்து தீர்மானிக்க முடியும்.
13. சதுர் நாடியில் கருடமுக கோடு அமைந்திருந்தால் அதிர்ஷ்டமான பூமி யோகம் உண்டாகும்.
14. சதுர் நாடியில் கோமுக கோடு அமைந்திருந்தால் வீடு, பூமியில் துரதிருஷ்டமும் அதனால் எப்பொழுதும் கோபமான மனநிலையும் உண்டாகும். இதற்கு தீர்வும் பரிகாரமும் பஞ்சம நாடியில் அமைந்துள்ள ரேகை கோடுகளை வைத்து தீர்வு செய்து கொள்ளலாம்.
15. சதுர் நாடியில் கஜமுக கோடு அமைந்திருந்தால் ராஜ யோகமான வீடு, பூமி யோகம் உண்டாகும்.
தொடரும்......
விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006,
www.bairavafoundation.org
www.swarnabhairavapeedam.org

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :