கால்பெருவிரல்ரேகை
ஜோதிடம்-ஒரு தொகுப்பில்
இன்று....

நவ நடி
1. நவ நாடியில் வில்வக் கோடு இருந்தால் தந்தையாருக்கு அதிர்ஷ்டமான மேன்மையான வாழ்க்கையும் பூரண ஆயுளும் அமையும். அதிர்ஷ்டம் செல்வாக்கு குறையாது.
2. நவ நாடியில் வாகைக் கோடு இருந்தால் தந்தையாருக்கு தோஷம், அதிர்ஷ்டம் இல்லாத வாழ்வு அமையும். இதற்கு பரிகாரம் துதி நாடி மற்றும் பஞ்சம நாடி ரேகையில் அமையப்பெற்ற ரேகை கோடுகளை இதற்கு தீர்வும் பரிகாரம் தேடலாம். தீர்வு உண்டு.
3. நவ நாடியில் நாக கோடு இருந்தால் தந்தையும், தாயும் பிரிந்து வாழ்வர். அதிர்ஷ்டம் கிட்டாது. இதற்கு தீர்வும் பரிகாரமும் பஞ்சம நாடியில் அமையப்பெற்ற ரேகைக் கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்தி செய்ய முடியும்.
4. நவ நாடியில் சங்கு கோடு இருந்தால் தந்தையாருக்கு திடீர் மரனம் ஏற்படும். இதற்கு தீர்வு பஞ்சம நாடியில் அமையப்பெற்ற ரேகை மூலம் அறிந்து நிவர்த்தி செய்யலாம்.
5. நவ நாடியில் சூரியக் கோடு இருந்தால் தந்தையார் கர்வமிக்கவராகவும் பிறர் சொல்லை காதுகொடுத்து ஒருபோதும் கேட்காத தலைக்கணம் உள்ளவராக இருப்பார். இதற்கு தீர்வு துதி நாடி மற்றும் பஞ்சம நாடியில் அமையப்பெற்ற ரேகைக் கோடு மூலம் அறிந்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
6. நவ நாடியில் வருணக் கோடு இருந்தால் தந்தையார் மேன்மக்களாக அதிர்ஷ்டமானவராக வாழ்வார்.
7. நவ நாடியில் சக்கரக் கோடு இருந்தால் தந்தையாருக்கு தரித்திரம் உடையவராக இருப்பார். இதற்கு தீர்வு பஞ்சம நாடி ரேகையில் அமையப்பெற்ற கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
8. நவ நாடியில் கத்திரிக் கோடு இருந்தால் தந்தையார் சுயநலவாதி மேலும் மற்றவர் துன்பத்தில் இன்பம் காண்பவராவார். இதற்கு தீர்வும் பரிகாரமும் துதி நாடி மற்றும் பஞ்சம நாடியில் அமைந்துள்ள ரேகைக் கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.
9. நவ நாடியில் கூர்மக் கோடு இருந்தால் தந்தையாருக்கு அதிர்ஷ்டம் மேலும் யோகமான வாழ்வு தரும்.
10. நவ நாடியில் அந்திமக் கோடு இருந்தால் தந்தையார் மந்த புத்தி உள்ளவர். இதற்கு தீர்வு தூது நாடியில் அமைந்துள்ள ரேகை கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.
11. நவ நாடியில் சந்திரக் கோடு இருந்தால் தந்தை எதை செய்தாலும் நஷ்டமடைவார் இதற்கு தீர்வும் பரிகாரமும் தசம் நாடியில் அமையப்பெற்ற ரேகை கோடு மூலம் அறிந்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
12. நவ நாடியில் குழிமுகக் கோடு இருந்தால் தந்தையரால் குடும்பத்திற்கு யாதொரு நற்பயனும் கிட்டாது இதற்கு தீர்வு பஞ்சம நாடியில் அமையப் பெற்ற ரேகை கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.
13. நவ நாடியில் கருடமுக கோடு இருந்தால் தந்தையார் அதிர்ஷ்டமுள்ள பாக்கியசாலி.
14. நவ நாடியில் கோமுக கோடு இருந்தால் தந்தையார் பெரும் கோபக்காரர் இதற்கு தீர்வும் பரிகாரமும் பஞ்சம நாடியில் அமையப் பெற்ற ரேகை மூலம் அறிந்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
15. நவ நாடியில் கஜமுக கோடு இருந்தால் தந்தையார் அதிர்ஷ்டசாலி பெரும் அறிவாளி.




தச நாடி
1. தச நாடியில் வில்வக் கோடு இருந்தால் எந்த தொழில் செய்தாலும் அதிர்ஷ்டம் உண்டு.
2. தச நாடியில் வாகைக் கோடு இருந்தால் எந்த தொழில் செய்தாலும் நஷ்டமடையும் இதற்கு தீர்வும் பரிகாரமும் துதி நாடி மற்றும் விருத்தி நாடி ரேகை கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
3. தச நாடியில் நாக கோடு இருந்தால் தொழில் யோகம் இல்லை இதற்கு தீர்வும் பரிகாரமும் துதிநாடி மற்றும் விருத்தி நாடியில் அமையப் பெற்ற ரேகைக் கோடுகள் மூலம் அறிந்து சரி செய்து கொள்ளலாம்
4. தச நாடியில் சங்கு கோடு இருந்தால் சொந்தமாக தொழில் செய்யாமல் இருப்பது உத்தமம். இதற்கு மாற்றுவழி என்ன என்பதற்கு துதி நாடி மற்றும் விருத்தி நாடியில் அமைந்துள்ள ரேகை கோடு மூலம் அறிந்து செயல்படலாம்.
5. தச நாடியில் சூரியக் கோடு இருந்தால் எந்த தொழில் செய்தாலும் நஷ்டமடையும் இதர்கு தீர்வும் பரிகாரமும் துதிநாடி மற்றும் விருத்தி நாடியில் அமைந்துள்ள ரேகைக் கோடு மூலம் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
6. தச நாடியில் வருணக் கோடு இருந்தால் அதிர்ஷ்டமான தொழில் அமையும்.
7. தச நாடியில் சக்கரக் கோடு இருந்தால் எந்த தொழில் செய்தாலும் விருத்தி ஆகாது இதற்கு தீர்வும் பரிகாரமும் பஞ்சம நாடியில் அமையபெற்ற ரேகை மூலம் அறிந்து தீர்வு காண முடியும்.
8. தச நாடியில் கத்திரிக் கோடு இருந்தால் இவர்களின் சுயநலத்தினாலேயே தொழில் விருத்தி ஆகாது இதற்கு தீர்வும் பரிகாரமும் பஞ்சம நாடியில் அமையப்பெற்ற ரேகை மூலம் அறிந்து சரிசெய்து கொள்ளலாம்.
9. தச நாடியில் கூர்ம கோடு இருந்தால் அதிர்ஷ்டமான பல தொழில்கள் அமையும்.
10. தச நாடியில் அந்திமக் கோடு இருந்தால் தொழில் யோகம் இல்லை மேலும் துதி நாடி மற்றும் விருத்தி நாடியில் அமையப்பெற்ற ரேகைக் கோடுகள் மூலம் அறிந்து அதன்படி செயல்படவும்.
11. தச நாடியில் சந்திரக் கோடு இருந்தால் எந்த தொழில் தொடங்கினாலும் ஆரம்பத்தில் யோகமாகவும் பிறகு மொத்த யோகமும் காணாமல் போய்விடும். இதற்கு தீர்வும் பரிகாரமும் துதி நாடி மற்றும் விருத்தி நாடியில் அமையப்பெற்ற ரேகைக் கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்திக்க முடியும்.
12. தச நாடியில் குழிமுக கோடு இருந்தால் தொழில் யோகம் இல்லை ஆனால் துதி நாடி மற்றும் விருத்தி நாடியில் அமையப்பெற்ற ரேகைக் கோடுகள் மூலம் அறிந்து அதன்படி செயல்படவும்.
13. தச நாடியில் கருடமுக கோடு இருந்தால் தொழில் செய்தலும் அதிர்ஷ்டமே.
14. தச நாடியில் கோமுக கோடு இருந்தால் முன் கோபம் அதிகம் இருக்கும் எந்த தொழில் செய்தாலும் விருத்தி ஆகாது இதற்கு தீர்வும் பரிகாரமும் பஞ்சம நாடியில் அமைந்துள்ள ரேகை மூலம் அறிந்து நிவர்த்திக்க முடியும்.
15. தச நாடியில் கஜமுகம் இருந்தால் எந்த தொழில் செய்தாலும் குபேர யோகமே.


தொடரும்.....


விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006,




Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :