கால்பெருவிரல்ரேகை
ஜோதிடம்-ஒரு தொகுப்பில்
இன்று....


பஞ்சம நாடி


1. பஞ்சம நாடியில் வில்வக்கோடு அமைந்திருந்தால் மிக மேன்மையான அதிர்ஷ்டமான குழந்தைகள் பிறக்கும். பூர்வீக சொத்து மிகவும் அதிர்ஷ்டகரமாக அமையும். அபரிதமான புத்திபலம் உண்டாகும். தாய்மாமன் உறவு மேம்படும்.
2. பஞ்சம நாடியில் வாகைக்கோடு அமைந்திருந்தால் கடுமையான புத்திரதோஷம் உண்டாகும். பூர்வ சொத்து நாசமடையும். இதற்கு தீர்வும் பரிகாரமும் கணவன் அல்லது மனைவியின் கால் ரேகையில் பஞ்சம மற்றும் நவ நாடியில் அமைந்துள்ள ரேகை கோடுகளை வைத்து தீர்வும் பரிகாரமும் காண முடியும்.
3. பஞ்சம நாடியில் நாக கோடு அமைந்திருந்தால் துரதிருஷ்டமான குழந்தைகள் பிறக்கும் இதற்கு தீர்வும் பரிகாரமும் நவ நாடியில் அமைந்துள்ள ரேகை கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்திக்க முடியும்.
4. பஞ்சம நாடியில் சங்குகோடு அமைந்திருந்தால் புத்திர இழப்பு ஏற்படும் இதற்கு தீர்வும் பரிகாரமும் நவ நாடியில் அமைந்துள்ள ரேகை கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்திக்க முடியும்.
5. பஞ்சம நாடியில் சூரியக்கோடு அமைந்திருந்தால் பிறந்த குழந்தைகள் மிகுந்த தலைக்கணமும், கர்வமும் உடையவர்களாக வளர்வார்கள். இதற்கு தீர்வும் பரிகாரமும் நவ நாடியில் அமைந்துள்ள ரேகை கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்திக்க முடியும்.
6. பஞ்சம நாடியில் வருணக்கோடு அமைந்திருந்தால் பிறந்த குழந்தைகள் அவர்கள் வளரும் காலத்தில் மற்றவர்களுக்கு உதவும் மன்ப்பாங்குடன் வளர்வார்கள்.
7. பஞ்சம நாடியில் சக்கரக்கோடு அமைந்திருந்தால் பிறந்த குழந்தைகள் அவர்கள் வளரும் காலத்தில் அவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டமும் துரதிருஷ்டமும் மாறி மாறி வரும். இதற்கு தீர்வும் பரிகாரமும் நவ நாடியில் அமைந்துள்ள ரேகை கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்திக்க முடியும்.
8. பஞ்சம நாடியில் கூர்மகோடு அமைந்திருந்தால் பிறந்த குழந்தை வளரும் காலத்தில் சுயநலம் உள்ளவர்களாகவும் மற்றவர்கள் துயரத்தில் இன்பம் காண்பவராக வாழ்வார்கள். இதற்கு தீர்வும் பரிகாரமும் நவ நாடியில் அமைந்துள்ள ரேகை கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்திக்க முடியும்.
9. பஞ்சம நாடியில் கூர்மகோடு அமைந்திருந்தால் அதிஷ்டமான மேன்மையான புத்திர யோகம் உண்டாகும்.
10. பஞ்சம நாடியில் சந்திரக்கோடு அமைந்திருந்தால் பிறந்த குழந்தைகள் வளரும் காலத்தில் அவர்கள் எதை செய்ய தொடங்கினாலும் ஆரம்பத்தில் சுபமாகவும் முடிவில் துரதிருஷ்டமாகவும் அமையும். இதற்கு தீர்வும் பரிகாரமும் நவ நாடியில் அமைந்துள்ள ரேகை கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்திக்க முடியும்.
11. பஞ்சம நாடியில் குழிமுககோடு அமைந்திருந்தால் புத்திர சாபம் ஏற்படும். இதற்கு தீர்வும் பரிகாரமும் பூர்வ நாடி மற்றும் நவ நாடியில் அமைந்துள்ள ரேகை கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்திக்க முடியும்.
12. பஞ்சம நாடியில் கருடமுக கோடு அமைந்திருந்தால் தெவீகமான குழந்தை பிறக்கும்.
13. பஞ்சம நாடியில் கோமுககோடு அமைந்திருந்தால் பிறந்த குழந்தை வளரும் காலத்தில் முன் கோபக்காரராக வளர்வார்கள். இதற்கு தீர்வும் பரிகாரமும் நவ நாடியில் அமைந்துள்ள ரேகை கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்திக்க முடியும்.
14. பஞ்சம நாடியில் கஜமுககோடு அமைந்திருந்தால் மிகவும் தெய்வீகமான மேன்மையான அதிர்ஷ்டமான குழந்தை பிறக்கும். பூர்வ சொத்து மேன்மையுடையதாக அமையும்.





சத்ரு நாடி


1. சத்ரு நாடியில் வில்வக்கோடு அமைந்திருந்தால் எதிரிகள் அடங்கிப்போவார்கள் நோய் நொடி அற்ற சர்ரிரம் அமையும்.
2. சத்ரு நாடியில் வகைக்கோடு அமைந்திருந்தால் சத்ரு ஜெயம் உண்டாகும் நோய் அற்ற சரீரம் அமையும்.
3. சத்ரு நாடியில் நாககோடு அமைந்திருந்தால் எதிரிகள் அழிந்து போவார்கள்.
4. சத்ரு நாடியில் சங்குகோடு அமைந்திருந்தால் கடன், சத்ரு பிரச்சனை, வம்பு வழக்கு, இவற்றால் அல்லல்பட நேரிடும். இதற்கு தீர்வு துதி நாடி மற்றும் விருத்தி நாடியில் அமைந்துள்ள ரேகை கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்திக்க முடியும்.
5. சத்ரு நாடியில் சூரியக்கோடு அமைந்திருந்தால் கடன்பட்டே வாழ்க்கை வீண் போய் விடும். இதற்கு தீர்வும் பரிகாரமும், துதி நாடி, விருத்தி நாடி, பஞ்சம நாடி மற்றும் தச நாடியில் அமைந்துள்ள ரேகை கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்திக்க முடியும்.
6. சத்ரு நாடியில் வருணக்கோடு அமைந்திருந்தால் மற்றவர்களுக்கு உதவி செய்தே அதன் மூலம் இவர்கள் கடன்பட்டே வீண்போய் விடுவார்கள். இதற்கு தீர்வும் பரிகாரமும், துதி நாடி, மற்றும் விருத்தி நாடியில் அமைந்துள்ள ரேகை கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்திக்க முடியும்.
7. சத்ரு நாடியில் சக்கரக்கோடு அமைந்திருந்தால் மேலும் மேலும் கடன் வாங்கி கஷ்டப்படுவார்கள். இதற்கு தீர்வும் பரிகாரமும், துதி நாடி, மற்றும் விருத்தி நாடியில் அமைந்துள்ள ரேகை கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்திக்க முடியும்.
8. சத்ரு நாடியில் கத்திரிக்கோடு அமைந்திருந்தால் கவுரவத்திற்காக கடன் வாங்கி கஷ்டப்படுவார்கள். இதற்கு தீர்வும் பரிகாரமும், துதி நாடி, மற்றும் விருத்தி நாடியில் அமைந்துள்ள ரேகை கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்திக்க முடியும்.
9. சத்ரு நாடியில் கூர்மகோடு அமைந்திருந்தால் நோயில்லா கடனில்லா வாழ்க்கை அமையும்.
10. சத்ரு நாடியில் அந்திமக்கோடு அமைந்திருந்தால் எதற்காகவும் கட்ன் வாங்க மாட்டார்கள்.
11. சத்ரு நாடியில் சந்திரக்கோடு அமைந்திருந்தால் கடன் வாங்கி அதன் மூலம் ஆரம்பத்தில் சுகமாக வாழ்வர். பின்னர் அக்கடனாலேயே கஷ்டப்படுவார்கள். இதற்கு தீர்வும் பரிகாரமும், துதி நாடி மற்றும் விருத்தி நாடியில் அமைந்துள்ள ரேகை கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்திக்க முடியும்.
12. சத்ரு நாடியில் குழிமுககோடு அமைந்திருந்தால் கடனிலேயே மூழ்கி கஷ்டப்படுவார். இதற்கு தீர்வும் பரிகாரமும், துதி நாடி மற்றும் விருத்தி நாடியில் அமைந்துள்ள ரேகை கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்திக்க முடியும்.
13. சது நாடியில் கருடமுக கோடு அமைந்திருந்தால் கடனில்லா வாழ்வும், தீர்காயுளும் உண்டாகும்.
14. சத்ரு நாடியில் கோமுக கோடு அமைந்திருந்தால் கடன்பட்டு அதனால் நோய்பட்டு கஷ்ட ஜீவனம் செய்து வாழ நேரிடும். இதற்கு தீர்வும் பரிகாரமும், துதி நாடி, பஞ்சம நாடி மற்றும் விருத்தி நாடியில் அமைந்துள்ள ரேகை கோடுகள் மூலம் அறிந்து நிவர்த்திக்க முடியும்.
15. சத்ரு நாடியில் கஜமுக கோடு அமைந்திருந்தால் நோயில்லா, கடனில்லா அதிர்ஷ்டமான வாழ்க்கை அமையும்.


தொடரும்.....



விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006,




Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

பரிஹாரங்க பைரவர் பூஜை