💥💥மஹாளய அமாவாசை- வாழ்வின் துன்பங்களை உடனடியாக மாற்றும் எளிய பரிகாரம் 💥💥
-
மஹா மந்திர போதிணி நூலில் இருந்து
நம் முன்னோர்களை-பித்ருக்களை சரிவர பூஜிக்காதது, தர்ப்பணம் கொடுக்காமல் இருப்பது போன்ற செயல்கள் மட்டுமே நாம் எத்தகைய பரிகாரங்களை செய்து வரினும், துன்பங்கள் மாறாது பெருகுவதற்கு உண்டான காரணம். அப்படி இத்தனை நாட்கள் இருந்திருப்பினும், அவை அனைத்தையும் போக்கும் வண்ணம் ஒரு பரிகாரம் உள்ளது. அவசியம் செய்து பயன் அடையவும்.
மஹாளய அமாவாசை அன்று ஐந்து தேங்காய்களை மாலையாக நூலினால் கட்டி, நீர் நிலைகள் (ஆறு,ஏறி,குளம்,கடல்) உள்ள இடத்திற்கு சென்று, பித்ருக்களை மனதார பூஜித்து, அவர்களிடம் ஆசி வேண்டி, பின், அந்த மாலையை நீர் நிலைகளில் விட்டு விடவும்- மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பின்.


எளிமையாக தோன்றினாலும், பல் வேறு அதிசயங்களை உடனுக்குடன் கொடுக்கவல்லது இந்த பரிகாரம். தேவை,பித்ருக்களிடத்தில் நெஞ்சம் நிறைந்த அன்பும், மரியாதையும் மட்டுமே.
ஆண் பெண் இரு பாலரும் செய்யலாம். இறைவன் கொடுப்பதை விட முந்தி கொண்டு நமக்கு ஆசி வழங்கும் சக்தி பெற்றோர் நம் பித்ருக்கள் என்பதனை மறந்து விட வேண்டாம்.

விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :