💥💥சனி தோஷம் நீங்க💥💥
சனி தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்? தெரிந்து கொள்ள...

தீமைகள் நீங்கி நன்மைகள் பெருகும் ஸ்ரீபைரவர் வழிபாடு !!

பைரவர் வடிவம் சத்ருக்களை அழிப்பதில் முதன்மையானது. தரும நெறிப்படி வாழும் ஒருவருக்குத் தொல்லை தருகின்ற எந்தவொரு சக்தியும் சத்ருவாகவே கருதப்பெறும். அத்தகைய சத்ருக்களை அழித்து மனிதர்களை காப்பதற்காக இறைவன் மேற்கொண்ட ஒப்பற்ற வடிவம் தான் ஸ்ரீபைரவர்.

படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களுக்கும் அதிபதியான பைரவரை வழிபடுவதன் மூலம் புகழ் சேரும், தைரியம் ஓங்கும், பகைவர் அழிவர் மற்றும் தீமைகள் நீங்கி நன்மைகள் பெருகும்.

நவகிரகங்களின் ஆளுமையினால் மனிதர்களின் வாழ்வில் இன்ப துன்பங்கள், வறுமை ஆகியன வருகின்றன என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டு உள்ளது. இந்த நவகிரகங்களின் தீய பார்வையில் இருந்து விடுபட்டு சுகமாக வாழ்வதற்கு பைரவர் வழிபாடே சிறந்த தீர்வாகும்.



நவகிரகங்களில் வலிமை மிகுந்த கிரகம் சனி, எனினும் நீதிநெறி தவறாத கிரகம். இந்த சனி கிரகத்தின் தாக்கத்தால் மக்கள் படும்பாடு சொல்லில் அடங்காது. இந்த சனி பகவான் ஆட்சி காலத்தில் மனிதர்களுக்கு துணை நின்று சனி பகவானால் ஏற்படும் துன்பங்களிலிருந்து தப்பிக்க வைத்து மக்களை காத்தருள்பவர் தான் ஸ்ரீபைரவர்.

சனி கிரகத்தின் தாக்கத்திலிருந்து தப்பித்து மனிதர்கள் மகத்தான வாழ்வு பெற ஸ்ரீபைரவரை வழிபடுங்க.

விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.

Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :