💥💥தீபாவளி பண்டிகை பற்றி சனாதன
முனிவரின் விளக்கம்💥💥
தீர்க்கதமஸ் என்ற முனிவருக்கும் ஒரு
தடவை ஒரு சிக்கல் ஏற்பட்டது. இருண்ட காட்டில் மனைவி, மக்களுடன் வசித்து வந்த அவரும், அவர் குடும்பத்தினரும் இருட்டினால்
மட்டுமல்ல, துஷ்ட மிருகங்கள், விஷ ஜந்துக்கள், அரக்கர்களாலும் பெரும்
துன்பத்திற்கு ஆளானார்கள். எனவே அந்த இடம் ஒளிமயமாக வேண்டும் என விஷ்ணுவை நினைத்து
பிரார்த்தித்தார்.
ஒருமுறை சனாதன முனிவர் அங்கு வந்தார். அவரிடம் தீர்க்கதமஸ் சந்தேகம் ஒன்றை கேட்டார். மனிதன் துன்பமாகிய இருளிலிருந்து விடுபட விரதங்களை அனுஷ்டிக்கிறான். இந்த விரதங்களும் பட்டினி, உடலை வருத்தும் தவம், நேர்ச்சை ஆகியவையாகத் தான் உள்ளன. இவை மேலும் மனிதனை துன்பப்படுத்துகின்றன. மனமகிழ்ச்சிக்கு சுலபமான வழி ஏதும் இல்லையா? என கேட்டார்.
ஒருமுறை சனாதன முனிவர் அங்கு வந்தார். அவரிடம் தீர்க்கதமஸ் சந்தேகம் ஒன்றை கேட்டார். மனிதன் துன்பமாகிய இருளிலிருந்து விடுபட விரதங்களை அனுஷ்டிக்கிறான். இந்த விரதங்களும் பட்டினி, உடலை வருத்தும் தவம், நேர்ச்சை ஆகியவையாகத் தான் உள்ளன. இவை மேலும் மனிதனை துன்பப்படுத்துகின்றன. மனமகிழ்ச்சிக்கு சுலபமான வழி ஏதும் இல்லையா? என கேட்டார்.
இதற்கு பதிலளித்த சனாதனர், தீவிர விரதங்களால் மட்டும் தான்
ஒளிமயமான பரம்பொருளைக் காணமுடியும் என நமது வேதங்கள் வழி ஏதும் வகுக்கவில்லை.
தீர்த்தமாடி, புத்தாடை உடுத்தி, இனிப்பு பண்டங்களை சாப்பிட்டு, ஏழை எளியோர்க்கும் கொடுத்து, தீபங்கள் ஏற்றி, மனம் மகிழ்ந்து கொண்டாடுவதாலும் நாம் துன்பமாகிய இருளிலிருந்து சுலபமாக விடுபடலாம் என போதித்தார். இந்த விரதத்தை எப்படி பின்பற்றுவது என்று தீர்க்கதமஸ் கேட்டார். அதற்கு சனாதன முனிவர் மிகவும் விரிவாக விளக்கினார். துலா (ஐப்பசி) மாதம் தேய்பிறையில் திரயோதசி அன்று மகாபிரதோஷ பூஜை செய்து, யமதீபம் ஏற்ற வேண்டும். எமதர்ம ராஜாவை மனதால் பிரார்த்தனை செய்து, அகாலமரணம் சம்பவிக்காமல் காக்கும்படி பிரார்த்திக்க வேண்டும்.
மறுநாள் நரக சதுர்த்தசி அன்று, நரகத்திற்கு செல்லாமல் இருக்கவும், ஏற்கனவே நரகத்தில் துன்பப்படுபவர்கள் அங்கிருந்து விடுபடவும் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும். எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புப்பண்டங்கள், தீபம், இனிப்பு மருந்து, நெருப்புப்பொறி ஆகியவற்றிற்கு பூஜை செய்ய வேண்டும்.
எண்ணெயில் லட்சுமிதேவியும், அரப்புப்பொடியில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமிதேவியும், குங்குமத்தில் கவுரியும், புஷ்பத்தில் மோகினிகளும், தண்ணீரில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்பு மருந்தில் தன்வந்திரியும், இனிப்பு பண்டங்களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும், நெருப்புப் பொறிகளில் ஜீவாத்மாவும் நமக்கு அருள்பாலிப்பார்கள். இவற்றிற்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்கினால் அனைவரும் மனம் குளிர்ந்து ஆசி வழங்கி, நம் குடும்பத்தாரை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துவருவார்கள் என்றார்.
தீர்த்தமாடி, புத்தாடை உடுத்தி, இனிப்பு பண்டங்களை சாப்பிட்டு, ஏழை எளியோர்க்கும் கொடுத்து, தீபங்கள் ஏற்றி, மனம் மகிழ்ந்து கொண்டாடுவதாலும் நாம் துன்பமாகிய இருளிலிருந்து சுலபமாக விடுபடலாம் என போதித்தார். இந்த விரதத்தை எப்படி பின்பற்றுவது என்று தீர்க்கதமஸ் கேட்டார். அதற்கு சனாதன முனிவர் மிகவும் விரிவாக விளக்கினார். துலா (ஐப்பசி) மாதம் தேய்பிறையில் திரயோதசி அன்று மகாபிரதோஷ பூஜை செய்து, யமதீபம் ஏற்ற வேண்டும். எமதர்ம ராஜாவை மனதால் பிரார்த்தனை செய்து, அகாலமரணம் சம்பவிக்காமல் காக்கும்படி பிரார்த்திக்க வேண்டும்.
மறுநாள் நரக சதுர்த்தசி அன்று, நரகத்திற்கு செல்லாமல் இருக்கவும், ஏற்கனவே நரகத்தில் துன்பப்படுபவர்கள் அங்கிருந்து விடுபடவும் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும். எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புப்பண்டங்கள், தீபம், இனிப்பு மருந்து, நெருப்புப்பொறி ஆகியவற்றிற்கு பூஜை செய்ய வேண்டும்.
எண்ணெயில் லட்சுமிதேவியும், அரப்புப்பொடியில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமிதேவியும், குங்குமத்தில் கவுரியும், புஷ்பத்தில் மோகினிகளும், தண்ணீரில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்பு மருந்தில் தன்வந்திரியும், இனிப்பு பண்டங்களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும், நெருப்புப் பொறிகளில் ஜீவாத்மாவும் நமக்கு அருள்பாலிப்பார்கள். இவற்றிற்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்கினால் அனைவரும் மனம் குளிர்ந்து ஆசி வழங்கி, நம் குடும்பத்தாரை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துவருவார்கள் என்றார்.
தீபாவளி அன்று எமனுக்கு தர்ப்பணம் செய்யும் வழக்கம்
இன்றும் சிலரால் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் பின்னால் ஒரு சுவாரசியமான புராண
காரணம் இருக்கிறது.
தீபாவளி அன்று எமனுக்கு தர்ப்பணம்
செய்யும் வழக்கம் இன்றும் சிலரால் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் பின்னால் ஒரு
சுவாரசியமான புராண காரணம் இருக்கிறது.
அமுதத்துக்காக தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர். திருமால் மோகனி அவதாரம் செய்து, தேவர்களுக்கு அமுதத்தை அளித்தார். இதை உணர்ந்த அசுரர்கள், மகாலட்சுமியை சிறைப்பிடிக்க முனைந்தனர். அவர்களது திட்டத்தை முன்பே அறிந்து யமன், அன்னையிடம் சொல்லி, எச்சரிக்கை செய்தார்.
அமுதத்துக்காக தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர். திருமால் மோகனி அவதாரம் செய்து, தேவர்களுக்கு அமுதத்தை அளித்தார். இதை உணர்ந்த அசுரர்கள், மகாலட்சுமியை சிறைப்பிடிக்க முனைந்தனர். அவர்களது திட்டத்தை முன்பே அறிந்து யமன், அன்னையிடம் சொல்லி, எச்சரிக்கை செய்தார்.
அதனால் அசுரர்கள் அங்கு வருமுன்
அன்னை லட்சுமி, விளக்கில் இருந்த எண்ணெயில் மறைந்து கொண்டாள். பிறகு மகாவிஷ்ணு
வந்து அசுரர்களை வதம் செய்து அன்னையைக் கரம் பிடித்தார். கல்யாணக் கோலத்தில்
காட்சி அளித்த லட்சுமி நாராயணரை யமனும் வணங்கினான்.
மனம் மகிழ்ந்த மகாலட்சுமி, ‘இன்று உன்னை நினைத்து தர்ப்பணம் செய்பவர்களின் வீடுகளில் உள்ளவர்களுக்கு செல்வத்துக்கு எந்தக் குறைவும் ஏற்படாது. அதோடு அவர்களை நீ என் உத்தரவின்றி பிடிக்கவும் கூடாது’ என்றாள். அன்று முதல் தீபாவளியன்று யம தர்ப்பணம் செய்வதும், அன்னை மகாலட்சுமியை வணங்குவதும் வழக்கமாயின.
மனம் மகிழ்ந்த மகாலட்சுமி, ‘இன்று உன்னை நினைத்து தர்ப்பணம் செய்பவர்களின் வீடுகளில் உள்ளவர்களுக்கு செல்வத்துக்கு எந்தக் குறைவும் ஏற்படாது. அதோடு அவர்களை நீ என் உத்தரவின்றி பிடிக்கவும் கூடாது’ என்றாள். அன்று முதல் தீபாவளியன்று யம தர்ப்பணம் செய்வதும், அன்னை மகாலட்சுமியை வணங்குவதும் வழக்கமாயின.
தீபாவளி நல்வாழ்த்துகள் !
Comments
Post a Comment