💥💥இன்று ஓர் ஆலயம்💥💥

🔥🔥அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில்🔥🔥
சுவாமி : இம்மையிலும் நன்மை தருவார்.
அம்பாள் : மத்தியபுரி நாயகி.
மூர்த்தி : சோமாஸ்கந்தர்.
தீர்த்தம் : ஸ்ரீபுஷ்கரிணி.
தலவிருட்சம் : தசதள வில்வம்.
தலச்சிறப்பு : இத்தல லிங்கம் மேற்கு பார்த்த நிலையில் உள்ளது.  லிங்கத்திற்கு பின் சிவனும் பார்வதியும் அமர்ந்த கோலத்தில் உள்ளனர்.  இத்தலம் பூலோக கைலாயம் என வழங்கபடுகிறது.
தல வரலாறு : மதுரையை ஆண்ட மலையத்துவஜனின் மகளாகப் பிறந்த மீனாட்சியை,  சிவபெருமான் மணந்து கொண்டார்.  பின்னர் மதுரையில் மன்னராக பொறுப்பேற்றார்.   எந்த செயலையும் செய்யும் முன்பு சிவலிங்க பூஜை செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.  

எனவே ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து, அதற்கு பூஜித்த பின்பு பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.  இந்த வரலாற்றின் அடிப்படையில் இங்கு சிவன், லிங்கத்தை பூஜிக்கும் அமைப்பில் காட்சி தருகிறார்.  இப்பிறப்பில் செய்யும் பாவங்களுக்கு இனி வரும் பிறவிகளில் தான் மன்னிப்பு கிடைக்கும் என்பது பொதுவான வாதம்.  ஆனால், இப்பிறப்பிலேயே செய்த பாவங்களை மன்னித்து நன்மை தருபவராக அருளுவதால் இவர், "இம்மையிலும் நன்மை தருவார்" என்று அழைக்கப்படுகிறார். 
நடைதிறப்பு : காலை 6.15 மணி முதல் 11.30 மணி வரைமாலை 4.30 மணி முதல் இரவு மணி  9.30 வரை திறந்திருக்கும்.
திருவிழாக்கள் : மாசியில் பிரம்மோற்ஸவம், வைகாசி விசாகம், ஆவணியில் சிவன் பூஜை,  சிவராத்திரி, திருக்கார்த்திகை.
அருகிலுள்ள நகரம் : மதுரை.
கோயில் முகவரி : அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில்,
மேலமாசி வீதி, மதுரை - 625 001.

விஜய் சுவாமிஜி,
செல் :+91 9443351497 , 9842499006.

#அருள்மிகுஇம்மையிலும்நன்மைதருவார்திருக்கோயில்மதுரை



Comments

Popular posts from this blog

பைரவர பகவான் மந்திரங்கள்

பைரவர் காவியம்

நவ பைரவர் அவர்களது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள் :