ஸ்தல வரலாறு:
ஸ்தல வரலாறு:
பண்டரீக மகரிஷி பெருமாள் கோவில்களுக்கு யாத்திரை சென்றார். நாராயண சதுர்வேதி என்னும் தலத்தில் அவர் நுழைந்ததும், அங்கு சிவலிங்கம் இருப்பதைப் பார்த்தார். பெருமாள் கோவிலுக்கு சிவாலயத்துக்குள் வந்துவிட்டோமே என வெளியே வந்தபோது, சிவன் ஒரு முதியவர் வேடத்தில், ரிஷியே! நீங்கள் உள்ளே சென்று வந்தது பெருமாள் சன்னதி தான் என்றார்.
ரிஷியோ மறுத்தார். முதியோர் மறுபடியும் ரிஷியை மூலஸ்தானத்திற்குள் அழைத்து சென்று, அங்கிருந்த ஆவுடையின் மேல் ஏறி பெருமாளாக பிரசன்னமாகி தரிசனம் தந்து, சிவன் வேறு, விஷ்ணு வேறு கிடையாது. இரண்டும் ஒன்று என்றார். அத்துடன், அமர்ந்த கோலத்திலும் கிடந்த கோலத்திலும் தரிசனம் தந்து, ரிஷியே! உங்களால் திருப்பாற்கடல் சென்று இந்த மூன்று கோலங்களிலும் தரிசிக்க இயலாது என்பதால் இங்கேயே அதை தருகிறேன்.
உங்களுக்கு இந்த மூன்று கோலங்களையும் இங்கு காண்பித்ததால், இத்தலமும் இன்று திருப்பாற்கடல் என அழைக்கப்படும், என்று அருளினார். புண்டரீக மகரிஷிக்காக பெருமாள் பிரச்சந்ன (தோன்றுதல்) இங்குள்ள பெருமாள் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் ஆனார். இவருடன், அலர்மேலு தாயார் அருள் செய்கிறாள்.
சிறப்பம்சம்:
சந்திரபகவான் ஒரு சாபத்தினால், இருளடைந்து இருந்தான். இதனால், அவனது மனைவி ஒருத்தியான, திருவோண நட்சத்திரதேவி மிகவும் வருத்தம் அடைந்தாள். அவள் இத்தலத்தின் பெருமை அறிந்து இங்குள்ள பெருமாளை வேண்டி தவமிருந்தாள். இவளது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள், ஒருமுறை நாளில் சந்திரனுக்கு காட்சி தந்து அவனது தோஷத்தை போக்கினார்.
அன்றிலிருந்து இத்தலம் திருவோண நட்சத்திர தலமானது. திருவோணம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டியது பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில். திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ பிறையன்றோ இத்தல பெருமாளுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் நினைத்தது நடக்கும்.
மாணவர்களுக்கு கல்வி அறிவு வளரும். திருவோணம் பெருமாளுக்குரிய நட்சத்திரம் என்பதால், இந்த நட்சத்திரத்தினர் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.
போக்குவரத்து வசதி:
வேலூரில் இருந்து சென்னை செல்லும் வழியில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காவேரிபாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கிலோ மீட்டர் சென்றால் திருப்பாற்கடலை அடையும். இவ்வூரில் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவில் உள்ளது என்கிறார் விஜய் சுவாமிஜி.
இந்த கோயிலுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து பஸ் வசதியும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் வசதியும் உள்ளது. முதலில் வேலூர் சென்று பின் அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்.
Comments
Post a Comment